Wednesday, March 25, 2026

பிறன் இல் விழையாமை--15

 ---------------------------------------------------------

பிறன் இல் விழையாமை--15

-------------------------------------------------------------

மற்றவர் பொருளைக் கவர்தல் அவமானமாகும்!

----------------------------------------------------------------

பிறருக் குரியதை விரும்பாதே!

அறத்தை விட்டே விலகாதே!


பொருளை நாடி அவர்வீட்டு

வாசலில் நிற்பது மடமைதான்!


நம்மை நம்பும் மனிதருக்குத்

துரோகம் செய்பவன் நடைப்பிணந்தான்!


துரோகம் செய்து துய்ப்பவர்கள்

பெரியவர் எனினும் சிறியோர்தான்!


பிறரது பொருளைக் கவர்பவரோ

அழியாப் பழியை ஏந்திடுவார்!


பஞ்சமா பாதகம் செய்பவரைப்

பகையும் பழியும் சூழ்ந்திருக்கும்!


தனக்கு மட்டும் உரியதையே

விரும்பி வாழ்பவர் சான்றோராம்!

பொறாமை வெறியை ஒதுக்கிவிட்டு

வாழ்வோர் ஒழுக்கச் சுடராவார்!


அடுத்தவர் பொருளை விரும்பாதோர்

அகிலம் போற்றும் உத்தமர்தான்!


கரடு முரடாக வாழ்ந்தாலும்

மாற்றார் பொருளை விரும்பாமல்

வாழ்வதே உலகில் சிறப்பாகும்!


மதுரை பாபாராஜ்


ஒழுக்கம் உடைமை-- 14

 ஒழுக்கம் உடைமை-- 14

----------------------------------------------------------------

தனிமனித ஒழுக்கம் தலை நிமிர வைக்கும்!

----------------------------------------------------------------

ஒழுக்கம் உயர்வின் வழியாகும்!

உயிருக்கும் மேலாய்க் காப்போமே!


தடைகள் எத்தனை வந்தாலும்

தலைநிமிர்ந் தேதான் காப்போமே!


ஒழுக்கம் உடையவன் உயர்ந்தவனாம்!

இல்லா தவனே தாழ்ந்தவனாம்!


வேதம் சொல்வோன் கற்றதையே

மறந்து போனால் படித்திடலாம்!

ஒழுக்கந் தவறிப் போனாலோ

இழிந்த குலத்தான் எனச்சொல்வார்!


பொறாமை கொண்ட மனிதனிடம்

செல்வம் என்றும் நிலைக்காது!

ஒழுக்கம் இல்லா மாந்தரிடம்

உயர்வு என்றும் நிலைக்காது!


ஒழுக்கம் என்னும் விளக்கணைந்தால்

வாழ்வில் இருள்தான் சூழுமென்றே

ஒழுக்கந் தன்னைப் போற்றிடுவார்!


ஒழுக்கப் பண்போ இன்பந்தான்!

தவறிய ஒழுக்கம் துன்பந்தான்!


ஒழுக்கம் பேணும் சான்றோர்கள்

தீய சொற்கள் பேசமாட்டார்!


மக்களுடன் ஒத்து வாழாதோர்

கற்றுத் தெளிந்தவர் என்றாலும்

அறிவிலி என்றே பரிகசிப்பார்!


மதுரை பாபாராஜ்


அடக்கம் உடைமை 13

 அடக்கம் உடைமை-- 13

----------------------------------------------------------------

அடக்கத்தின் மறுபக்கமே புகழாகும்!

----------------------------------------------------------------

அடக்கம் இருந்தால் ஒளிமயந்தான்!

அடங்காப் பண்போ இருள்மயந்தான்!


அடக்கம் என்பது செல்வந்தான்!

காப்பது நமது கடமைதான்!


இந்தப் பண்பைப் பெரியோர்கள்

உணர்ந்தே இங்குப் புகழ்வார்கள்!

இந்தப் பண்பின் முன்னாலே

மலையின் உயரம் மடுவாகும்!


பணிந்து நடத்தல் சிறப்பாகும்!

செல்வம் உள்ளோர் கடைப்பிடித்தால்

மேலும் மதிப்பார் உலகத்தார்!


ஐம்புலன் தன்னை ஒருபிறப்பில்

அடக்கி வாழ்ந்தால் எழுபிறவி

தன்னைக் காக்கும் கவசந்தான்!


கட்டுப் பாடே இல்லாமல்

நாவைப் பேச அனுமதித்தால்

துன்பந் தன்னில் சிக்கவைக்கும்!


தீமை விளையும் ஒருசொல்லால்

முன்னர் செய்த அறங்களெல்லாம்

விழலுக் கிறைத்த நீராகும்!


நெருப்புக் காயம் ஆறிவிடும்!

தீச்சொல் சுட்ட புண்மட்டும்

உள்ளந் தன்னில் வடுவாகும்!


சினத்தைக் காத்துக் கற்றறிந்தே

அடக்கம் கொண்டு வாழ்பவனை

அறங்கள் நாளும் காத்திருக்கும்.

-------------------------------------------------------------------------------------------------------------------------

நடுவுநிலைமை-12

 நடுவுநிலைமை -- 12

--------------------------------------------------------------

நடுநிலையே சிறந்த அறமாகும்

------------------------------------------------------------

நீதி என்றும் வழுவாமல்

நடுநிலை காப்பதே அறமாகும்!


இப்படி உள்ளவர் செல்வங்கள்

பரம்பரைக் கெல்லாம் உதவிடுமே!


நடுநிலை தவறும் பண்பாலே

மலைபோல் செல்வம் குவிந்தாலும்

அற்பம் என்றே ஒதுக்கிவிடு!


நடுநிலை போற்றிய பண்பாளன்

என்பதைப் புகழும், பழியுந்தான்

உலகில் காட்டும் அளவுகளாம்!


வறுமையும் வளமும் அணியல்ல!

நடுநிலை சான்றோர் அணியாகும்!


நடுநிலை விட்டே தவறிவிட்டால்

கெடுநிலை அவனை அழித்திடுமே!


நீதி மானின் வறுமையினை

பெருமை என்பார் சான்றோர்கள்!


சாயா துலாக்கோல் போலத்தான்

நடுநிலை கொண்டோர் சான்றோராம்!


ஒருதலைத் தீர்ப்பு சொல்லாத

நியாயப் பண்பே நடுநிலையாம்!


நுகர்வோர் நிலையில் தான்நின்று

வணிகம் செய்தல் வணிகருக்கு

சிறப்பைக் கொடுக்கும் ஒழுங்காகும்!


மதுரை பாபாராஜ்


செய்ந்நன்றி அறிதல் -- 11

 செய்ந்நன்றி அறிதல் -- 11

----------------------------------------------------------------

நன்றி மறவாப் பண்பே உயர்வை அளிக்கும்!

----------------------------------------------------------------

மற்றவ ருக்கு உதவாமல்

மற்றவர் நமக்கு உதவிசெய்தால்

அந்த உதவிக் கீடாக

ஈரே  ழுலகும் ஆகாது!

தேவை யான நேரத்தில்

செய்யும் உதவி சிறிதெனினும்

உலகைக் காட்டிலும் பெரிதாகும்!

எதிர்பார்ப் பின்றி உதவுங்கள்!

கடலைக் காட்டிலும் பெரிதாகும்!

தினையின் அளவே உதவிகளைச்

செய்த போதும் அதன்பயனைப்

பனையள வாகப் போற்றுவார்கள்!

உதவிக் குள்ள சிறப்பெல்லாம்

பெறுவோர் பண்பின் அளவாகும்!

மாசே இல்லா நட்பினையும்

இன்னலில் துணையாய் இருந்தோரையும்

என்றும் மறக்கக் கூடாது!

எத்தனைப் பிறவி எடுத்தாலும்

சான்றோர் மறக்க மாட்டார்கள்!

நன்மையை என்றும் மறக்காதே!

தீமையை உடனே மறந்துவிடு!

முன்னர் செய்த நன்மையை

மனதில் நாளும் நினைத்தேதான்

பின்னர் செய்த துன்பத்தை

உடனே மறப்பது பண்பாகும்!

அரசியல்


 அரசியல் தொண்டா? வருமானம் ஏனோ?

தரமான ஓய்வூதி யம்ஏனோ? அன்றி

பணிக்களமா? தேர்வெங்கே? கல்வியெங்கே? என்றே

உரிமையுடன் கேட்டது நன்று.


மதுரை பாபாராஜ்

Tuesday, March 24, 2026

இனியவை கூறல் -- 10

 


--------------------------------------------------------------

இனியவை கூறல் -- 10

----------------------------------------------------------------

நல்லதைப் பேசினால் நன்றாக வாழலாம்

----------------------------------------------------------------

அறநெறி வாழ்வை ஏற்றவர்கள்

பேசும் சொற்கள் இனிமைதான்!


அள்ளிப் பொருளைத் தருவதினும்

இன்சொல் பேசுதல் உயர்வாகும்!


அகமும் முகமும் மலர்ந்திருக்க

இன்சொல் கூறுதல் அறமாகும்!


பணிவும் இன்சொல் பேசுதலும்   

அணிகல னாகும் மாந்தருக்கு!


இனிமை யாகப் பேசுவோரை

வறுமை என்றும் தீண்டாது!


இன்சொல் பேசுவோர் வாழ்வினிலே

பாவம் தேய்ந்தே அறம்வளரும்!


நன்மை வளர்க்கும் இன்சொல்லைப்

பேசினால் நன்மை உண்டாகும்!


துன்பம் தருதல் அற்பந்தான்!

இன்பம் தருவது இன்சொல்லே!


கனிகளை விட்டுக் காய்களையே

உண்டு களிக்க நினைப்பவர்போல்

இன்சொல் இருக்க வன்சொல்லை

விரும்பிப் பேசுதல் அறிவின்மை!


மதுரை பாபாராஜ்


விருந்தோம்பல் -- 9

 விருந்தோம்பல் -- 9

----------------------------------------------------------------

விருந்தளிக்கும் பண்பே குடும்பத்திற்கு அழகாகும்

----------------------------------------------------------------

ஈட்டல் காத்தல் இல்லறத்தில்

விருந்தின ரோடு மகிழ்வதற்கே!


வீட்டில் விருந்தினர் அமர்ந்திருக்க

அவரை விட்டுத் தனியாக

உண்பது மாபெரும் தவறாகும்!

அமிழ்தே எனினும் நஞ்சாகும்!


விருந்தின ரைத்தான் உபசரித்தால்

வாழ்க்கை வறுமையில் அழியாது!


மலர்ந்த முகத்துடன் வரவேற்றால்

திருமகள் அங்கே வசித்திருப்பாள்!


விருந்து முடிந்தபின் மிச்சத்தை

உண்பவர் நிலத்தில் பயிரினங்கள்

விதைக்கா மல்தான் வளர்ந்திருக்கும்!


வந்தவர் செல்ல வருவோரை

அன்புடன் வாழ்த்தி வரவேற்றால்

தேவர் உலகே மகிழ்ந்திருக்கும்!

அங்கே விருந்தினர் ஆகிடுவார்!


கருமித் தனமாய் இருந்தவரின்

செல்வம் அழியும் நேரத்தில்

விருந்தின் பயனே அறியாமல்

வாழ்ந்தேன் என்றே வருந்திடுவார்!


தொட்டுற வாடும் விருந்தினரைப்

பாரா முகமாய் வரவேற்றால்

மோந்ததும் வாடும் அனிச்சம்பூ

போல வாடித் தளர்ந்திடுவார்!


அன்புடைமை-8

 அன்புடைமை -- 8

-----------------------------------------------

வாழ்க்கையின் உயிர்நாடி அன்பே

-------------------------------------------------------

அன்பை அடைக்கும் தாழில்லை

உருகும் கண்ணீர் காட்டிவிடும்!


அன்பில் லாதோர் 

தமக்குரியர்!

தன்னலம் கொண்டே செயல்படுவார்!


அன்புடை யாரோ 

பிறர்க்குரியார்!

மற்றவர்க் காக 

செயல்படுவார்!


உயிரும் உடலும் இணைந்ததுபோல்

அன்பும் வாழ்க்கையும் இணைந்திருக்கும்!


அனைவரை நாடிப் பழகவைக்கும்!

நட்பை விழுதாய்ப் 

படரவைக்கும்!


அறநெறி காக்கும் 

அன்பிங்கே

வீரத் திற்குத் 

துணைபோகும்!


எலும்பே இல்லா 

உயிரினத்தை

வெய்யில் இங்கே 

துன்புறுத்தும்!


அன்பே இல்லா 

மாந்தரையோ

அறத்தின் கடவுள் 

துன்புறுத்தும்!


அன்பே இல்லா 

வாழ்க்கையோ

பாலை நிலத்தின் 

பட்டமரம்

துளிர்த்தது போன்ற 

நிலையாகும்!


உள்ளே உள்ள இதயத்தில்

அன்பே இல்லை என்றாலோ

வெளியே உள்ள உறுப்புகளால்

பயன்கள் என்ன  சொல்லுங்கள்?



மக்கட்பேறு

 மக்கட்பேறு---7

----------------------------------------------------------------

நல்லகுழந்தைகள் நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமை

----------------------------------------------------------------

அறிவும் ஆற்றலும் இணைந்துள்ள

குழந்தைச் செல்வம் உயர்செல்வம்!


பண்பான குழந்தையைப் பெற்றவர்க்கோ

தலைமுறை ஏழிலும் துன்பமில்லை!


நெறிகளைப் போற்றி வாழ்ந்திருந்தால்

குழந்தைகள் நல்லவ 

ராகிடுவார்!


மழலைக் கைகள் பிசைந்திட்ட

எச்சிச் சோறு பெற்றோர்க்கு

அமுதை விஞ்சும் சுவைதானே!

அருமை அருமை அருமைதான்!


குழந்தை உடலைத் 

தீண்டுவது

தழுவிய மேனிக்கு 

இன்பந்தான்!


மழலையைக் கேட்டு 

மகிழாதோர்

குழலிசை யாழிசை இனிதென்பார்!


கற்றவர் அவையில் தன்மகனோ

நிற்கும் தகுதியைக் கல்வியாலே

தந்தை தருவது கடமைதான்!


தங்களைக் காட்டிலும் குழந்தைகள்

அறிவால் உயர்ந்தால் அகமகிழ்வார்!


சான்றோர் என்றே பிறர்சொன்னால்

பெற்ற பொழுதினும் தாய்மகிழ்வாள்!


இத்தகைய பிள்ளைகள் பெற்றெடுக்க

தந்தை செய்த தவமென்ன

என்றே உலகம் வியக்குமாறு

செய்வது பிள்ளைகள் கடனாகும்!


மதுரை பாபாராஜ்


வாழ்க்கைத்துணைநலம்

 வாழ்க்கைத் துணநலம்--6

-----------------------------------------------

இல்லறம் சிறப்பது பெண்களாலே

-------------------------------------------------------

பிறந்தவீடு புகுந்தவீடு போற்றிடவே

வருவாய்க்குள் வாழ்பவளே நல்மனைவி!

பண்பற்ற இல்லாளின் இல்லத்தில்

பொன்பொருள் சேர்ந்தாலும் மதிப்பில்லை!

கற்பென்னும் மனவுறுதி கொண்டவளே

பெண்குலத்தின் ஒளிவிளக்காய்த் திகழ்கின்றாள்!

கணவனையே தெய்வமாக மதிப்பவளோ

பெய்யென்றால் பெய்துவிடும் நல்மழைதான்!

கணவனின் குடும்பத்தின் புகழ்தன்னைக்

காப்பவளே பெண்ணாவாள் மண்ணுலகில்!

மங்கையின் உடலுக்கே சிறைக்காப்பு!

உள்ளத்தின் சிந்தனைக்கு முடியாது!

பேரடக்கப் பண்புகளால் மங்கையிங்கே

காக்கின்ற நெறிமுறைதான் சிறப்பாகும்!

மண்ணுலகில் கணவனையே தெய்வமாக

எண்ணிவாழ்ந்தால் விண்ணுலகும் வாழ்த்திநிற்கும்!

கணவனின் புகழ்விளக்கைக் காக்காத

காரிகை அமைந்துவிட்டால் பகைவர்முன்

கணவருக்குச் சிங்கநடை இல்லையம்மா!

மனைவியே இல்லறத்தின் மங்கலமாம்!

பிள்ளைகள் குடும்பத்தின் அணிகலனாம்!

மதுரை பாபாராஜ்



இல்வாழ்க்கை

 இல்வாழ்க்கை ---5

----------------------------------------------------------------

அறவழி சிறந்த வழி பெருமைக்கு உகந்த வழி

---------------------------------------------------------------

மனைவி யுடனே இணக்கமாக

வாழ்பவன் இங்கே சிறந்தவனாம்!

பிள்ளைகள் பெற்றோர் உறவினரைப்

பேணிக் காப்பதில் வல்லவனாம்!

நல்லறம் போற்றும் துறவிகளை

வறுமைப் பிணியில் துடிப்போரை

முன்னோர் மற்றும் விருந்தினரைக்

காப்பதே அவனுக்கு அறமாகும்!

நேர்மையான வழியினிலே

சேர்த்த பொருளை உறவோடு

பகுத்தே உண்டு வாழ்பவனின்

வாழ்க்கை என்றும் சிறப்பாகும்!

உண்மை யான அன்புடனே

நல்லறம் போற்றி வாழவேண்டும்!

பிறவழி சென்று வாழ்பவனை

அறவழி வாழ்வோன் வென்றிடுவான்!

இல்லறந் தன்னில் துறவறத்தை

ஏற்பவன் வல்லமை நிமிர்ந்திடுமே!

பழிச்சொல் இன்றித் துறவறத்தை

ஏற்று வாழ்தல் சிறப்பாகும்!

இல்லற வாழ்வை மேற்கொண்டோன்

தேவருள் தேவரெனப் புகழ்பெறுவான்!


அறன்வலியுறுத்தல்

 அறன்வலியுறுத்தல்! 4

-----------------------------------------------

அறவழி சிறந்த வழி 

பெருமைக்கு உகந்த வழி

------------------------------------------------------

செல்வம் புகழும் சேர்ப்பதற்கு

அறவழி தானே சிறந்தது!


அறங்கள் செய்வது நன்மைதான்!

மறப்பது என்றும் தீமைதான்!


இயன்ற வரையில் அறச்செயல்கள்

செல்லும் இடமெல்லாம் செய்வோமே!


மனதில் கள்ஙகம் சுமந்தேதான்

செய்யும் அறச்செயல் பகட்டேதான்!


பொறாமை ஆசை கோபங்கள்

மனதைப் பிழியும் கடுஞ்சொற்கள்

இவைகளைத் தவிர்ப்பதே அறமாகும்!

தவிர்த்தால் வாழ்க்கை சிறப்பாகும்!


இளமையில் வேண்டாம் முதுமையிலே

அறங்களைச் செய்வோம் என்றேதான்

ஒத்திப் போட வேண்டாமே!

இன்றே செய்தல் விவேகந்தான்!


அறத்தைச் செய்வோர் உயர்ந்தவராம்!

செய்யா தவரே தாழ்ந்தவராம்!


அறத்தைத் தொடர்ந்து செய்திடுவோம்!

இந்தப் பிறவியை வென்றிடுவோம்!


அறவழிச் செயலில் புகழ்மணக்கும்!

பிறவழிச் செயலில் பழிமணக்கும்!


மதுரை பாபாராஜ்


நீத்தார் பெருமை -குழந்தைப்பாடல்

 நீத்தார் பெருமை --3

----------------------------------------------------------------

புலன்களை அடக்கு புகழின் சிகரம் நிச்சயம்

----------------------------------------------------------------

ஆசையை விட்டே ஒழுக்கமுடன்

வாழ்ந்தால் புகழும் நூல்கள்தான்!

இறந்தவர் எண்ணிக்கை அளவிடல் அரிது!

துறந்தவர் பெருமையும் அளவிடல் அரிது!

இல்லறம் துறவறம் இரண்டையுமே

நன்றாய் அலசி ஆராய்ந்து

துறவை ஏற்றோர் பெருமைதான்

உலகில் உயர்ந்தது பார்!பார்!பார்!

வலிமை என்னும் அங்குசத்தால்

அய்ம்புலன் அடக்கும் தூயவனே

வீடு பேற்றின் விதையாவான்!

ஐம்புலன் ஆசையை அடக்கியவன்

ஆற்றலின் சாட்சி இந்திரன்தான்!

செய்ய முடியாப் பெருஞ்செயலைச்

செய்து முடிப்பவர் பெரியோராம்!

முடிக்கத் தவிப்போர் சிறியோராம்!

ஐம்புலன் ஆசையை வேரறுத்தால்

வையகம் வசப்படும் உணர்வாயே!

அறிவில் சிறந்தவர் என்பதையோ

பேசும் மணிமொழி காட்டிவிடும்!

துறவிகள் கோபம் சீண்டாதே!

நம்மைக் காப்பது அரிதாகும்!

ஏற்றத் தாழ்வே இல்லாமல்

அன்பாய்ப் பழகுவோர் சான்றோராம்.


வான்சிறப்பு குழந்தைப்பாடல்

 வான்சிறப்பு --2

--------------------------------------------------------------------------------------------------------------------------------

மழை இல்லையேல் உயிரினம் இல்லை

-------------------------------------------------------------

வான்மழை செழிப்பைத் தருவதாலே

வான்மழை நமக்கு அமுதந்தான்!

உணவைச் சமைக்க உதவிடுமே!

தானும் உணவாய் மாறிடுமே!

மழையோ பெய்யத் தவறிவிட்டால்

உயிரினம் பசியால் துடித்திடுமே!

வளமாய் வாழ்ந்தோர் வளமிழப்பார்!

மழையோ இங்கே பொழிந்துவிட்டால்

வளத்தை இழந்தோர் வளம்பெறுவார்!

மேகம் மழையைப் பொழியாமல்

வேக மாக நகர்ந்துவிட்டால்

பசும்புல் நுனிகள் தழைக்காது!

அலைகடல் இங்கே வற்றிவிடும்!

வாழ்க்கை எல்லாம் வறண்டுவிடும்!

உலகின் இயக்கம் நின்றுவிடும்!

பூசை திருவிழா நடக்காது!

தான தர்மம் நடக்காது!

மனிதம் இங்கே வளராது

ஒழுக்கப் பண்பு இருக்காது!

தண்ணீர் மட்டும் இல்லையேன்றால்

யாருக்கும் இங்கே வாழ்வில்லை!



கடவுள் வாழ்த்து குழந்தைப்பாடல்


அறத்துப்பால்

--------------------------------

திருக்குறள்

------------------------------

கடவுள் வாழ்த்து 1

-----------------------------------------------

தமிழின் தொடக்கம் அகரம்

உலகின் தொடக்கம் இயற்கை

-------------------------------------------------------

எழுத்தின் தொடக்கம் அகரந்தான்!

உலகின் தொடக்கம் இறைவன்தான்!

இறைவனை முறையாய் வணங்கிடுவோம்

இல்லையேல் கற்றது வீணாகும்!

நினைக்க நினைக்க நிம்மதிதான்!

நீண்ட காலம் வாழ்ந்திடலாம்!

துன்பம் நம்மை நெருங்காது

தீவினை நம்மைச் சேராது!

ஆசை தன்னை அடக்கித்தான்

ஒழுக்கத் தோடு வாழ்ந்திடலாம்!

அவனடி பணிந்தால் போதுமே

கவலைகள் எல்லாம் நீங்குமே!

மறந்து போன மற்றவர்க்கோ

கவலைகள் நிலையாய் மாறிடுமே!

ஆசைக் கடலைக் கடப்பதற்கோ

அன்புத் தோணி இறைவன்தான்!

----------------------------------------------------------------


இறைவனைப் பணியாத் தலைகளோ

இயங்காப் புலன்போல் பயனில்லை!


சரணம் அடைந்தால் திளைக்கலாம்!

பிறவிக் கடலை நீந்தலாம்!



Monday, March 23, 2026

1330இன்பத்துப்பால்


 

E S NIKHIL ABISHEIK GREETINGS


 Greetings to E.S.NIKHIL ABISHEIK for his research paper won the first prize in AI project!

B.Tech (AI) SECOND YEAR

ஆய்வறிக்கை தந்தே முதல்பரிசு வென்றுவிட்டாய்!

ஆரவார மற்ற உனது அணுகுமுறை 

பார்த்தே வியந்தோம்! பலவிருது தேடிவரும்!

ஆர்வமே வெற்றியின் வித்து.

மதுரை பாபாராஜ்

ChatGPT

You placed your research with quiet grace—

and won the very first prize.

No noise, no show—just calm resolve;

we stood amazed at your approach.

Now honors seek you, one by one—

for passion is the seed of every victory.

1329இன்பத்துப்பால்


 

1328இன்பத்துப்பால்


 

1327இன்பத்துப்பால்


 

1326இன்பத்துப்பால்


 

1325இன்பத்துப்பால.


 

1324இன்பத்துப்பால்


 

1323இன்பத்துப்பால்


 

1322இன்பத்துப்பால்


 

1321இன்பத்துப்பால்


 

1320இன்பத்துப்பால்


 

1319இன்பத்துப்பால்


 

1318இன்பத்துப்பால்


 

1317-இன்பத்துப்பால்


 

1316இன்பத்துப்பால்


 

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


உங்களிடம் இல்லையென்று என்றும் குறைபாடும்

பண்பை நிறுத்துங்கள்! உள்ளதை வைத்தேதான்

உள்ளம் மகிழ்ச்சியில் வாழ்ந்தே சிறப்பாக

என்றென்றும் சாதித்து வாழ்.


மதுரை பாபாராஜ்

Sunday, March 22, 2026

1315இன்பத்துப்பால்


 

எதையும் தாங்கப்பழகு


 

நண்பர் சேதுமாதவன்


 🙏

நண்பர் சேதுமாதவன் அனுப்பியதற்குக் கவிதை!


கடலலையைப்  பார்த்துக் குளம்பியைக் காலைப்

பொழுதில் ரசித்துக் குடிக்க அனுப்பி

வணக்கத்தைக் கூறுகின்ற நண்பரின் நட்பை

இணக்கமுடன் வாழ்த்துகிறேன் நான்.


மதுரை பாபாராஜ்

மெய்வருத்தக் கூலி தரும்

 கிடைப்பதில் வாழ்வோம்!

(மெய்வருத்தக் கூலி தரும்!)

கிடைப்பதோ என்றும் கிடைக்கும்! நமக்கு

கிடைக்கவே கூடாது என்றால் நமக்கு

கிடைக்காது! நாமோ முயற்சிக்க வேண்டும்!

கிடைப்பதை ஏற்கின்ற பக்குவம் வேண்டும்!

கிடைப்பதில் வாழப் பழகு.

மதுரை பாபாராஜ்

ChatGPT

Let us live in what is given!

What is meant to come shall surely arrive;

What is not ours will never be ours.

Yet we must strive—unceasing, sincere;

And learn the grace to accept what comes near.

So train your heart, in wisdom to dwell,

And live in the gifts that life grants well.

நண்பர் தென்காசி கிருஷ்ணன்


 தென்காசி கணியன் கிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்து!(22.03.26)


கடலலைகள் பாடும் திருச்செந்தூர் ஊரில்
குறள்வெண்பா நாயகர் தென்காசி நண்பர்
சிறப்பாக நிற்பதை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

1314இன்பத்துப்பால்


 

1313இன்பத்துப்பால்


 

1312இன்பத்துப்பால்


 

1311இன்பத்துப்பால்


 

1310இன்பத்துப்பால்


 

Saturday, March 21, 2026

புரிதலின் தவறு

 புரிதலின் தவறு!

ஒருசிலர் என்னோடு பேசவே மாட்டார்!

ஒருசிலர் நட்பை விலக்கியே வைப்பார்!

புரிதல் நடத்தும் தவறிது என்றே

புரிந்தால் சரிதான் உணர்.

மதுரை பாபாராஜ்

Friday, March 20, 2026

1309இன்பத்துப்பால்


 

வள்ளுவத்தைப் பினபற்றுவோம்


 

நண்பர் இசக்கிராஜன்


 நண்பர் இசக்கிராஜன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!

அகஙைத் திருநாள்: 21.03.26

நெல்லைத் தமிழில் குறளுக்கும் ஏனைய

பல்வகை யான இலக்கியப் பாடலுக்கு

நல்ல விளக்கத்தைத் தந்துவரும் நண்பரே!

நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

1308இன்பத்துப்பால்


 

1307இன்பத்துப்பால்


 

எதுவும் முடியாது

 எதுவும் முடியாது!


மகிழ்கின்ற நேரம் மகிழமுடி யாது!

அகங்குளிரும் நேரம் குளிரமுடி யாது!

வளங்காணும் நேரம் காணமுடி யாது!

உளைச்சலே வாழ்வென்றால். இந்தநிலை தானே

நிலையாகும் வாழ்வில் உணர்.


மதுரை பாபாராஜ்


ChatGPT


Nothing Is Possible!


When joy arrives —

I cannot rejoice.

When the soul longs

to cool and rest —

I cannot find that calm.

When the hour comes

to witness prosperity —

I cannot behold it.

If life is nothing

but ceaseless toil,

then know this truth:

such a state

becomes the very 

permanence

of living.


1306இன்பத்துப்பால்


 

1305இன்பத்துப்பால்


 

காட்சிப்பிழைகள்


 

1304இன்பத்துப்பால்


 

1303இன்பத்துப்பால்


 

1302இன்பத்துப்பால்


 

1301இன்பத்துப்பால்


 

Thursday, March 19, 2026

1300இன்பத்துப்பால்


 

1299இன்பத்துப்பால்