Tuesday, March 10, 2026
Monday, March 09, 2026
Sunday, March 08, 2026
Saturday, March 07, 2026
Friday, March 06, 2026
சிறகொடிந்த சிட்டு
சிறகொடிந்த சிட்டு!
வானளந்த சிட்டுக் குருவி சிறகொடித்து
ஏனோ ரசித்திருந்தார்? அத்தகைய ஏக்கத்தை
ஏனோ உணராமல் நாளும் துடிப்பதைப்
பார்த்தே சிரித்திருந்தார்? சொல்.
மதுரை பாபாராஜ்
ChatGPT
The Broken-Winged Sparrow
A sparrow that once measured the sky
Now stands with its wings broken.
Why did he watch and take delight?
Why savor such a sorrow?
Not sensing the ache within that fall,
He saw its daily trembling struggle—
And only stood there, smiling.
Tell me… why?
— Madurai Babaraj
தென் கி கவிதை ஆர்வம்
[06/03, 13:45] Vovkaniankrishnan:
கிவாஜவின் பாடலாம் பாட்டு படித்தும்
தவிக்கிறேன் இன்னும் கவிக்கு.
[06/03, 13:54] Vovkaniankrishnan:
உரைநடை யில்சிறப் பானதென் கிக்கு
வரவில்லை யேநற் கவி.
[06/03, 16:18] Madurai Babaraj:
சொன்னது யாரோ? கவிதை படைக்கின்ற
நம்பிக்கை உண்டே உணர்.
பாபா
[06/03, 16:40] Vovkaniankrishnan:
கவிதை எழுதலாம் எல்லோரும் உள்ளம்
கவிதையால் நிற்பின் நிறைந்து.
[06/03, 16:40] Madurai Babaraj:
குறள்வெண்பா நாளும் படைக்கின்ற
நீங்கள்
சிறப்பாய்க் கவிஞர்தான்! சொல்.
பாபா
Thursday, March 05, 2026
மகள் பிருந்தா பிறந்தநாள் வாழ்த்து
மகள் பிருந்தா ராஜ்குமாருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
அகவைத் திருநாள்: 06.03.26
மருமகன்: மு. ராஜ்குமார்
பேரன்: கோசல் கல்யாண்
கலகல வென்ற சிரிப்புடன் அன்பில்
திளைத்தே அருந்தமிழ்போல் பல்லாண்டு வாழ்க!
வளமுடன் வாழ்வில் நலமுடன் வாழ்க!
குடும்பத்தார் சூழ நிறைவுடன் வாழ்க!
மகத்தாக வாழ்கபல் லாண்டு
மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்
பூவின் பருவங்களும் வாழ்வின் பருவங்களும்
பூவின் பருவங்களும் வாழ்வின் பருவங்களும்!
அரும்பு (Anumbu): பூவின் முதல் நிலை - செடியில் தோன்றும் மிகச்சிறிய நிலை.
பிறந்த நிலையில் குழந்தை நிலைதான்
அரும்பாகும்! ஆர்வத் துடனேதான் சூழ்ந்து
அழுதேதான் கைகால் உதறும் அழகை
விழிகளால் காண்பார் ரசித்து.
மொட்டு (Mottu): அரும்பு சற்று பெரியதாக வளர்ந்த நிலை.
பாட்டி முதலானோர் உச்சிமோந்து
பாதுகாத்து
நாளும் வளர்ப்பார் மகிழ்ந்து.
முகை (Mukai): மொட்டு விரிந்து மலரும் நிலைக்கு முந்தைய பருவம், நறுமணம் வீசத் தொடங்கும் நிலை.
நறுமணம் வீச பொருளை உடலில்
துறுதுறுக் கண்கள் விழிக்கவே பூசி
நிறைவுடன் பார்த்திருப்பார் சூழ்ந்து.
மலர் (Malar): இதழ்கள் விரிந்து முழுமையாக பூத்த நிலை.
பருவ வயதடைந்தே பக்குவம் கண்டே
அரும்பிடும் நாணமுடன் பெண்மை சிரிக்கும்!
செருக்குடன் ஆணோ தலைநிமிர்ந்து பார்ப்பான்!
பருவம் முழுமைதான் பார்.
அலர் (Alar): பூ நன்றாக விரிந்து இதழ்கள் வளைந்த நிலை.
.இளமை முதலாய் முதுமை வரைக்கும்
களைகட்டும் வாழ்க்கைப் பருவமாகும் இங்கு!
நிலையென்றே எண்ணித்தான் ஏமாந்தே நிற்போம்!
உலகில் கொதிப்போம் களைத்து
வீ (Vee): பூ வாடி, செடியிலிருந்து உதிரும் நிலை.
நோய்நொடிகள் தாக்க முதுமையில் தள்ளாடி
வாழ்வைக் கடந்துவந்த பாதை அசைபோட
நாளும் கழிப்பதே இங்கே கவலையாக
வீடே சுமையாகும் இங்கு.
செம்மல் (Semmal): பூ கீழே உதிர்ந்து காய்ந்துபோன நிலை.
ஒளிவிளக்காய் வாழ்ந்து விழுந்தே இருளில்
ஒளியிழந்து என்று இறுதிப் பயணம்
தெரியுமோ என்றேதான் காத்திருப்போம்! நாம்தான்!
தெரியாமல் சென்றிடுவோம் நாம்.
மதுரை பாபாராஜ்

















































