பெண்வழிச் சேறல்) 91
திருக்குறள் குழந்தைப் பாடல்
----------------------------------------------------------------
கவர்சிக்கு அடிமையாதல்
--------------------------------------------------------------
(பெண்வழிச் சேறல்) 91
----------------------------------------------------------------
கவர்சிக்கு மயங்காதே கடமையை மறக்காதே!
---------------------------------------------------------------
கவர்ச்சியைக் கண்டு மயங்காதே!
கடமையைச் செய்ய மறக்காதே!
பெருமையைக் காக்க மறந்துவிட்டால்
சான்றோர் முன்னே தலைகுனிவோம்!
பணியும் நேரம் பணிந்துவிடு!
துணியும் நேரம் துணிந்துவிடு!
நாளை வருவதற் கஞ்சாதே!
இன்றைய முயற்சியில் வெற்றிபெறு!
அஞ்சி அஞ்சி வாழ்பவர்கள்
நல்லதைச் செய்யவும் அஞ்சிடுவார்!
வீணாய்ப் பொழுதைக் கழிக்காதே
அற்ப னாக மாறாதே!
தீமைக் கடிமை யாகாதே!
பெருமை இழந்தே தவிக்காதே!
கவர்ச்சியை விரும்பி வாழ்பவர்கள்
நற்பணி என்றும் செய்வதில்லை!
ஆணவத் திற்கு அஞ்சாதே!
நிதானந் தன்னை இழக்காதே!
சிந்தனை ஆற்றல் கொண்டவர்கள்
அறியா மையில் வாழ்வதில்லை!
மதுரை பாபாராஜ்

0 Comments:
Post a Comment
<< Home