குறுந்தொகை 103
குறுந்தொகை
பாடல் 103
பாடலாசிரியர்
வாயிலான் தேவனார்
கடும்புனல் தொகுத்த நடுங்கஞர் அள்ளல்
கவரிதழ் அன்ன தூவிச் செவ்வாய்
இரைதேர் நாரைக் கெவ்வ மாகத்
தூஉந் துவலைத் துயர்கூர்
வாரார் போல்வர்நங் காதலர்
வாழேன் போல்வல் தோழி யானே.
--------------------------------------------------------------------------------------------------------
தோழி! முருக்கம்பூ செவ்வண்ண வாய்நாரை
ஆவி துடிக்க நடுங்கியே சேற்றுக்குள்
தூவித் துளாவி இரைதேடும்! வாடையோ
தூவுகின்ற நீர்த்திவலை பட்டுத் தெறித்திருக்கும்!
ஈவிரக்கம் இல்லா தலைவர் வரமாட்டார்!
சேயிழையின் இன்னுயிர் தங்குமோஎன் மேனியில்?
நேரிழையை ஏங்கவைத்தார் பார்.

0 Comments:
Post a Comment
<< Home