குறுந்தொகை 110
குறுந்தொகை
பாடல் 110
பாடலாசிரியர்: கிள்ளிமங்கலங்கிழார்
வாரார் ஆயினும், வரினும், அவர் நமக்கு
யார் ஆகியரோ தோழி! நீர
நீலப் பைம் போது உளரி, புதல
பீலி ஒண் பொறிக் கருவிளை ஆட்டி,
நுண் முள் ஈங்கைச் செவ் அரும்பு ஊழ்த்த
வண்ணத் துய்ம் மலர் உதிர, தண்ணென்று
இன்னாது எறிதரும் வாடையொடு
என் ஆயினள்கொல் என்னாதோரே?
--------------------------------------------------------------------------------------------------
மயில்தோகைக் கண்போல் கருவிளைப் பூவோ
எழிலாய்ப் பூத்திருக்க காற்றுவீசி நீரில்
மலர்ந்துள்ள மலரை உலுக்கியே ஆட்ட
வளர்ந்துள்ள ஈங்கைச் செடியில் உதிர
குளிர்ச்சியான காற்றோ கொடுமை புரிய
மலரன்ன நான்படும் பாட்டைத் தலைவன்
உளத்திலே எண்ணாமல் வாழ்கின்ற அந்தத்
தலைவனோ வந்தால்தான் என்ன? வராமல்
அலைந்தால்தான் என்ன எனக்கு?
------------------------------------------------------------------

0 Comments:
Post a Comment
<< Home