குறுந்தொகை 102
குறுந்தொகை
பாடல் 102
நெய்தல் தலைவி கூற்று
தனிமைத் துயரம்!
பாடலாசிரியர்:
ஔவையார்
உள்ளின் உள்ளம் வேமே உள்ளா
திருப்பினெம் அளவைத் தன்றே வருத்தி
வான்றோய் வற்றே காமம்
சான்றோர் அல்லர்யாம் மரீஇ யோரே.
----------------------------------------------------------------------------------------------
தோழி! பிரிந்திருக்கும் எந்தன் தலைவரை
ஆவி துடிக்க நினைக்கத் தூண்டியதும்
வேவத் தொடங்கிவிடும் உள்ளம்! நினைக்காமல்
வாழலாம் என்றாலோ காமநோய் வானத்தைத்
தோய்ப்பது போல வளர்கிறதே! இத்தகைய
தீங்கை விதைப்பவர் நற்குணம் கொண்டவரா?
ஏங்கித் தவிக்கின்றேன் நான்.
வேவம்-- துன்பம்,தனிமை

0 Comments:
Post a Comment
<< Home