Saturday, January 03, 2026

தமிழருவி மணியன்


 பண்பாளர் தமிழருவி மணியன் வாழ்க!


எந்தத் தலைப்பெனினும் அந்தத் தலைப்பிலே

செந்தமிழ்ப் பாடும் அருவியென மேடையிலே

பண்பாளர் நண்பர் தமிழருவி பேசுவார்!

வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்


ChatGPT


Long live the man of culture, Tamilaruvi Manian!


Whatever the theme, upon that very theme

A cascade of chaste Tamil flows on the stage.

Our cultured friend, Tamilaruvi, speaks

A living river of words!

May he live long, flourish, and rise

Like the timeless sweetness of ancient Tamil


தமிழ ருவிமணியன் வாய்திறந்தால்

 இன்பத்

தமிழருவி யாய்க்கொட்டும் நன்கு.

தென்.கி.

Friday, January 02, 2026

புன்னகை பூகம்பம்


 

குறள்களைப் படித்தால் உயர்வு


 

Wednesday, December 31, 2025

புரியாது வாழ்வு


 

இணையர்


 தலைவி தலைவன்வீட் டையும் தலைவன்

தலைவிவீட்டை யும்பார்த்தல் நன்று.

தென்.கி.

109.ஓரம் சொல்லேல்


 [31/12, 16:56] Vovkaniankrishnan:

 தங்களது பேரன்பால் நானும் ஔவையின் ஆத்திசூடியைக் கற்க வாய்ப்பு கிட்டியது.ஓரடியாலான ஆத்திசூடியை எல்லோரும் எளிதில் கற்க நான்கடியில் தந்த பாபாஜியை வணங்கி மகிழ்கிறேன்.

[31/12, 17:03] Madurai Babaraj: 

நன்றி நண்பரே
குறள்வெண்பா மழையில் நனைந்தேன்.

108.ஒன்னாரைத் தேறேல்


 

107.வைகறைத் துயில் எழு


 

யார் பொறுப்பு?


 

106.வேண்டி வினை செயேல்


 

Tuesday, December 30, 2025

துவாதசி



 துவாதசி் சமையல்!


31.12.25


பத்திரண்டு ஏழுவகைக் காய்கள்

குழம்பாக

முத்துமுத்தாய் ஆகா உருளைக் கிழங்குடன்

பச்சை அகத்தி, அவரையுடன் வாழையும்

முற்றும் பொரியலாக மொச்சை வறுவலும்

அப்படியே சேனை வறுவலுடன் வெண்டைக்காய்

பச்சடி ,கேரட்டும் வெள்ளரியும் வெண்தயிர்

பச்சடியும் வாழைப்பூ வாலே வடைகளும்

இச்சையுடன் நீள்புடலைக் கூட்டும்

சுவைசேர்க்க

பச்சைப் புதினாவால் சட்னியும்

பீர்க்கங்காய்

வைத்த துவையலும் அப்பளம்

மற்றுமிஞ்சி

வைத்தேதான் பச்சடியும் வீட்டில் துவாதசிநாள்

சுற்றுச் சமையலாக வைத்தார் விருப்புடன்!

எப்படி எங்கள் விருந்து?


மதுரை பாபாராஜ்


ChatGPT


Dwadashi Feast! — Poetic English


Twelve and seven kinds of greens,

simmered into a single gravy;

pearl-like potatoes saying ah! in delight.

Tender green agathi, broad beans, and plantain

all brought together as crisp stir-fries;

field beans roasted just so,

elephant yam fried beside okra.

Pachadi of carrot and cucumber,

bathed in cool white curd;

banana blossom shaped into garlanded fritters.

With longing, long snake gourd joins the spread,

while fresh mint lends its chutney’s green kiss.

Ridge gourd turns into a tempered relish;

papad crackles, and what remains becomes yet another pachadi.

At home, on Dwadashi day,

the kitchen circled with loving care—

a feast prepared with willing joy.

Tell me now—

how was our banquet?


Madurai Babaraj

105.வெட்டெனப் பேசேல்


 

Monday, December 29, 2025

தனிமனிதன - நிறுவனம்


 

சொர்க்கம் நரகம்


 என்னை பொறுத்த வரை இரண்டும் இருக்கலாம் உண்மையான இறை அன்பு சக மனிதனையும் கண்டிப்பாக நேசிக்க வைக்கும் 
இளவயதில் நன்மை தீமை அறியா பருவத்தில் கடவுள் பயமே நல்லொழுக்கத்தை கொண்டு வரும் வயதான பிறகு நல்ல மனத் தெளிவுடன் இறை வழிபாட்டை விடுவது தவறில்லை எனினும் பெற்றோர்கள் திருப்திக்காக தொடர்வதும் சரியே 
நான் இந்த இரண்டாவது ரகம்

திருமதி கற்பக சுந்தரி

104.ஊருடன் கூடிவாழ்


 

103.உத்தமனாய் இரு


 

அமளியும் அமைதியும்


 

102.வீடுபெற நில்


 

101.வித்தை விரும்பு


 

100.வாது முற்கூறேல்


 

99.வல்லமை பேசேல்


 

Sunday, December 28, 2025

தயக்கம் இயல்பு


 

98.மோகத்தை முனி


 

97.மொழிவது அற மொழி


 

Saturday, December 27, 2025

96.மைவிழியார் மனை அகல்


 

95.மேன்மக்கள் சொல்கேள்


 

குறளினிது சோம வீரப்பன்


 Somaveerappan:

Photo from Soma Veerappan

Somaiah family 2 days gettogether in DESHADAN CHOLA Resort near Thanjavur

25 Dec evening to 27 Dec morning 

4 generations

My daughter Srividya and Brother Soma Valliappan's son Karthik co ordinated

[28/12, 07:22] Madurai Babaraj: 

நான்கு தலைமுறைகள் தஞ்சைக் கருகிலே

ஓய்வகத்தில் கூடி மகிழ்ந்த படங்களைப்

பார்த்தேன்! மகிழ்ந்தேன்! களித்தேன் உவகையில்!

வாழ்க உறவு வளர்ந்து.

மதுரை பாபாராஜ்

[28/12, 07:25] Madurai Babaraj: 

குறளினிது வீரப்பன் ஈருருளி ஓட்டும்

சிறப்பான காட்சிக்கு வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

குறள் 691


 

அறிஞர் அண்ணா



 திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா!

திருத்தணி மலைமீது எதிரொலிக்கும்!

(பாடலின் ராகம்)


மெரினா கடற்கரையில் 

நீ சிரித்தால் அண்ணா

தமிழர்கள் இதயத்திலே

எதிரொலிக்கும்!

தமிழோடு உறவாடி நாவசையும்

உன்

தமிழ்ப்புகழ் பாடியே உயிராடும்

மெரினா கடற்கரையில் 

நீ சிரித்தால் அண்ணா

தமிழர்கள் இதயத்திலே

எதிரொலிக்கும்!

காஞ்சியிலே பிறந்த மழலைப் பழம் நீ

தூளியிலே ஆடிவந்த அன்புப்பழம்

பெரியார் சோலையிலே முதிர்ந்த பழம்

கொள்கைப் பசியோடு வருவோர்க்கு அறிவுப்பழம்!

தம்பிகளின் கழகக் கோட்டையுண்டு

உன்

கண்ணியத்தைக் காப்பதற்குப் படையுமுண்டு

உனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை

அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை

மெரினா கடற்கரையில் 

நீ சிரித்தால் அண்ணா

தமிழர்கள் இதயத்திலே

எதிரொலிக்கும்!


தமிழோடு உறவாடி நாவசையும்

உன்

தமிழ்ப்புகழ் பாடியே உயிராடும்


மெரினா கடற்கரையில் 

நீ சிரித்தால் அண்ணா

தமிழர்கள் இதயத்திலே

எதிரொலிக்கும்!


மதுரை பாபாராஜ்