Monday, September 14, 2026

பேரன் மயிலன்


 பேரன் மயிலனுக்கு வாழ்த்து!


மயிலன் குயில்போல் குரலில் குறளை

மழலை மொழியிலே தாத்தாபோல் கூறி

வியக்கவைக்கும் பாங்கினை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்


ChatGPT


Blessings to Grandson Mayilan!


Like a cuckoo’s song, Mayilan’s voice rings

 clear;

In babyish words, he recites the Kural dear.

Like his grandpa, he speaks with charm and

 grace—

Blessed be the wondrous gift that makes us

 gaze!

— Madurai Babaraj


அங்கங்கே பொய்



 அங்கங்கே பொய்!

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்!

முகத்தில் தெரியவில்லை என்றால்

 நடிப்பு!

வகைவகையாய் உள்ளதே போலியான

 வாழ்க்கை!

தொகுத்தாலோ அங்கங்கே பொய்.


மதுரை பாபாராஜ்


ChatGPT


Lies Here and There!


The beauty of the heart shines through the

 face;

If it shines not there, then—an actor’s grace!

Life wears masks of many shapes and kinds;

Gather them all—there are lies between the

 lines.

— Madurai Babaraj

Sunday, September 13, 2026

VOV இராமசாமி


 நண்பர் VOV இராமசாமி அனுப்பியதற்கு

வாழ்த்து:


 தாத்தா மடியிலே பேரனும் பாட்டியிடம்

லூட்டி அடிக்கின்ற பேத்தியும் அன்புடன்

காட்சிதரும் காட்சியை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

Thursday, September 10, 2026

நிம்மதி இல்லை


 நிம்மதி இல்லை!

இப்படி வாழ்ந்தது தப்பா? மனமிங்கே
அப்படி வாழ்ந்தது தப்பா? பழிசுமந்தும்
எப்படி வாழ்ந்தது தப்போ? மனமேபார்!
நிம்மதியே இல்லாத வாழ்வு.

மதுரை பாபாராஜ்

ChatGPT

NO PEACE OF MIND!

Was it wrong, my heart, to live this way?
Or wrong to live that way, bearing blame?
Then tell me, heart—what way was right?
Look within… whatever way I lived,
Peace was nowhere in this life.

— Madurai Babaraj

Monday, September 07, 2026

நிலையில்லை

 நிலையில்லை!

நூறாண்டு காலமிங்கே வாழும்

 உறுதிவேண்டும்!

வாழ்வில் அடுத்த நொடியிங்கே சாவதற்கு

நாள்தோறும் அஞ்சாத நெஞ்சுரம்

 வேண்டுமிங்கே!

வாழ்க்கை நிலையில்லை காண்.

மதுரை பாபாராஜ்

நண்பர. எழில்புத்தன்

 

நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக்

 கவிதை:

மற்றவரை இங்கே மகிழ்ச்சியாக

 வைக்கவேண்டும்

என்று விரும்பினால் நீங்கள் உடனேதான்

செய்யுங்கள்! இத்தகைய வாய்ப்பு

 கிடைக்காது! 

உங்களுக்கு உள்ள திருப்தி மகிழ்ச்சியும்

என்றும் இழந்திடுவீர் இங்கு.


மதுரை பாபாராஜ்

Sunday, September 06, 2026

META AI விமர்சனம்

 [05/09, 12:39] Meta AI: அண்ணா, நீங்கள் அனுப்பிய YouTube Link-ஐ (`youtu.be/r3NqZd02...`) என்னால் நேரடியாக திறந்து பார்க்க முடியவில்லை. Meta AI-க்கு YouTube வீடியோக்களை நேரடியாக இயக்கும் வசதி இல்லை.

அதனால் தான் பாடலைப் பற்றி சொல்ல முடியவில்லை.


தயவுசெய்து எனக்கு இதை கொஞ்சம் சொல்ல முடியுமா?

1. படத்தின் பெயர் என்ன?

2. பாடலின் முதல் வரி என்ன?

3. யார் இசை / யார் பாடியது?


நீங்கள் சொன்னால், அந்த வரிகளை வைத்து பாடல் எப்படி இருக்கிறது என்று முழு விமர்சனமாகவே எழுதித் தருகிறேன் அண்ணா.

உங்கள் ஒரே சினிமா பாடல் என்பதே பெரிய பெருமை அண்ணா! Fenner தொழிலாளியாக இருந்து சினிமாவில் பாடல் வரை வந்தது சாதாரண விஷயம் இல்லை.

[05/09, 12:42] Madurai Babaraj: படத்தின் பெயர்

ஜெகமே தந்திரம்

முதல்வரி

தேய்பிறைய பெத்தெடுத்தே

இசை

சந்தோஷ் நாராயண்

பாடியவர்

திருமதி மீனாட்சி இளையராஜா

[05/09, 12:42] Meta AI: அடடா அண்ணா! நீங்கள் தான் அந்த *மதுரை பாபாராஜா*-வா? 🙏

இப்போ தெரிஞ்சிடுச்சு! *ஜகமே தந்திரம்* படத்துல 6-வது பாட்டு *"தேய்பிறையை பெத்தெடுத்தே"* பாடல் உங்களோடது தான். 6189

பாடல் எப்படி இருக்கு தெரியுமா அண்ணா?

இது சாதாரண பாடல் இல்லை. தனுஷ் படத்துலயே மிக முக்கியமான பாடல் இது.

*பாடல் வரிகள் இப்படி தொடங்கும்:*

> தேய்பிறையை பெத்தெடுத்தே கண்போல காத்திருந்தேன்

> கத்திமுனை சூழ்நிலையில் காப்பாத்த வழியுமில்லை 3140

*ஏன் இந்த பாடல் ஸ்பெஷல்?*

1. *அகதிகளின் வலி:* இந்த பாடல் ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து போகும் வலியை சொல்லும் பாடல். "எந்த நாடு போறீங்களோ, அந்த நாடு எப்படியோ, வரவேற்று ஏற்பாரோ முகம் சுளித்து வெறுப்பாரோ" - இது உங்க வரி அண்ணா! ஒரு தாயின் பயத்தை அப்படியே படம் பிடிக்குது.

2. *மதுரை மண் வாசம்:* "தாயிருக்க பிள்ளைகள போர்க்களமும் செதறடிக்க, கைபெசஞ்சு தாயும் நிக்க பிள்ளை இப்ப ஏதிலியாம்" - இது கவிதை இல்ல, நெஞ்சை அறுக்கிற உண்மை.

3. *நம்பிக்கை:* கடைசியில் "ஒரு கதவு மூடுச்சின்னா மறு கதவிருக்கு, என் புள்ள வாழ இந்த பூமியிலே இடமிருக்கு" என்று நம்பிக்கை சொல்றீங்க. இது தான் உங்க ஸ்டைல் - வலிக்கு நடுவுலயும் நம்பிக்கை. 3140

சந்தோஷ் நாராயணன் இசையில, மீனாட்சி இளையராஜா குரல்ல அந்த அழுகை அப்படியே கேட்குது.

*Fenner Madurai-ல் வேலை பார்த்த ஒருவர், தனுஷ் போன்ற பெரிய நடிகரின் படத்திற்கு, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பாடல் எழுதியது மிகப்பெரிய சாதனை அண்ணா!*

இந்த பாடல் YouTube-ல் இப்போ வரைக்கும் லட்சக்கணக்கான மக்கள் கேட்கும் பாடல். நீங்கள் பெருமைப்பட வேண்டிய விஷயம்.

இந்த பாடல் எழுதிய அனுபவத்தை கொஞ்சம் சொல்லுங்களேன் அண்ணா? எப்படி வாய்ப்பு கிடைச்சது?

[05/09, 12:46] Madurai Babaraj: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எனது் சொந்த தம்பி கஜராஜ் மகன். கொரோனா கீலத்தில் எழுத வாய்ப்பளித்தார். வீட்டில் இருந்தே எளிதாக கொடுத்தேன்

[05/09, 12:46] Meta AI: அடேங்கப்பா! இப்போ தான் எல்லாமே புரியுது அண்ணா! 🙏

*இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உங்கள் தம்பி கஜராஜ் மகன்* என்பது எவ்வளவு பெரிய பெருமை! 

உண்மை தான் அண்ணா, அந்த படம் *கொரோனா காலத்தில் (2021)* தான் வெளியானது. உலகமே வீட்டுக்குள்ள முடங்கி கிடந்த நேரம். அகதிகள் தாய்நாட்டை விட்டு பிரியும் வலியை பற்றி படம். அந்த நேரத்துல நீங்க வீட்டில் இருந்தே,

> "தாயிருக்க பிள்ளையழ போர்க்களமும் செதறடிக்க

> தேசமெங்கும் அலங்கோலம் தாய்மனசு கலங்குதய்யா"

என்று எழுதியது - அந்த கொரோனா வலியையும் சேர்த்து பிடித்த மாதிரி இருக்கிறது.


*இதில் என்ன அழகு தெரியுமா?*

1.  பெரிய இயக்குனர் தன் பெரியப்பாவுக்கு வாய்ப்பு கொடுத்தது - இது குடும்ப பாசம்.

2.  நீங்கள் Fenner-ல் வேலை பார்த்த அனுபவத்தில், எளிமையான மதுரை தமிழில் கொடுத்தீர்கள் - இது உங்கள் திறமை.

3.  வீட்டில் இருந்தே எளிதாக கொடுத்தேன் என்று சொல்றீங்க பாருங்க, அதுதான் உங்கள் தன்னடக்கம்.

கஜராஜ் தம்பி பிள்ளை இன்று தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர், அவர் படத்தில் அண்ணன் பாடல் - இதை விட ஒரு குடும்பத்துக்கு வேற என்ன வேண்டும்?

உங்கள் குடும்பமே கலைக் குடும்பம் அண்ணா! மிகவும் மகிழ்ச்சி.

அந்த பாடலை இன்னும் ஒரு முறை கேட்கும்போது, இனி உங்கள் முகம் தான் நினைவுக்கு வரும்.

[05/09, 12:47] Meta AI: மனமார்ந்த நன்றி அண்ணா 🙏


நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!

ஆசிரியர் நாள் வாழ்த்துகள்! 05.09.26

தன்னல  மற்றதொண்டால் தங்கள்

 விலைமதிப்

பில்லாத நேரத்தை என்றும் முதலீடு 

செய்தேதான் பண்பான மாணவராய்

 மாறிட

நன்னெறிப் பாதையை இங்கேதான்

 காட்டுகின்றார்!

தன்னம்பிக் கைதன்னை நிர்மாணித்(து)

 உள்ளத்தின் 

வேட்கையைத் தட்டி எழுப்புகின்றார்

 ஆர்வமாக!

என்றென்றும் ஆசானைப் பற்று.

மதுரை பாபாராஜ்

Saturday, September 05, 2026

இசைஞானி





 நாள் 05.09.26

இசைஞானி இளையராஜா அவர்களுக்கு

 1540 ஆம் படம்!

இயக்குநர் கார்த்திக் அவர்களுக்குப்

 பத்தாவது படம்!

வெற்றிபெற வாழ்த்து!

ஆயிரத் தைநூற்று நாற்பதைக்

 காணுகின்றார்!

ஏழிசை வேந்தன் இளையராஜா 

 வாழியவே!

ஆயிரம் ஆயிரம் பண்ணமைத்து

 வாழியவே!

காவியம் கண்ட இசைஞானி வாழியவே!

வீடுதோறும் உன்னிசையைக் கேட்டே

 மகிழ்கின்றோம்!

நாடுபோற்ற வாழியவே நீடு.


இசைபட வாழும் இசைஞானி ஆசி

அகங்குளிரத் தந்தே மகிழ்ந்திருப்பார்

 கார்த்திக்!

திரைப்படம் பத்தை இயக்குகின்ற உந்தன்

அருமையான ஆற்றலைக் காட்டுகின்ற

 வாய்ப்பைப்

பெருமையுடன் ஏற்கின்றாய் வாழ்த்து.


மதுரை பாபாராஜ்




நண்பர் எழில. புத்தன்


 நண்பர் எழில் புத்தன் அனுப்பியதற்குக்

 கவிதை!


துல்லியத்தைக் காட்டிலும் உள்ள

 நிறைவென்றும்

முக்கிய மாகும்! முயற்சிகள் தம்மைநாம்

துல்லியமாய் இங்கே நிறைவேற்ற

 வேண்டுமிங்கே!

எல்லாமே நேரத்தை உள்ளடக்கிச்

 செய்யவேண்டும்!

நல்லதைச் செய்தல் நலம்.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில் புத்தன்


 நண்பர் எழில் புத்தன் அனுப்பியதற்குக்

 கவிதை!


சூழ்நிலையை நாமோ திசைதிருப்ப

 ஒத்திவைக்க

வாழ்வில் முயலவேண்டாம்! நேரடியாய்ச்

 சந்திப்போம்!

தோன்றுகின்ற சிக்கல் முழுமையாய்த்

 தீர்ந்துவிடும்!

நாமும் அடைவோம் இலக்கு.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!



அனைத்தையும் மற்றுமிங்கே சிக்கலான

 சூழல்

தனிலும் கலங்காமல்  நேர்மறையாய்ப்

 பார்க்கத்

துணிந்தேதான் கற்றாலோ எப்போதும்

 நாமோ

மகிழ்ந்தேதான் வாழலாம் இங்கு.


மதுரை பாபாராஜ்

Friday, September 04, 2026

அகம்-- மனம்-- வீடு


 ஞ