Thursday, January 07, 2021

66 வினைத்தூய்மை

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

66 வினைத்தூய்மை

குறள் 651:


துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்

வேண்டிய எல்லாந் தரும்.


நல்ல துணையிருந்தால் ஊக்கம் பெருகிவரும்!

நற்செயல்கள் நன்மை தரும்.

குறள் 652:

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு

நன்றி பயவா வினை.


நன்மை, புகழ்தராத எந்தச் செயலையும்

என்றும் புறக்கணித்தல் நன்று.

குறள் 653:

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை

ஆஅது மென்னு மவர்.


உயரவேண்டும் என்றெண்ணி வாழ்வோர் செயலில்

களங்கமின்றிப் பார்த்தல் சிறப்பு.

குறள் 654:

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்

நடுக்கற்ற காட்சி யவர்.


தெளிவும் அறிவும் உடையவர்கள் என்றும்

இழிசெயல் செய்யார் உணர்.

குறள் 655:

எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்

மற்றன்ன செய்யாமை நன்று.


வருந்தவைக்கும் எச்செயலும் செய்யாதே! செய்தால்

மறுபடியும் செய்தல் தவிர்.

குறள் 656:

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க

சான்றோர் பழிக்கும் வினை.


துடிக்கின்ற தாயின் பசிதணிக்க, சான்றோர்

பழிக்கும் செயல்செய்யா  தே.

குறள் 657:

பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர்

கழிநல் குரவே தலை.


பழிவழி வந்தசொத்தில் வாழ்வதினும் சான்றோர்க்

கிழிவான ஏழ்மையே மேல்.

குறள் 658:

கடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதாம்

முடிந்தாலும் பீழை தரும்.


தகாத செயல்களைச் செய்தால் செயல்கள்

தொடர்ச்சியாய்த் துன்பம் தரும்.

குறள் 659:

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்

பிற்பயக்கும் நற்பா லவை.


அழவைத்துச் சேர்த்தால் அழவைத்தே போய்விடும்! நல்ல

வழிவந்தால் மீண்டும் வரும்.

குறள் 660:

சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்

கலத்துணீர் பெய்திரீஇ யற்று.


தீயவழிச் செல்வம் நிலைக்காது! பச்சைமண்

பானையில் நீரூற்றி சேமித்தல் போலாகும்!

நேர்வழிச் செல்வமே நன்று









 

















0 Comments:

Post a Comment

<< Home