Saturday, October 16, 2021

கவிஞர் மெய்ஞானி பிபாகர பாபு அவர்களுக்கு வாழ்த்து

 

கவிஞர் மெய்ஞானி பிரபாகர பாபு அவர்களுக்கு வாழ்த்து


🌷நீள்நிலம் உனதே! 🌷

அறிவில் சிறப்போரே ஆற்றல் பெறுவார் 
நெறியில் பிறழாது நிற்பார் - திறனுடன் 
ஆள்வினை ஓங்கி அருங்கல்வி பெற்றிடில் 
நீள்நிலம் யாவும் நினக்கு.

கவிஞர் மெய்ஞானி

மெய்ஞானி நெய்யும் கவிதைகள் எல்லாமே
மெய்சிலிர்க்க வைக்கும் கருத்திலே ஒன்றவைத்தே!
துய்த்தேன்! ரசித்தேன்! படித்தேன் பருகினேன்!
பொய்யில்லை மெய்சொன்னேன் நான்.

மதுரை பாபாராஜ்
நன்றி.🙏🙏


கவிஞர், பாடலாசிரியரின் பாராட்டு மனத்தை நிறைத்தது.
வெண்பாவின் ஒவ்வொரு வரியும் கனித்துண்டுகளாக இனிக்கின்றன.
இறுதி வரி கற்கண்டு.
நெஞ்சம் நெகிழ்ந்த நன்றி.🙏🙏

Meignani prabhakarababu:

கவிஞர் மெய்ஞானி பிரபாகர
பாபு

0 Comments:

Post a Comment

<< Home