Saturday, February 14, 2026
Friday, February 13, 2026
மனிதத் தேனீ புறந்தநாள்
பண்பாளர் மனிதத் தேனீ அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!
அகவைத் திருநாள் 13.02.26
இல்லற முத்துக்கள்:
இல்லத்தரசி:
திருமதி அலமேலு சொக்கலிங்கம்
மகன்:
திரு.சொ.ராம்குமார்
மருமகள்:
திருமதி நாச்சம்மை தேவி பூஜா
பண்பாளர் பக்குவத் தென்றல் கடமையில்
கண்ணுங் கருத்துமாய்ப் பம்பரமாய் அன்றாடம்
தன்னுழைப்பை ஈந்துகின்ற நண்பர்! எளிமையும்
கம்பீரப் பார்வையும் கேள்விக் கினியராய்
புன்னகை ஏந்தும் முகமுடன் இல்லறத்தில்
நல்லறம் காணுகின்ற சொக்கலிங்கம் வாழியவே!
வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு!
மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்
அம்மா நினைவுநாள்

[13/02, 10:48] Vovkaniankrishnan:
நினைவு தினத்தில் அடியேன் இரங்கி
மனதால் வழுத்துகி றேன்.
[13/02, 11:00] Vovkaniankrishnan:
முன்னோர் களைமறவா மல்நினைக்கும் தங்களது
நன்னெஞ்சு நாளும் சிறப்பு.
Thursday, February 12, 2026
1131இன்பத்துப்பால்
[13/02, 07:31] Vovkaniankrishnan:
உங்கள் கவிதை மனதிற்கு நல்விருந்து
எங்கும் பரப்பும் ஒளி.
[13/02, 07:36] Vovkaniankrishnan:
படித்ததைப் பார்த்ததைக் கேட்டதைக் கொண்டுத்
துடிப்பாய் வரைவீர் கவி.
[13/02, 07:38] Madurai Babaraj:
உங்கள் குறள் வெண்பாக்களுக்கு நான் அடிமை நண்பரே
[13/02, 07:47] Vovkaniankrishnan:
ஆர்வம் உழைப்பில் மிகுதியாய்க் கொண்டோர்கள்
சேர்ப்பார்கள் செல்வம் நிறைந்து
[13/02, 07:48] Vovkaniankrishnan:
*உங்களடி பேண வருமே குறள்.*
1127இன்பத்துப்பால்
[12/02, 15:38] Vovkaniankrishnan:
Wednesday, February 11, 2026
Tuesday, February 10, 2026
Monday, February 09, 2026
பாட்டி
கம்பூன்றி தெருவைக் கடக்கும் பாட்டி!
கம்பைத்தான் ஊன்றி நடந்தே தெருவைத்தான்
நம்பிக்கை கொண்டே கடப்பதைக் கண்டேன்நான்!
அம்மம்மா! தள்ளாடும் இந்த வயதிலே
என்ன துணிச்சலோ? சொல்.
மதுரை பாபாராஜ்
ChatGPT
An old granny crossing the street, leaning on a stick
Leaning on her staff, she crossed the road,
Trust alone her steady foothold showed.
Oh, grandma! At this wavering age so frail,
What courage is this—tell me, tell!
— Madurai Babaraj
பம்பரமாய் சுழன்று அம்பாக பாய்ந்து வெம்பாமல் தெம்பாய் பெரிய கொம்பாய் குடும்பத்தை நடத்தியது அன்று அருந்திய கம்பங்கூழ்... உடம்பை பாழாக்காமல் வைத்தாலும், பதுமை மாறிய முதுமை இன்று கம்பை துணை தேடியதோ...
Col Krishnamoorthy
யாரிங்கே சரிசெய்வார்?
யாரிங்கே சரிசெய்வார்?
தேர்போல வாழ்க்கையோ ஊர்ந்து நகர்ந்திருந்தால்
ஓர்நாள் நிலைசேரக் கூடுமிங்கே வாழ்க்கையோ
பாரிலே முன்னேற்றம் சற்றுமே இல்லையே!
கோலத்தை யார்சரிசெய் வாரிங்கே எப்போதோ?
காலமெல்லாம் இந்தநிலை ஏன்?
மதுரை பாபாராஜ்
ChatGPT
Who Will Set This Right?
If life crawls forward like a chariot slow,
Perhaps one day it may find its resting place.
Yet here on earth, not even a hint of progress shows—
Who will ever straighten this crooked design? When?
Why must this state endure through all of time?
ஆழங்காலும் ஆர்வமும்
ஆழங்காலும் ஆர்வமும்!
குறள்களில் ஆழங்கால் பட்டவர்க்கும் நாளும்
குறள்களை ஆர்வமுடன் கற்பவர்க்கும் உள்ள
சிறப்பான வேறுபாட்டைப் பேச்சால் எழுத்தால்
அறியலாம் வாழ்விலே நாம்.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Depth and Curiosity!!
Those who have plunged deep into the Kurals
and those who study them daily with eager hearts—
the subtle difference between the two
is revealed in speech and script,
and ultimately,
in the way they live.
அருமை ஐயா
அற்புத விளக்கம்
குறளின் நுணுக்கமான பகுதிகளை கற்றாரின் ஊடே
கற்பது அறிவுக்கு விருந்து
நன்றி ஐயா
திரு செல்வராஜ்
கேளம்பாக்கம்
எங்கள் முழங்கால் வரைதான் குறளின் கடலில் பட்டுள்ளது... ஆனால் பாபாராஜ் அவர்கள் ஆழமாக நீந்தி முத்துக்களை கொத்தாக எடுத்து தருகிறார்... இவருக்கு *குறள்ராஜ்* என்று புனைப்பெயரில் அழைத்தாலும் தகுமே...
Col Krishna moorthy
Brundhavan A6
















































