Saturday, March 28, 2026

குறுந்தொகை 7

 

குறுந்தொகை

பாடல். 7-- பெரும்பதுமனார், 

வில்லோன் காலன கழலே, தொடியோள்

மெல்அடி மேலன சிலம்பே; நல்லோர் 

யார் கொல்? அளியர் தாமே- ஆரியர்

கயிறுஆடு பறையின்,கால்பொரக் கலங்கி,

வாகை வெண் நெற்று ஒலிக்கும்

வேய் பயில் அழுவம் முன்னி யோரே.

----------------------------------------------------------------------------------------------------------------

வில்லேந்தி,காலில் கழலணிந்து செல்கின்றான்!

மெல்லியலாள் கைவளையல் காற்சிலம்பும் பூண்டுள்ளாள்!

இவ்விருவர்  யாரோ? கயிற்றில் நடக்கின்ற 

துள்ளல்  கழைக்கூத்தில்  ஊக்கப் பறையடிப்பார்!

அவ்வொலிபோல் வாகை விதைக்கூடு காற்றிலே

துள்ளும் ஒலிகேட்கும் மூங்கில் நிறைந்திருக்கும்

பல்லச்சக் காட்டில் நடந்துவரும் இவ்விணையர்

எவ்வூரோ? யாரோதான்? சொல்.

0 Comments:

Post a Comment

<< Home