Tuesday, September 07, 2021

பீபியம்மாள்


நூல் பெண்ணே பேராற்றல்!


2. பீபியம்மாள்


விடுதலைப் போராட்ட தீவிர பக்தை!

விடுதலைப்போர் மற்றும் கதராடை பற்றி

எடுத்துரைக்க மேலும் நிதிதிரட்டும் வண்ணம்

மிடுக்கான பங்களாவுக்கு வந்தபோது மக்கள்

கொடுத்த வரவேற்போ அற்புத மாகும்!

இளையான் குடியின் எழுச்சிப் பகுதி

நிலையாகும்! தென்காசி சென்று நதியைத்

திரட்டினார்! அன்னாரின் பூத உடலைக்

கதராடை சுற்றியே நல்லடக்கம் செய்தார்!

குணவதியாய் வாழ்ந்த கொழுந்து.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home