Sunday, March 29, 2026

குறுந்தொகை 94

 குறுந்தொகை

பாடல்: 94

பாடலாசிரியர்:

கதக்கண்ணனார்


பெருந்தண் மாரிப் பேதைப் பித்திகத்து

அரும்பே முன்னும் மிகச்சிவந் தனவே

மானே மருள்வேன் தோழி பானாள்

இன்னுந் தமியர் கேட்பிற் பெயர்த்தும்

என்னா குவர்கொல் பிரிந்திசி னோரே

அருவி மாமலை தத்தக்

கருவி மாமழைச் சிலை தருங் குரலே

---------------------------------------------------------------------------------------------------------

தோழியே! பிச்சி அரும்பு மலரோ சிவந்திருக்கும்

காட்சிகண்டே கார்காலம் வந்தும் தலைவனோ

காட்சி தரவில்லை என்றே மயங்குகிறேன்!

ஊற்றெடுக்கும் பேரருவி மேலே முழங்குகின்ற

வான்மேக ஓசையினை நள்ளிரவில் என்தலைவன்

கேட்டால் பிரிவுத் துயரில் படும்பாடோ

யாதென்றே ஏங்குகிறேன் நான்.


0 Comments:

Post a Comment

<< Home