குறுந்தொகை 107
குறுந்தொகை
பாடல் 107
பாடலாசிரியர்:
மதுரைக் கண்ணனார்
குவியிணர்த் தோன்றி ஒண்பூ வன்ன
தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல்
நள்ளிருள் யாமத் தில்லெலி பார்க்கும்
பிள்ளை வெருகிற் கல்கிரை யாகிக்
கடுநவைப் படீஇயரோ நீயே நெடுநீர்
யாணர்ஊரன் தன்னொடு வதிந்த
ஏம இன்துயில் எடுப்பி யோயே.
------------------------------------------------------------------------------------------------------
நள்ளிரவில் நானோ கணவனுடன் தூங்கினேன்!
மெய்மறந்த தூக்கத்தைச் சேவலே! நீயிங்கே
துல்லியமாய்க் கூவி எழுப்பிவிட்டாய்! இங்குமங்கும்
துள்ளி எலியை இரையாக்கத் தேடுகின்ற
இல்லத்துப் பூனைக்கே நீயோ இரையாவாய்!
உள்ளத்தால் சாபமிட்டேன் போ.
தலைமகள் தோழிக்குக் கூறியது

0 Comments:
Post a Comment
<< Home