பிறன் இல் விழையாமை--15
---------------------------------------------------------
பிறன் இல் விழையாமை--15
-------------------------------------------------------------
மற்றவர் பொருளைக் கவர்தல் அவமானமாகும்!
----------------------------------------------------------------
பிறருக் குரியதை விரும்பாதே!
அறத்தை விட்டே விலகாதே!
பொருளை நாடி அவர்வீட்டு
வாசலில் நிற்பது மடமைதான்!
நம்மை நம்பும் மனிதருக்குத்
துரோகம் செய்பவன் நடைப்பிணந்தான்!
துரோகம் செய்து துய்ப்பவர்கள்
பெரியவர் எனினும் சிறியோர்தான்!
பிறரது பொருளைக் கவர்பவரோ
அழியாப் பழியை ஏந்திடுவார்!
பஞ்சமா பாதகம் செய்பவரைப்
பகையும் பழியும் சூழ்ந்திருக்கும்!
தனக்கு மட்டும் உரியதையே
விரும்பி வாழ்பவர் சான்றோராம்!
பொறாமை வெறியை ஒதுக்கிவிட்டு
வாழ்வோர் ஒழுக்கச் சுடராவார்!
அடுத்தவர் பொருளை விரும்பாதோர்
அகிலம் போற்றும் உத்தமர்தான்!
கரடு முரடாக வாழ்ந்தாலும்
மாற்றார் பொருளை விரும்பாமல்
வாழ்வதே உலகில் சிறப்பாகும்!
மதுரை பாபாராஜ்








































