Sunday, March 29, 2026

குறுந்தொகை 97

 குறுந்தொகை

பாடல் 97

பாடலாசிரியர்:வெண்பூதியார்


யானே ஈண்டை யேனே யென்னலனே

ஆனா நோயொடு கான லஃதே

துறைவன் தம்மூ ரானே

மறையல ராகி மன்றத் தஃதே.

-----------------------------------------------------------

தோழியே! என்னைத் தனிமைநோய்த் துன்புறுத்த

ஆழியில் துள்ளும் துரும்பாக ஆகிவிட்டேன்!

ஆவி அவனையே தேடுதடி  கானலிடம்!

பாவியோ பெற்றோ ருடனே மகிழ்ந்துள்ளான்! 

கூவித் துடிக்கவைக்கும் அந்தக் களவுறவு

ஊரலராய் மாறியதே! இன்னும் வரவில்லை!

சோர்ந்தே தவிக்கின்றேன் நான்.


0 Comments:

Post a Comment

<< Home