Friday, October 08, 2021

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்


நண்பர் IG சேகர் அனுப்பிய படம்


கொஞ்சுமொழி பேசும் மஞ்சள் நிறக்கிளியே!

அன்பாய் வணக்கத்தைக் கொண்டுவந்தே சேர்த்துவிட்டாய்!

நன்றி நவில்கின்றேன்

நண்பரின் நட்பிற்கு!

வண்டமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.


இந்தக் கவிதையைக் கேளேன்:


புரியாத கூட்டம்!


கூட்டமாய் நின்றிருந்தார்! கூட்டத்தில் சென்றுநின்றேன்!

கூட்டத்தார் வானத்தைப் பார்த்திருந்தார்! பார்த்தேன்நான்!

கேட்டேன்நான் வானிலென்ன? எல்லோரும் பார்க்கின்றார்!

நாங்களும் பார்க்கின்றோம் என்றேதான் சொன்னார்கள்!

வானத்தைப் பார்த்தவாறு நானும் நகர்ந்துவிட்டேன்!

பார்த்தவர்க்கும் ஒன்றும் புரியவில்லை? ஆனாலும் 

பார்த்தனர் கூட்டத்தில் நின்று.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home