Sunday, March 29, 2026

குறுந்தொகை 47

 குறுந்தொகை

பாடல் 47

 நிலவே சொல்?


பாடியவர்

நெடுவெண்ணிலவினார்


கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்

இரும்புலிக் குருளையின் தோன்றுங் 

எல்லி வருநர் களவிற்கு

நல்லை யல்லை நெடுவெண் ணிலவே

---------------------------------------------------------------------------------------------

வெண்ணிலவே! கருவண்ணக் கால்போன்ற தாள்கொண்ட

கண்கவரும் வேங்கை மரத்தின் மலர்களோ

அங்கே கரும்பாறை மீது விழுவதால்

அஞ்சவைக்கும் காட்டுப் புலிக்குட்டி போல்தோன்றும்!

அன்பரோ இத்தகைய காட்சிகள் கொண்டிருக்கும்

துன்பமிகு காட்டுவழி தானே களவொழுக்கம்

எண்ணி வருகின்றார்! வெண்ணிலவே! அன்னார்க்கு

நன்மையா செய்கிறாய்? சொல்.


0 Comments:

Post a Comment

<< Home