குறுந்தொகை 104
குறுந்தொகை
பாடல் 104
பாடலாசிரியர்:
காவன் முல்லைப்பூதனார்
அம்ம வாழி தோழி காதலர்
நூலறு முத்தின் தண்சிதர் உறைப்பத்
தாளித் தண்பவர் நாளா மேயும்
பனிபடு நாளே பிரிந்தனர்
பிரியும் நாளும் பலவா குபவே.
--------------------------------------------------------------------------------------
தோழி! உருண்டோடும் முத்து மணிகள்போல்
தூவும் பனித்துளிகள் வீழ்வதுபோல் காட்சிதரும்
பூவின காலைப் பொழுதிலே பூங்கொடியை
ஆவினங்கள் மேயுதடி! அக்காலம் என்தலைவன்
ஈவிரக்கம் இன்றிப் பிரிந்தேதான் சென்றுவிட்டார்!
சேயிழை தாங்குவேனோ? செப்பு

0 Comments:
Post a Comment
<< Home