Thursday, April 02, 2026

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்!



அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்!

குறள் 1


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு அருமை!
அறிமுகம் ஆக்கியது பெற்றோர்தான் இங்கே!
அறிந்த கடவுள் அவர்.

மதுரை பாபாராஜ்

A begins all letters—
as the Primal One begins the world;
So too, in this life’s first awakening,
it is our parents who introduce us—
the gods we first come to know.


குறள் 35


 

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்கு

 கவிதை!


மகிழ்ச்சியாக வாழ பலவழிகள் உண்டு!

அதிலொன்றே மற்றவர் வாழ்வை உயர்த்தி

மகிழவைத்தல்!  அந்தக் குணமொன்றே நம்மை 

மகிழவைக்கும்! அப்பண்பே நன்று.


மதுரை பாபாராஜ்

Wednesday, April 01, 2026

நண்பர. சேதுமாதவன்


 நண்பர் சேதுமாதவன் அனுப்பிய

 படத்திற்கு கவிதை!


வாய்க்காலில் நீரோட வாய்க்கால் கரைமீது

வேரோடும் ஒற்றை மரம்நிற்க சுற்றியும்

சேனைபோல் பச்சை மரங்களோ நின்றிருக்க

நண்பராம் மாதவன் காலை வணக்கத்தைத்

தந்தாரே அன்புடன் வாழ்த்து.



மதுரை பாபாராஜ்

அம்மாவின் ஓவியம்


 அம்மா நிலம்துரை அவர்களுக்கு வாழ்த்து!


கடற்குதிரை தன்னை அழகாய் வரைந்து

படமாக இன்று அனுப்பிய ஆற்றல்

வியக்கத.தான் வைக்கிறது ! வாழ்த்து.


மதுரை பாபாராஜ்