Saturday, March 28, 2026

குறுந்தொகை 30

 குறுந்தொகை

பாடல் 30

பாடியவர்: கச்சிப்பேட்டுநன்னாகையார்


கேட்டிசின் வாழி தோழி அல்கற்

பொய்வ லாளன் மெய்யுறல் மரீஇய

வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட ஏற்றெழுந்து

அமளி தைவந் தனனே குவளை

வண்டுபடு மலரிற் சாஅய்த்

தமியேன் மன்ற அளியேன் யானே.

-------------------------------------------------------------------------------------------------

தோழி!

இந்த நாளில்

இரவுப் பொழுதில்

வருவேன் என்று

சொன்னவர் வரவில்லை!

பொய்சொல் வதில் வல்லவர் அல்லவா?

உடம்போடு உடம்பணைக்கும்

நிலைபோன்ற கனவிலே

வந்தார் !  களி மயக்கத்தைத் தந்தார்!

மயக்கம் விடுபட விழித்தேன்!

மஞ்சத்தைத் தடவிப்பார்த்தேன்!

என்னவரைக் காணாமல்

தவித்தேன்! தத்தளித்தேன்!

தனிமை வாட்டியது!

நலிந்தேன்! மெலிந்தேன்!

சொற்களில்தான் தேன்!

எனது இதயத்தில் 

ஊறுகிறதே ஆயிரம் தேள்!


0 Comments:

Post a Comment

<< Home