குறுந்தொகை 19
குறுந்தொகை
பாடல் 19
பாடியவர் பரணர்
எவ்வி இழந்த வறுமையாழ்ப் பாணர்
பூவில் வறுந்தலை போலப் புல்லென்
றினைமதி வாழியர் நெஞ்சே மனைமரத்
தெல்லுறு மௌவல் நாறும்
பல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே.
-------------------------------------------------------------------------------
அருமை மனமே!
மனையில் மலர்ந்து மணம்பரப்பும்
ஒளிவீசும் முல்லைப்பூ
அணிசெய்யும் கூந்தல்மணக்கும்
தலைவி மாறுபட்டு நடக்கின்றாள்!
மூன்றாம் மனிதிபோல
கண்டும் காணாதவளாக
இருக்கின்றாள்!
எவ்வி என்ற வள்ளல்
வறுமையில் சிக்கியதால்
யாழ்ப்பாணரும் வறுமையுற்றார்!
சூடவேண்டிய பொற்பூ இல்லாமல்
அவர்களது கூந்தலும்
பொலிவிழந்ததைப் போல
நீயும் வருந்தித் துடிப்பாயாக.

0 Comments:
Post a Comment
<< Home