வரைவின் மகளிர் -- 92
திருக்குறள் குழந்தைப் பாடல்!
--------------------------------------------------------------
வரைவின் மகளிர் -- 92
சலனம் இழிவு
--------------------------------------------------------------
சலனம் மாந்தருக்கு மாசு!
---------------------------------------------------------------
வேடம் ஏந்தும் இனியசொற்கள்
வேதனை தந்து துயர்தருமே!
வளத்தைக் கணித்துப் பழகுகின்ற
எண்ணம் கொண்ட மாந்தரிடம்
உறவை வளர்த்தல் தீதாகும்!
செல்வம் ஒன்றே குறியாக
பழகுவோர் பழக்கம் இருட்டறையில்
பிணத்துடன் உள்ளது போலாகும்!
பொருளை நாடி உறவாடும்
இன்பம் எல்லாம் இன்பமல்ல!
அருளை நாடும் அறிவாளர்
உள்ளம் இதனை ஏற்காது!
ஆற்றல் செறிந்த அறிவுடையார்
ஈனத் தனத்தை விரும்பமாட்டார்!
ஒழுக்கம் நிறைந்த சான்றோர்கள்
பாதை தவறி நடப்பதில்லை!
மனத்தை அடக்க முடியாதோர்
மனிதத் தன்மை இழந்திடுவார்!
வஞ்சகந் தன்னைப் புரியாமல்
மயங்கித் திரியும் அற்பனுக்கு
கண்டவை எல்லாம் இன்பமாகத்
தெரியும் அனலில் புழுவாவான்!
ஒழுக்கம் மறந்தோர் பாதையிலே
நடப்பது வாழ்வின் நரகமாகும்!
தீய ஒழுக்கம் சூதாட்டம்
மயக்கம் ஏற்றும் கள்ளினங்கள்
இந்த மூன்றும் தீயவர்கள்
விரும்பிப் போற்றும் நட்பினமாம்

0 Comments:
Post a Comment
<< Home