Saturday, March 07, 2026
Friday, March 06, 2026
சிறகொடிந்த சிட்டு
சிறகொடிந்த சிட்டு!
வானளந்த சிட்டுக் குருவி சிறகொடித்து
ஏனோ ரசித்திருந்தார்? அத்தகைய ஏக்கத்தை
ஏனோ உணராமல் நாளும் துடிப்பதைப்
பார்த்தே சிரித்திருந்தார்? சொல்.
மதுரை பாபாராஜ்
ChatGPT
The Broken-Winged Sparrow
A sparrow that once measured the sky
Now stands with its wings broken.
Why did he watch and take delight?
Why savor such a sorrow?
Not sensing the ache within that fall,
He saw its daily trembling struggle—
And only stood there, smiling.
Tell me… why?
— Madurai Babaraj
தென் கி கவிதை ஆர்வம்
[06/03, 13:45] Vovkaniankrishnan:
கிவாஜவின் பாடலாம் பாட்டு படித்தும்
தவிக்கிறேன் இன்னும் கவிக்கு.
[06/03, 13:54] Vovkaniankrishnan:
உரைநடை யில்சிறப் பானதென் கிக்கு
வரவில்லை யேநற் கவி.
[06/03, 16:18] Madurai Babaraj:
சொன்னது யாரோ? கவிதை படைக்கின்ற
நம்பிக்கை உண்டே உணர்.
பாபா
[06/03, 16:40] Vovkaniankrishnan:
கவிதை எழுதலாம் எல்லோரும் உள்ளம்
கவிதையால் நிற்பின் நிறைந்து.
[06/03, 16:40] Madurai Babaraj:
குறள்வெண்பா நாளும் படைக்கின்ற
நீங்கள்
சிறப்பாய்க் கவிஞர்தான்! சொல்.
பாபா
Thursday, March 05, 2026
மகள் பிருந்தா பிறந்தநாள் வாழ்த்து
மகள் பிருந்தா ராஜ்குமாருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
அகவைத் திருநாள்: 06.03.26
மருமகன்: மு. ராஜ்குமார்
பேரன்: கோசல் கல்யாண்
கலகல வென்ற சிரிப்புடன் அன்பில்
திளைத்தே அருந்தமிழ்போல் பல்லாண்டு வாழ்க!
வளமுடன் வாழ்வில் நலமுடன் வாழ்க!
குடும்பத்தார் சூழ நிறைவுடன் வாழ்க!
மகத்தாக வாழ்கபல் லாண்டு
மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்
பூவின் பருவங்களும் வாழ்வின் பருவங்களும்
பூவின் பருவங்களும் வாழ்வின் பருவங்களும்!
அரும்பு (Anumbu): பூவின் முதல் நிலை - செடியில் தோன்றும் மிகச்சிறிய நிலை.
பிறந்த நிலையில் குழந்தை நிலைதான்
அரும்பாகும்! ஆர்வத் துடனேதான் சூழ்ந்து
அழுதேதான் கைகால் உதறும் அழகை
விழிகளால் காண்பார் ரசித்து.
மொட்டு (Mottu): அரும்பு சற்று பெரியதாக வளர்ந்த நிலை.
பாட்டி முதலானோர் உச்சிமோந்து
பாதுகாத்து
நாளும் வளர்ப்பார் மகிழ்ந்து.
முகை (Mukai): மொட்டு விரிந்து மலரும் நிலைக்கு முந்தைய பருவம், நறுமணம் வீசத் தொடங்கும் நிலை.
நறுமணம் வீச பொருளை உடலில்
துறுதுறுக் கண்கள் விழிக்கவே பூசி
நிறைவுடன் பார்த்திருப்பார் சூழ்ந்து.
மலர் (Malar): இதழ்கள் விரிந்து முழுமையாக பூத்த நிலை.
பருவ வயதடைந்தே பக்குவம் கண்டே
அரும்பிடும் நாணமுடன் பெண்மை சிரிக்கும்!
செருக்குடன் ஆணோ தலைநிமிர்ந்து பார்ப்பான்!
பருவம் முழுமைதான் பார்.
அலர் (Alar): பூ நன்றாக விரிந்து இதழ்கள் வளைந்த நிலை.
.இளமை முதலாய் முதுமை வரைக்கும்
களைகட்டும் வாழ்க்கைப் பருவமாகும் இங்கு!
நிலையென்றே எண்ணித்தான் ஏமாந்தே நிற்போம்!
உலகில் கொதிப்போம் களைத்து
வீ (Vee): பூ வாடி, செடியிலிருந்து உதிரும் நிலை.
நோய்நொடிகள் தாக்க முதுமையில் தள்ளாடி
வாழ்வைக் கடந்துவந்த பாதை அசைபோட
நாளும் கழிப்பதே இங்கே கவலையாக
வீடே சுமையாகும் இங்கு.
செம்மல் (Semmal): பூ கீழே உதிர்ந்து காய்ந்துபோன நிலை.
ஒளிவிளக்காய் வாழ்ந்து விழுந்தே இருளில்
ஒளியிழந்து என்று இறுதிப் பயணம்
தெரியுமோ என்றேதான் காத்திருப்போம்! நாம்தான்!
தெரியாமல் சென்றிடுவோம் நாம்.
மதுரை பாபாராஜ்
Wednesday, March 04, 2026
Tuesday, March 03, 2026
எண்ணம்போல வாழ்வு
எண்ணம்போல் வாழ்வு!
என்னையோ நல்லவர் என்பாரோ பூப்போல
உள்ளமுடன் நட்பில் திளைப்பார்கள்! கெட்டவர் என்பாரோ முட்கள் மறைந்துள்ள ரோஜாபோல்
எண்ணத்தை நாளும் மறைத்தேதான் வாழ்பவர்கள்!
எண்ணம்போல் வாழ்வமையும் செப்பு.
மதுரை பாபாராஜ்
தென் கி நட்பு
[03/03, 20:43] Vovkaniankrishnan:
எழிலாய் எளிதாய்க் கருத்தாய் உயர்வாய்
எழுதும்பா பாபாட்டைப் போற்று.
[03/03, 20:55] Vovkaniankrishnan:
மகிழ்ந்து மகிழ்ந்து மலர்ந்து மலர்ந்து
நெகிழ்ந்து தொடரட்டும் நட்பு.
நீங்களும் நானும் உறவில் பிரியாது
பாங்காய் இருப்போம் மகிழ்ந்து.
நட்பு நமக்கு நலத்தைநா ளும்நல்கும்
நட்பில் நனைவோம் நினைந்து.
[05/03, 08:45] Vovkaniankrishnan: வண்ணம் என்ன வண்ணம்
எண்ணந்தான் எல்லாம்.
[05/03, 08:50] Vovkaniankrishnan:
நீங்களோ கவிஞர்
நானோ வண்ணந் தீட்டுநர்.
எண்ணம் நிற்கும் நாளெல்லாம்.
வண்ணமோ கலைந்துவிடும்.
நீங்களோ நிலைப்பவர்.
நானோ கலைந்து விடுபவன் தானே!.
[05/03, 08:51] Madurai Babaraj:
நீங்களும் கவிஞரே. குறள்வெண்பா கவிஞராக நீங்கள் படைப்பதெல்லாம் அருமை
பாட்டுக்குப் பாட்டு
[03/03, 20:23] Vovkaniankrishnan:
பார்போற்றும் பாட்டு பலதந்து பாபாவோ
பார்போற்ற பாடுதல் பாங்கு
[03/03, 20:26] Madurai Babaraj:
தென்காசி யாரின் குறள்வெண்பா
வாழ்த்திலே
என்னை மறந்துவிட்டேன் நான்.
மதுரை பாபாராஜ்
Monday, March 02, 2026
கோழையாக்கும்
கோழையாக்கும்!
நல்லநேரம் கெட்டநேரம் எல்லாமே பார்த்தேதான்
இவ்வாழ்வில் என்னசெய்த போதும் நடப்பதுதான்
இங்கே நடந்தேறும்! மூடநம்பிக் கையின்றி
வேறில்லை! கோழையாக்கும் இஃது.
கெட்டநேரம் என்றால் உலகம் இயங்காதா?
எப்போதும் போல வழக்கமாக எல்லாமே
தப்பாமல் இங்கே நடக்கிறதே! கெட்டநேரம்
என்றேதான் சொல்வதெல்லாம் பொய்.
மதுரை பாபாராஜ்
ChatGPT
It Makes Us Cowards!
“An hour is good, an hour is cursed” —
We weigh them all; yet whatever we do
In this wide life unfolds as it must —
Events arrive as they are meant to.
No hidden hand of omen rules;
Such blind belief alone
Unmans the heart —
And makes us cowards.
If time were truly “ill,” would earth
Cease its turning in the sky?
Does not the world move on the same,
Unfailing in its ancient way?
All things proceed as ever they did —
This cry of “evil hour”
Is but a lie we tell ourselves.
DrAshraffwhatsapp:
அப்போ......
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து?
VOVCR:
அது ஏற்ற நேரம்... 😃
மதுரை பாபாராஜ்:
வாய்ப்பு வேறு
இது வேறு அஷ்ரப்














































