குறுந்தொகை 98
குறுந்தொகை
பாடல் 98
பாடலாசிரியர்:
கோக்குள முற்றனார்
இன்ன ளாயினள் நன்னுதல் என்றவர்த்
துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே
நன்றுமன் வாழி தோழிநம் படப்பை
நீர்வார் பைம்புதற் கலித்த
மாரிப் பீரத் தலர்சில கொண்டே.
-------------------------------------------------------------------------------------------
கார்காலம் வந்து படர்கொம்பைப் பற்றித்தான்
பீர்க்கம்பூ வந்தாச்சு! என்தலைவன் காணோமே!
ஆர்வமுடன் தோழியே! பூவைப் பறித்தெடுத்தே
சேயிழை நானோ படர்கொம்பு நாயகனை
ஆவலுடன் தேடுகிறேன் என்றுசொல்லி இங்கொருவர்
பாவைக்( கு) உதவுவாரோ? சொல்.

0 Comments:
Post a Comment
<< Home