Monday, April 22, 2024

தனிமை

நண்பர் தென்காசி கிருஷ்ணன் கைவண்ணம்

 வாழ்வே தனிமைதான்!


வானொலி வந்தது! கேட்டு மகிழ்ந்திருந்தோம்!

வானொலி சென்று தொலைக்காட்சி வந்தது!

காணக் கிடைக்காத காட்சிகளைக் கண்டிருந்தோம்!

வாழ்க்கைப் பரபரப்பில் கைபேசி வந்தது!

ஆள்களின் கைகளில் கைபேசி! மூழ்கிவிட்டோம்!

ஆளுக் கொருமூலை நின்றேதான் பேசுகின்றோம்!

வீட்டில் இருந்தாலும் கைபேசி கையுமாய்

பாட்டிமுதல் இங்கே குழந்தைவரை இன்றிங்கே

வாழ்வே தனிமைதான் பார்.


மதுரை பாபாராஜ்

KRS KARAIKUDI:

தனிமையில் இனிமை காண முடியுமா என்ற கேள்விக்கு பதில் கை பேசி

நண்பர் இசக்கிராஜன் திருச்சி

கைபேசியும் போய் முகம் பார்த்து

வாயால் பேசும் வசந்தநாள் மீண்டும் வந்திடும் பார் ஒரு நாள்.


நண்பர் அன்பு வரைந்த ஓவியத்திற்குக் கவிதை


 👌🙏

நண்பர் அன்பு வரைந்த ஓவியத்திற்குக் கவிதை!


நூல்களைக் கற்றால் அறியாமை நீங்கிவிடும்!

நூலோர் அவையில் துணிந்தேதான் பேசலாம்!

நாலுதிக்கு சென்றே சிறப்புகள் சேர்க்கலாம்!

நூல்களே வாழ்வின் ஒளி.


மதுரை பாபாராஜ்

அழகர் திருவிழா பழைய நினைவு


மருமகள் சத்யாவின் கைவண்ணம் இன்று


 [23/04, 06:48] Madurai Babaraj: அழகர் திருவிழாவுக்குச் சென்றுவந்த நினைவு!

பாக்யம் பாட்டி--எங்கள் குடும்பம்-- அழகர்சித்தப்பா குடும்பம்--பத்மா சித்தப்பா குடும்பம்!

அந்தக்காலத்தில் மதுரை மோதிலால் இரண்டாம் தெருவில் இருந்து பாக்யம் பாட்டி தலைமையில் நாங்களும்,பத்மா சித்தப்பா குடும்பமும்,அழகர் சித்தப்பா குடும்பமும் சேர்ந்து அதிகாலையில் சிம்மக்கல் நோக்கி நடப்போம். கூட்டத்துடன் கூட்டமாக செல்வதே மகிழ்ச்சிதான். வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகரை் பார்த்துவிட்டு நடந்தே திரும்புவோம். வரும் வழியில் மாடர்ன் கபேயில் ஆளுக்கொரு காபி குடிப்போம். நீர்ப்பந்தல் மோர்ப்பந்தல் என்று ஒரே அமர்க்களந்தான்.

இன்று நினைத்தாலும் இனிக்கிறது.

மீண்டும் வருமா?

மதுரை பாபாராஜ்

[23/04, 06:59] Saravananddl: இனிய நினைவுகள் மட்டுமே மிஞ்சுகிறது. ஆளுக்கொரு பாதையிலே பயணம். ஒரு குடும்பம் ஒன்று சேருவதே பெரும் பிரயத்தனம். சேர்ந்தாலும் செல்லிடப்பேசியே பிரதானம். மீண்டும் வாய்ப்பு வருவது கனவுதான்.

Sunday, April 21, 2024

நண்பர் மொகலீஸ்வரன்


 நண்பர் மொகலீஸ்வரன் வீட்டு மரத்தில் மாங்காய்கள்!


நண்பரின் வீட்டில் கிளிமூக்கு மாங்காய்கள்

கண்கவரத் தொங்குகின்ற காட்சி ரசித்திருந்தோம்!

கண்டதே நன்றாய்ச் சுவைக்கிறதே! நாமணக்க

உண்டால் சுவைக்கில்லை ஈடு


மதுரை பாபாராஜ்

குறள்மணம் விருதாளர் சீனி வரதராசன்


 நண்பருக்குக் குறள்மணம்  விருது வழங்கும் விழா!

ஞாயிறு 21.04.24

வாழ்த்தி மகிழ்கின்றேன்!

சீனி வரதராஜன் ஆற்றும் திருக்குறள்

வான்புகழ்த் தொண்டுகளைப் பாராட்டிக் கொண்டாடும்

கல்லைத் தமிழ்ச்சங்கம் தேர்ந்தளிக்கும் நல்விருதை

முல்லைக் குறுநகை வேந்தர் பெறுகின்றார்!

வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்

 

நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!

கிடைக்கின்ற நேரத்தில் நீங்கள் பணியை
கடமையில் மூழ்கி முடிப்பது நன்று!
மகிழ்தலும் ஏற்பதுமே நன்று! உணர்வோம்!
அகமகிழ்ந்து வேலையைச் செய்.

மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில் புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


நாள்தோறும் இப்போதும் அப்போது மாகத்தான்
ஏதேனும் இங்கே நடந்துகொண்டே உள்ளது!
வாழ்வின் செயலைக் கவரும்! சிலநேரம்
வாரிவிடும்! அந்தப் பதற்றத்தைக் கண்டுணர்ந்தே
ஏற்ற பணிமுடிக்கப் பார்.

மதுரை பாபாராஜ்

Saturday, April 20, 2024

தம்பியின் நடிப்புத் திறமைக்கு வாழ்த்து

நண்பர் தென்காசி கிருஷ்ணன் கைவண்ணம்

 தம்பி கெஜராஜ் நடிப்புத் திறமைக்கு வாழ்த்து!


பிறந்தநாள் தொட்டுப் படிப்படியாய்த் தம்பி

சிறப்புகளைக் கண்டு மகிழ்கின்ற. அண்ணன்!

சிறகன் படத்தில் திறமையைக் காட்டும்

உடன்பிறப்பு வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

Friday, April 19, 2024

புளோரா குடும்பத்தினருக்கு வாழ்த்து


  Flora: எங்கள் குடும்ப புகைப்படம் கடைசி தங்கை வளைகாப்பிற்கு போன மாதம் எடுத்தது ஐயா

 Flora: நால்வருமே இறைவன் அருளால் ஆசிரியப்பணியை தொடர்கிறோம்.... 

Madurai Babaraj: 

நால்வருக்கும் வாழ்த்து!

அகத்தில் அறிவைப் புகட்டியே நாளும்

அகத்தில் அறிவொளி யேற்றுகின்ற தொண்டை

மகத்தாக செய்தே மனமுவந்து வாழும்

சிறப்பான தொண்டுதனை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

புறாக்கூண்டும் அடுக்ககமும்



 புறாக்கூண்டும் அடுக்ககமும்!


புறாக்கூட்டம் தங்கித்தான் மண்ணகத்தில் வாழ

புறாக்கூண்டு வைப்பதுபோல் மாந்தர்கள் வாழ

அடுக்ககம் கட்டித்தான் வாழ்கின்றார் இங்கே!

புறாக்கூட்டம் தங்கள் அறைகளை விட்டே

பறப்பதுபோல் மக்களும் வீடுகளை விட்டே

புறப்பட்டுச் செல்கின்றார் இங்கு.


மதுரை பாபாராஜ்

Wednesday, April 17, 2024

காலையில் குரோவ் வளாகம்


 காலைப் பொழுதில் குரோவ் வளாகத்தில் கண்ட காட்சி!


காக்கைகள் மற்றும் புறாக்களும் பூனைகளும்

வீட்டுக்கு வீடிங்கே பாலுறைகள் போடுவோரும்

நாட்டமுடன் செல்லும் நடைப்பயிற்சி மேற்கொள்வோர்

வீட்டில் அலுவலகம் பள்ளி பரபரப்பும்

காற்றிலே சீறிவரும் வண்டிகள் போட்டியிட

காவலர்கள் மற்றும் பணியாளர் எல்லோரும்

ஆட்டிப் படைக்கின்ற கோலத்தில் காலைதான்

லூட்டி அடிப்பதைப் பார்.


மதுரை பாபாராஜ்


Monday, April 15, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


சேருமிடம் மட்டுமல்ல எப்போதும் நம்குறி!
போகும் பயணம் அதன்மகிழ்ச்சி
எல்லாமே
வாழ்க்கையின் சாரம் உணர்.

மதுரை பாபாராஜ்

Sunday, April 14, 2024

பேரன் வருணுக்கு வாழ்த்து


 பேரன் வருணுக்கு வாழ்த்து!


ஆர்வமுடன் பேரன் வருணிங்கே பாடுகிறான்!

கேட்க செவிப்பொறியை மாட்டி ஒலிப்பொறியில்

பாடுகின்ற காட்சியைக் கண்டே ரசிக்கின்றோம்!

பேரன் வருணைத்தான் வாழ்த்து.


பாபா தாத்தா