Saturday, December 13, 2008

மாண்புமிகு அப்துல் கலாம்

தீவுக்குள் பிறந்தேதான்
வளர்ந்தவரைக் காலமின்று
தீபகற்பக் குடியரசுத்
தலைவராக்கி மகிழ்கிறது!
பாவினத்தால் பாவலர்கள்
பாடுபொருள் ஆக்கித்தான்
பலவாறாய் வாழ்த்துகின்றார்!
தமிழினமே நிமிர்கிறது!


அறிவியலின் ஆக்கபூர்வ ஆற்றல் மிளிர
அறிவார்ந்த விஞ்ஞானி யாகி -- முறையாகப்
பல்வேறு சாதனைகள் பார்போற்ற நாட்டியவர்!
தொல்லுலகில் நம்நாட்டின் சொத்து.

தனிமனித நல்லொழுக்கம் தங்கித் தழைக்க
மனிதநேய எண்ணம் மணக்க --அனைத்துமத
நல்லிணக்கம் வேரூன்ற நாளும் உழைக்கின்றார்!
தெள்ளுதமிழ் வாழ்த்தும் திளைத்து.

அணுகுண்டுச் சோதனையால்
வியக்கவைக்கும் சாதனை
அணுவளவும் செருக்கின்றி
சாதித்த அடலேறு!
அணுகுமுறை வேறுபட்டு
இந்தியாவைச் சீண்டுகின்ற
அகங்காரப் பகையினத்தை
எச்சரிக்கும் தேவதாரு!

மகுடத்தைத் தேடும் மனிதருண்டு நாட்டில்!
மகுடங்கள் தேடிவரும் மாமனிதர் இந்த
மகத்தான வித்தகர்தான்! வண்டமிழ்போல் வாழ்க!
மகத்துவத்தைப் பாடு மகிழ்ந்து!

மதுரை பாபாராஜ்
2004
கவிமாமணி சி.வீரபன்டியாத்தென்னவன் வெளியிட்ட
கவிஞர் போற்றும் காவிய நாயகன் அப்துல்கலாம் என்ற
நூலில் வெளிவந்த கவிதை.

0 Comments:

Post a Comment

<< Home