Sunday, March 29, 2026

குறுந்தொகை 92

 குறுந்தொகை

தலைவியின் வேதனை

 பாடல் 92


பாடலாசிரியர்:தாமோதரனார்


ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து

அளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை

இறையுறை வோங்கிய நெறியயல் மராஅத்த

பிள்ளை யுள்வாய்ச் செரீஇய

இரைகொண் டமையின் விரையுமாற் செலவே.

-------------------------------------------------------------

மயக்கம் தருகின்ற மாலைப் பொழுது!

இரையை அலகிலே தாய்ப்பறவை கவ்வி

விரைந்துவந்தே சேய்ப்பறவை வாயிலே ஊட்டி

விரைந்தது! மீண்டும் இரைதேடி வானில்!

பிரிந்துசென்ற அன்பர் பறவைபோல் வந்து

தரிசனம் தந்துவிட்டுப்  போனால் மகிழ்வேன்!

வரவில்லை! ஏக்கத்துடன் நான்.


0 Comments:

Post a Comment

<< Home