Saturday, March 28, 2026

குறுந்தொகை 16

 

குறுந்தொகை

பாடல் 16 

பாடியவர் சேர மன்னன் பாலை பாடிய பெருங்கடுங்கோ – 


உள்ளார் கொல்லோ தோழி, கள்வர்

பொன் புனை பகழி செப்பம் கொண்மார்

உகிர் நுதி புரட்டும் ஓசை போலச்

செங்கால் பல்லி தன் துணை பயிரும்,

அம் கால் கள்ளியங் காடு இறந்தோரே?

---------------------------------------------------------------------------------------------

தலைவியே!

தலைவர் உன்னை நினைப்பாரோ!

இரும்பினால் செய்த அம்புகளின்

கூர் முனையை

கள்வர்கள் தங்கள்

நகமுனையால் உரசும்பொழுது

உண்டாகும் ஓசையைப்போல

பல்லி 

தன் துணையை அழைக்கும்

ஒலியெழுப்பும்

கள்ளிச்செடி நிறைந்த

காட்டுவழி சென்ற தலைவர்

உன்னை நினைப்பாரோ?

நாணாமல் சொல்!


0 Comments:

Post a Comment

<< Home