Friday, March 17, 2023
நா காக்க!
நா காக்க!
கருத்துகள் ஏற்புடைத்தா? ஏற்போம் மகிழ்ந்து!
கருத்துகள் மாறுபட்டால் வாதம் தவிர்ப்போம்!
வரம்பற்ற வாதங்கள் நட்புக்குக் கேடு!
சுழல்கின்ற நாவை அடக்கு.
மதுரை பாபாராஜ்
Wednesday, March 15, 2023
முரண்
வாழ்வின் முரண்!
நின்றால், சிரித்தால், படுத்தால் பணமழை
என்றே விளம்பரத்தில் ஏக வருமானம்!
அங்குமிங்கும் நாளும் கடின உழைப்பெனினும்
துன்பம், பணக்குறை தான்.
மதுரை பாபாராஜ்
Thursday, March 09, 2023
Wednesday, March 08, 2023
Sunday, March 05, 2023
மதிப்பிற்குருய அப்துல்கலாம் ஐயா
மதிப்பிற்குரிய அப்துல் கலாம் ஐயாவின் பொன்மொழிக்குத்
தமிழாக்கம்!
நெருக்கமாக உள்ளோரை விட்டுவி டாதே!
ஒருசில தப்புகளைக் கண்டுவிட்டால் கண்ணை
விரைந்தேநீ மூடிக்கொள்! நண்பருடன் நீயோ
கலந்துரை யாடி மகிழ்ந்த சிறந்த
தருணத்தை எண்ணிக்கொள்! ஏனென்றால் அன்பு
முழுமையைக் காட்டிலும் முக்கிய மாகும்!
விலைமதிப் பற்றதே அன்பு.
மதுரை பாபாராஜ்
Friday, March 03, 2023
கவிஞர் இமயவரம்பன்
02.03.23
கவிஞர் இமயவரம்பன் இன்று எந்தன் இல்லத்திற்கு வருகைதந்த மகிழ்வான தருணம். பெரியார் இன்றும் என்றும் என்ற நூலைப் பரிசளித்தார்Thursday, March 02, 2023
மாண்புமிகு முதல்வர் பிறந்தநாள்
மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!
அகவைத் திருநாள் 01.03.23
அகவை. 70
குறள் 67:
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயலென்றார் வள்ளுவர்!
தந்தை கலைஞர் கடமையைச் செய்துவிட்டார்!
அன்பு மகனை அவையிலே முன்னணியில்
நிற்கவைத்தார் வாய்ப்பை அளித்து.
குறள் 69:
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாயென்றார் வள்ளுவர்!
தன்மகன் ஸ்டாலினைச் சான்றோர் எனப்புகழும்
இன்சொல்லைக் கேட்கின்றார் தாய்.
குறள் 70:
மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல்லென்றார் வள்ளுவர்!
அன்பகம் ஸ்டாலினோ ஆற்றலால்
சாதித்தே
இந்தக் குறளுக்கு நற்புகழ் சேர்த்துவிட்டார்!
வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.
மதுரை பாபாராஜ்
9003260981