குறுந்தொகை 20
குறுந்தொகை
பாடல் 20
பாடியவர் கோப்பெருஞ்சோழன்
அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து,
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக!
மடவம் ஆக,மடந்தை,நாமோ!
------------------------------------------------------------------------------------------------------
தோழி!
இரக்கம் சுரந்துவரும் எனது
அருளையும்
எலும்பையும் உருக்கும் உயிர்நிகர்
அன்பையும் நினையாது
ஏங்கவிட்டுப்
பொருள்நிமித்தம்
பிரிந்து செல்வதே அறிவுடைமை
என்றால் அறிவுடையவர் ஆகட்டும்.
பிரிவுத்துயரில் துடிக்கும் நானோ
அறிவற்றவள் என்றால்
அப்படியே ஆகட்டும்!
.

0 Comments:
Post a Comment
<< Home