Friday, May 08, 2026
Monday, May 04, 2026
இருவர் ஆனால் ஒன்று!
இருவர் ஆனால் ஒன்று!
அருகில் படுத்தாள்! வருடிக் கொடுத்தேன்!
நெருங்கிப் படுத்தாள் நெகிழ்ந்து
கொடுத்தேன்!
உருகிக் களித்தாள்! உணர்ச்சியில்
வீழ்ந்தேன்!
இருவரும் ஒன்றானோம் இங்கு.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Two, Yet One!
She lay beside me — I gently traced her near,
She drew closer still — I melted, drawing dear.
She lingered in joy — I fell into feeling’s tide,
And there we became one… no more two, side by side.
உட்பகை தீது
உட்பகை தீது!
(முதல்வரி சொன்னவர் மு.ராஜ்குமார்)
கட்சிகள் தோற்றுவிடும்! சித்தாந்தம்
வெல்லலாம்!
பட்சிகள் தோற்றாலும் வான்பரப்பு
வெல்லலாம்!
முட்களை நீக்கினால் பூக்கள் தெரியலாம்!
உட்பகை வேர்விட்டால் தீது.
மதுரை பாபாராஜ்
ChatGPT
The Evil of Inner Strife!
Parties may fall, yet principles can rise;
Birds may falter, yet the vast sky survives.
Clear away thorns, and blossoms appear—
But when inner discord takes root, it brings ruin.
Sunday, May 03, 2026
Saturday, May 02, 2026
Friday, May 01, 2026
முத்திரை ஈட்டும் புகழ்
முத்திரை ஈட்டும் புகழ்!
பத்தோட ஒன்று பதினொன்று அத்தோட
வெற்றாய் இதுஒன்று என்றே இருப்பது
வெற்றியல்ல! நம்முடைய ஆற்றல் தனித்திறமை
முத்திரை ஈட்டும் புகழ்.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Fame that leaves its mark!
Not one among ten, nor the eleventh beside—
Not a hollow “one more” in a counted line;
That is no victory. True worth is this:
Our strength, our singular skill—
Carving a mark the world remembers.
— Madurai Babaraj
நண்பர் எழில்புத்தன்
நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!
புத்தபூர்ணி மாநாளில் நீங்களும்
உங்களது
அன்புக் குடும்பமும் நல்லமைதி அன்புடன்
என்றும் கருணை வளமுடன் புத்தரின்
நல்லாசி பெற்றேதான் வாழியவே
புத்தரின்
ஆசிகள் வாழ்வை மகிழ்ச்சியுடன்
உள்ளொளி
நாளும் பெருகவும் வாழ்க்கை முழுவதும்
ஆர்வமுடன் இங்கே தொடர்ந்து
ஒளிபடர்ந்தே
வாழ்வின் இருளகற்ற வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
Wednesday, April 29, 2026
நண்பர் பாலு நடராஜன்
நண்பர் திரு பாலு நடராஜன் அன்பிற்கு வாழ்த்து!
அழகான பைக்குள் அதிரசம் லட்டு
முறுக்குடன் மைசூர்பா மிக்சரை வைத்தே
நறுந்தமிழ் பாலு நடராஜன் தந்தார்!
சுவைத்தே மகிழ்கின்றோம் நாளும் ரசித்து!
அகங்குளிர நன்றியுடன் வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
வசந்தா
பெற்றோர் புதிர்
பெற்றோர் புதிர்!
பிள்ளைகள் பெற்றோர் பலவீனந் தன்னைத்தான்
சொல்லியும் காட்டுவார்! குத்தியும் காட்டுவார்!
பெற்றோரோ பட்டும் படாமல் பழகினால்
பிள்ளைக்குப் பெற்றோர் புதிர்.
மதுரை பாபாராஜ்






