Sunday, March 29, 2026

குறுந்தொகை 109

 குறுந்தொகை

பாடல் 109

தோழியின் கூற்று,!

பாடலாசிரியர்:

நம்பி குட்டுவனார்


முட்கால் இறவின் முடங்குபுறப் பெருங்கிளை

புணரி இகுதிரை தரூஉந் துறைவன்

புணரிய இருந்த ஞான்றும்

இன்னது மன்னோ நன்னுதற் கவினே.

--------------------------------------------------------------------------------------------------------

வளைவான காலும் வளைந்த முதுகும்

அழகைப் பறைசாற்ற நீந்தும் இறால்மீன்

வளங்கொண்ட நாட்டிலே மீனவன், அன்பன்!

கலந்து பழகினாலும்  என்தலைவி வாடும்

நிலைதந்தே இங்கே பிரிவான்! அழகு

மிளிர்கின்ற நெற்றி பிரிவுத் துயரால்

ஒளியிழந்த கோலத்தைப் பார்.


முல்லைத்திணை- தலைவி கூற்று

0 Comments:

Post a Comment

<< Home