Sunday, March 29, 2026

குறுந்தொகை 88

குறுந்தொகை

 நாணமாட்டேன்!

பாடல் 88

தலைவி்தோழியிடம்

பாடலாசிரியர் :

மதுரைக் கதக்கண்ணனார்


ஒலிவெள் ளருவி ஓங்குமலை நாடன்

சிறுகண் பெருங்களிறு வயப்புலி தாக்கித்

தொல்முரண் சோருந் துன்னருஞ் சாரல்

நடுநாள் வருதலும் வரூஉம்

வடுநா ணலமே தோழி நாமே.

-----------------------------------------------------------------------------------------

வெள்ளருவி வீழ்கின்ற நாடன் தலைவன்தான்!

துள்ளும் புலியோ களிறொன்றைத்  தாக்குவதால்

வல்லமை தேய்ந்தேதான் சோர்வுற்றே நின்றிருக்கும்!

அவ்வழியே நம்தலைவன் நாடி வருகின்றான்!

நள்ளிரவு நேரம்! பயப்படாமல் தேடிவந்து

நல்லின்பம் ஈவான்! பழிநமக்கு வந்தாலும்

எள்ளளவும் நாணமாட்டேன் நான்.


0 Comments:

Post a Comment

<< Home