Tuesday, January 04, 2022

இல்லறம் பலியாடு!

 இல்லறம் பலியாடு!


ஆட்டைக் குளிப்பாட்டி மஞ்சள்நீர் ஊற்றிவிட்டு

சூட்டுகின்ற மாலையுடன் ஊர்வலம் சென்றிடுவார்!

மேடையில் நிற்கவைப்பார்! ஆடும் மகிழ்ந்திருக்கும்!

போடென்று வெட்டரிவாள் கொண்டே பலிகொடுப்பார்!

தீனிபோட்டுப் பார்த்திருந்த ஆட்டைப்போல் இல்லறத்தை

ஏனோ பலியாடாய் நிற்கவைத்துப் பார்க்கின்றாய்!

காலமே! சோதனையேன் கூறு?


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home