Saturday, March 28, 2026

சிலம்புக்குறள்

 சிலம்புக்குறள்


வைகை ஆறு

வைகை வடகரை சேர்ந்தனர் மூவரும்!

பொய்யாக் குலக்கொடி அஃது.


கண்ணகிக்குத் துன்பம் விளையும் எனக்கருதி

கண்கவரும் பூக்களால் தன்னை


மற்றவர்கள் காணாத வண்ணம் உள்ளடக்கி

அப்போது பார்த்தாள் நடித்து.


நீர்நிறைந்த ஆறில்லை பூநிறைந்த ஆறாகும்

கூறி வணங்கினார் சேர்ந்து.


மரப்புணையில் ஏறித்தான்  தென்கரைக்குச் சென்றார்!


அகழிதன்னைச் சுற்றித்தான் சென்றனர்! பூக்கள்

அகம்நடுங்கப் பார்த்தன அங்கு.


மதில்கொடிகள் காற்றில் அசைவதோ நீங்கள்

மதுரை வராதீர்கள் என்று


கரமசைத்துக் காட்டுதல்போல் அங்கே அசைந்து

பறந்ததாய்ச் சொல்கிறது பா.


மூதூர்ப் புறஞ்சேரி தன்னை அடைந்தனர்

மூவரும் நாடித்தான் வந்து.


ஊர்காண் காதை


ஞாயிறின் செங்கதிர்கள் மாமதுரை மூதூரைத்

தூவி எழுப்பியது காண்.


கோயில் முரசுகள்  மங்கல வாழ்த்திசைக்க

கோயில் நகரழகைப் பார்.


கவுந்தி அடிகளிடம் கண்ணகியைச் சேர்த்தான்!

பெருவணிகர் தன்னை நகரில்


அறிமுக மாவதற்குக் கோவலன்

சென்றான்!

கடிந்துகொண்டான் தன்னை நிலைக்கு.




மாநகர்க் காட்சிகள்


பொதுமகளிர் வைகை நதிப் புனலில்

புதுப்புனல் ஆடினர் சூழ்ந்து.


அந்திப் பொழுதில்  மலர்ப்படுக்கை மீதிலே

தங்களது காதலர் பார்க்க


கார்காலம் போன்று வரும் பலகாலம்

பார்ப்பதற்கே இன்புற்றார் பார்.


ஊடல் முடிந்ததும்  கூடல் தொடர்வதற்கு

நாடுகின்ற செல்வந்த ரோடு


அரசரும் நாடி வரும்புகின்ற காமக்

கிழத்திகளில் சென்றிருந்தான் பார்த்து.


பலபொருள்கள் விற்கின்ற அங்காடி வீதி

வலம்வந்தான் கோவலன் பார்த்து.


மதுரையைப் பார்த்தான்! கொடுகள் அசையும்

மதிற்புறம் வந்தான் மீண்டு.


அடைக்கலக்காதை


கோவலன் கணிப்பு


செங்கோல் வழுவாது அருளாட்சி செய்கின்ற

வண்டமிழ்ப் பாண்டியன் நாடு.


மக்கள் செல்வச் செழிப்பிலே வாழ்கின்றார்!

 விளக்கினான் வந்து.


மாடலன் வந்தான்! கோவலன் ஆசிகளை

நாட வணங்கிணான் அங்கு.


கோவலனைக் கேட்டறிந்தான்! மாடலன்

ஆவலுடன் பேசினான் கேட்டு.


ஆயிரத் தெட்டுக் கழஞ்சுபொன்னை மாதவிக்கு

காவியமாய்த் தந்தான்பார் வேந்து.


மாதவி ஈன்றெடுக்கும் பெண்குழந்தைக் கென்னபெயர்

சூடலாம் என்றதும் நீயும்


வரலாற்றைச் சொல்லி மண்மேக லையே

பெயராக வைப்போமென் றாய்.


மாதவி பெண்குழந்தை பெற்றெடுத்தாள்! ஆயிரம்

மாதர்கள் சூழ்ந்தேதான் நின்று


மணிமே கலையென்றே வாழ்த்தி மகிழ்ந்தார்!

இனிமையாய்க் கொஞ்சினாள் தாய்.


அப்போது கோலூன்றி வந்த மறையோனோ

அக்கறையாய் வந்தான் தவித்து.


தானம்தா என்றேதான் கேட்டுநின்றான் கோவலனே!

யானையொன்று்சீறிவந்த தங்கு.


மறையோனை யானை துதிக்கையால் பற்ற

நடைபோட்டாய் வீரமுடன் நீ.


யானையுடன் போரிட்டே அந்த மறையோனை

வீரமுடன் காத்தாய் உவந்து.


தானங்கள் வீரத்தைக் கோவலன் செய்ததை

போற்றிப் புகழ்ந்திருந்தான் அங்கு.


பண்டை வினைப்பயனே கண்ணகி யோடுவந்தாய்!

சொன்னான் மாடலன் நின்று.


அடைக்கலக்காதை

நிறைவு


சிலம்புக்குறள்

 

சிலம்புக்குறள்

மதுரைக் காண்டம் 2


மூவரும் சென்றிருந்த நேரத்தில்தோன்றியதே

கானுறை தெய்வந்தான் அங்கு.


மாயவித்தை வேடத்தீல் அங்கே வசந்தமாலை

போலவே வந்தது நின்று.


மாயத்தை நன்கறிந்த கோவலனோ மந்திரத்தைச்

சீலமுடன் சொன்னான் நினைந்து.


கொற்றவை மந்திரத்தைச் சொன்னவுடன் தெய்வமும்

அப்பொழுதே நீங்கியது சென்று.


ஐயையின் கோட்டம் அடைந்தனர் மூவரும்!

மயக்கமுடன் தங்கினர் அங்கு.


சாலினி கண்ணகியை அங்கே எயினருக்குக்

காட்டினாள் போற்றினாள் காண்.


புகழுரையைக் கேட்டதும் கண்ணகி, நாணம்

அகமேந்த நின்றாள் குனிந்து.


கோவலனின் பின்னே ஒளிந்தேதான் நின்றிருந்தாள்

கோமகள் புன்னகை பூத்து.


புறச்சேரி இறுத்த காதை!


இரவில் பயணிப்போம் என்றேதான் எண்ணி

களைப்புடன் காத்திருந்தார் காண்.


திங்கள் மறைவதற்கும் வெண்ணிலவு தோன்றவும்

துன்பமுடன் காத்திருந்தார் அங்கு.


விடிய விடிய நடந்தனர் மூவர்!

கதிரவன் வந்தான் விடிந்து.


காட்டிலே வாழ்கின்ற  கோழிகள் கூவின!

கேட்டபடி சென்றனர் சேர்ந்து.


முப்புரி நூலணிந்தோர் ஊரருகில்

அப்புறத்தில் நின்றனர் பார்த்து.


கோசிகன் கூற்று


கோவலனைப் பார்த்தறிந்தான் கோசிகன்! இன்பமுடன்

ஆவலுடன் சொன்னான் மகிழ்ந்து.


கோவலனே! உன்தந்தை ஏவலரை நான்குதிக்கும்

ஏவியே தேடுகின்றார் இங்கு.


தந்தையின் சொல்கேள்! அதுதான் நலமளிக்கும்!

என்றுரைத்தான் கோசிகன் தான்.


கானகம் சென்றுவிட்ட ராமன் பிரிவாலே

வாடிய மாநகர் போல


உனது பிரிவால் புகார்நகர் இன்றோ

அனல்புழுவாய் ஆனது பார்.


மதுரைக் காண்டம் 3


மாதவி மடல்

 

கோவலனே! மாதவி தந்த மடல்தன்னை

வாங்க மறுத்துவிட்டாய் நீ.


மீண்டும் மடலெழுதித் தந்தனுப்பி உன்னிடம் 

காணுமாறு சொன்னாள் அவள்.


படித்தான் தெளிந்தான்! பிழைசெய்தவன் நானே!

முடிவெடுத்தான் கோவலன் தான்.


தந்தையிடம். இம்மடலைக் காட்டுவாய் கோசிகனே!

தந்தான் மடலை களைத்து.


மதுரை தூரம் எவ்வளவு?


கொற்றவைப் பாடலைப் பாணருடன் கோவலனோ

நற்றமிழால் பாடினான் சேர்ந்து.


பாணரிடம் மதுரையின் தூரத்தைக் கேட்டான்!

தூரமில்லை,பக்கமென்றார் பார்த்து.


விடியல் பொழுதில் மதுரை நகரை

துதித்தே நெருங்கினர் காண்.


அரண்மணை திக்கில் காலை முரசும்

உளங்கவர் வேதமும் வீரர்


முரசொலியும் யானை முழக்கமும் மற்றும்

பரியின் கனைப் பொலி


கிணப்பறை ஓசை வரவேற்க மூவர்

மனதால் மகிழ்ந்தனர் பார்த்து.


சிலம்புக்குறள்

 சிலம்புக்குறள்

கண்ணகியின் கனவு

கனவொன்று கண்டேன்நான்! என்கணவன் வந்தே

எனையழைத்துச் சென்றான் நகர்க்கு.


கணவரின் மீது பழிசுமத்தி தீங்கின்

அனல்பட வைத்த தரசு.


மனக்கனவு எல்லாம் உரைத்திட மாட்டேன்

எனச்சொல்லி நின்றாள் உரைத்து.


கோவலன் நின்றான் கடைவாநில் பக்கம்!

ஆவலுடன் சென்றான் நுழைந்து.


செல்வத்தை எல்லாம் தொலைத்தேன்! வறுமையில்

உள்ளேன்! தலைகுனிந்தான் நின்று.


கண்ணகி கோவலனைப் பார்த்தாள்! சிலம்புகள்

உண்டே எனச்சொன்னாள் பார்த்து.


மதுரைக்குச் செல்வோம் புறப்படு நீதான்!

தொடுத்தான் புறப்பட்டாள் அங்கு.


சிலம்புக் குறள்


 நாடுகாண் காதை


இருவரும் மாளிகை விட்டே விடியல்

பொழுதிலே சென்றார் நடந்து.


புகாரை விட்டே நீங்குதல்


திருமாலின் கோயில்,அரசமரம், மற்றும்

அரங்குகள் ஏழைக் கடந்து


அருகப் பெருமானின் கோயில்,

மிளிரும்

சிலாவட்ட மேடை கடந்து


பெரும்புகழ் பாடும் புகார்நகர் விட்டே

இருவரும் சென்றார் இணைந்து.






கவுந்தி அடிகள் சந்திப்பு


நடந்து களைப்புற்ற கண்ணகி பார்த்தாள்!

அகத்திலே அன்புடன் பார்த்து


அன்பரே! மாமதுரை எவ்வளவு தூரம்?

என்றே வினவினாள் பார்.


"முப்பது காததூரம்"கோவலன் சொல்லித்தான்

உற்றவளைப் பார்த்தான்  சிரித்து.


கவுந்தி அடிகளைக் கண்டு வணங்கித்

தொழுதெழுந்தான் கண்ணகி யோடு.


மதுரைக்குச் செல்கின்றீர் நானும்

துணையாய்

மதுரை வருகின்றேன் என்று


கவுந்தி அடிகள் உரைத்ததும் உள்ளப்

பெருக்குடன் நின்றார் மகிழ்ந்து.


போகும் வழியெல்லாம் துன்பத்தின் வேதனைகள்

கூடுகட்டிக் காத்திருக்கும் பார்.


எல்லாம் உரைத்தார் கவுந்தி அடிகள்தான்!

மெள்ள நகர்ந்தார் நடந்து.


 சாரணர் வந்தே அருகப் பெருமானின்

பேரருளைச் சொன்னார் உவந்து.


கவுந்தி அடிகள் வணங்கிப் புகழந்தார்!

அருளெண்ணி சென்றார் தொடர்ந்து.


தரந்தாழ்ந்த தீயோர்கள் எள்ளிநகை யாட

அவர்களை காட்டு நரியாய்


உலவச் சபித்தார் கவுந்தி அடிகள்!

உலவினர் ஊளையிட்டு் தான்.


யானையை வென்ற கோழிபெயர் ஏந்துகின்ற

தேனூர் துறையூர்க்கு வந்து


தொடர்ந்தார் பயணத்தை! பூம்புகார்க் காண்டம்

நிறைவுற்ற கோலமிது கூறு.

மதுரைக் காண்டம் 1


உறையூரை நீங்கி விடியற் பொழுதில்

நடைபயின்றார் மூவர் விரைந்து.


மண்டபம் ஒன்றில் மறையோனைக் கண்டனர்!

தங்கினர் ஓய்வெடுக்கத் தான்.


பாண்டிய மன்னனின் வீரப் புகழ்சொல்லி

வாழ்த்தினான் சான்றோன் மகிழ்ந்து.


வேனிற் பருவத்தில்  காரிகையைக் காட்டுவழி

ஏனோ அழைத்துவந்தாய்? கூறு.


நீண்டதொரு பாலை கடந்தால் 

வழிமூன்று

காண்பாய்! வலப்புறம் செல்.


எயினர் குடியிருப்பும் ஐவனமும் தாண்டி

எழிலாய் சிறுமலை காண்.


அங்கே வலப்புறம் சென்றால் மதுரைநகர்

சென்றடைவாய் நீயே! உணர்.


இடப்புறம் சென்றால் இயக்கமாது தோன்றி

விடைகேட்பாள்! கூறவில்லை என்றால்


பொய்கைகள் மூன்றின் கரைகாட்டி சென்றிடுவாள்

தொய்வின்றிப் போகலாம் நீ.


நடுவழியில் சென்றால் காடுகள் காண்பாய்!

நெடும்பயணம் செல்கவே நீ.


கவுந்தி அடிகள் நெடிய வழியில் 

கருத்துடன் செல்கின்றோம் நாம்.


சொன்னதும் சான்றோன் விடைபெற்றுச்  சென்றுவிட்டான்!

அங்கே நகர்ந்தார் நடந்து.


சிலம்புக்குறள்

 சிலம்புக்குறள்


விஞ்சையன் வருகை


விஞ்சையன் காதலிக்கு ஊர்காட்டிக் கூறுகின்றான்

இந்ர விழாவைக் குறித்து.


அகத்தியர் சாபத்தால் ஊர்வசி இங்கே

புகாரிலே மாதவியாய் வந்து


பிறந்தாளாம் மண்ணில் கணிகைக் குலத்தில்!

நடனத்தைக் காண்போம் வா!


கொடுகொட்டி,பாண்டரங்கக் கூத்து வகையை

அடுத்தடுத்து பார்ப்போம் நாம்.


அல்லியத் தொகுதியுடன் மல்லாடல் கூத்துடன்

துய்ப்பாய்த் துடிகொட்டிக் கூத்து.


குடைக்கூத்தும் ஆடும் குடக்கூத்தும் பேடி

இடைக்கூத்து பார்ப்பாய் ரசித்து.


மரக்காலும், பாவை,கடையக்கூத் துந்தான்

தரமாகக் காண்போம் வியந்து.


மாதவியின் அழகு!


வண்ண அணிகலன்கள் பேரழகா? மாதவியின்

பொன்மேனி பேரழகா என்று


கண்மயக்கம் கொள்ளுமாறு மாதவி தன்னைத்தான்

அங்கங் கழகுசெய்தாள் காண்.


கானல்வரி


ஆடவர் தப்புகளை ஆரணங்கின் கற்புவாழ்க்கை

நாடறியக் காக்கிறதே என்று


காவிரியை எண்ணித்தான் பாடினான் கோவலன்!

 பூமனதில் ஊடினாள் மாது.


பெண்ணின் பெருமை ஒழுக்கத்தைப் போற்றுகின்ற

நன்னெறி ஆண்களால் தான்,


சோழன் நெறிமாறா நல்லொழுக்கத் தால்தான்

காவேரி பூரித்தாள் சொல்.


மாதவியின் இப்பாடல் கோவலனின் உள்ளத்தில் 

ஊடலைத் தூண்டிய( து) அங்கு.


மாதவியும் கோவலனும் மாறுபட்டே எண்ணியதால் 

ஊடலுடன் வேறுபட்டார் நின்று.


இருவரும் வெவ்வேறு திக்கில்  பயணம்!

இருவரும் பிரிந்தனர் சென்று.


மதுரை நோக்கி


மாதவி தன்னில்லம் சென்றாள்!

கோவலனைப்

பார்க்கத் தவித்தாள் தனித்து.


மேல்நிலை மாடத்தைச் சேர்ந்தவள் யாழெடுத்தாள்!

வாய்ப்பாட்டுப் பாடினாள் அங்கு.


முடிக்கும் பொழுதோ பிரிவுத் துயரால்

துடித்தது பாடல் முடிவு.


தாழம்பூ  வெள்ளி இதழிலே தீட்டினாள்

கோவலனை நாடி மடல்.


தோழியிடம் தந்தனுப்பி கோவலனை இங்கழைத்து

வாவென்றாள்! அன்பால் பணித்து.


மடலைத் தந்ததும் கோவலன் ஏற்க

மறுத்தான் நடித்தாளே என்று.


நடிப்புக் கலைகூறும் எட்டுவரி சொல்லி

நடித்தாளே என்றான் சினந்து.


மடலளித்தேன்! ஏற்க மறுத்தான் !

முகம்குனிந்தாள் தோழி தவித்து.


மாதவி மனம்


இருந்தாலும் கோவலன் வந்திடுவான்

 காலைப்

பொழுதிலென்றே ஏங்கினாள் மாது.


தேவந்தியின் வேண்டுதல்


அச்சாத்தன் கோயிலில் தேவந்தி

 கண்ணகியின்

வற்றாத் துயர்தனைப் போக்கு,


என்றேதான் வேண்டினாள்! கண்ணகி

 இல்லம்போய்

உன்துயரம் போகுமென்றாள் பார்த்து.


சிலம்புக்குறள்

 சிலம்புக்குறள் - 3

மாதவியுடன் கோவலன்

நிலாமுற்றந் தன்னிலே இன்பக் களிப்பில்

உலாவந்தார் மெய்மறந்து தான்.


ஊடலும் கூடலும் மாறிமாறி ஆட்சிசெய்ய

தேடலில் போட்டியிட்டார் அங்கு.


கொடைமட மன்னர்போல் மாதவி இன்பக்

கொடையளித்தாள் கோவலனுக் கே.


இமயமலைச் சாரல் ஒளிவட்டக் கல்லில்

பொதியமலைச் சந்தனத்தை வைத்து


அரைத்தனர்! நங்கையர் பூசினர்! முத்துக்

கலைமாலை சூடினர் அங்கு.


உயிரனைய அத்தானின் மார்பைத் தழுவித்

துயில்கொண்டார் தம்மை மறந்து.


கண்ணகியின் பிரிவுத்துயர்


எந்த அழகுப் பொருளுமின்றி கண்ணகியோ

நொந்தாள் துயரில் பிரிந்து.


வானத்தில் திங்களோ ஊர்ந்துசென்று மாதவிக்கு

தேனின்பம் தந்தது சென்று.


கண்ணகிக்கோ துன்பத்தைத் தூவித்தான் சென்றது!

தன்னுள்ளே நொந்தாள் தவித்து.


அங்காடி வீதிகள்


விற்பவர்கள் ஓசையும் வாங்குவோர் ஓசையும்

முற்றும் கலந்துவரும் அங்கு.


நாளங்காடி தன்னில் பொருளைப் பலியிட்டு

ஆரவாரம் செய்வார்க ளாம்.


நரபலி ஊட்டிய செய்தியும் உண்டு!

களவீரர் மேடை அஃது.


திருமாவளவன் வெற்றி

-------------------------------------------

வடதிக்கு நோக்கிப் படையெடுத்துச் சென்றான்!

தடையாய் இமயமலை நிற்க


அம்மலையின் மீது பொறித்தான் புலிச்சின்னம்!

மன்னன் திரும்பினான் நாடு.


ஐந்து மன்றங்கள்


களவுகளைத் தண்டிக்கும் வெள்ளிடை மன்றம்!

களவைத் தடுக்கும் இலக்கு.


நலமளித்துக் காக்கும் இலஞ்சிமன்றம் உண்டு!

வலம்செய்வார் மக்கள் தொழுது.


வஞ்சனையால் வந்த பிணியை நெடுங்கல்

மன்றந்தான் நீக்கியது காண்.


போலித் துறவிகள், கெட்ட மதிகொண்டோர்

போன்றோரைத் தண்டிப்ப தற்கு


பூத சதுக்கமன்றம் உள்ளதுபார் அப்புகாரில்!

தேடிப் பிடித்துண்ணும் செப்பு.


ஆட்சி நடுநிலை மாறினால் கண்ணீரைக்

கொட்டுகின்ற பாவைமன்றம் உண்டு.


ஐந்து வகைமன்றம் நீதிகளை நாள்தோறும்

நன்கு வழங்கியதாம் சொல்.


இந்திரவிழா

----------------------

இந்திரன் கோயிலில் நட்டார் நெடுங்கொடியை!

விண்தொடு மாறுதான் பார்.


விழாக்கோலம் உற்சாகம் வீதியெங்கும் கண்ணே!

உலாக்கோலம் அங்கங்கே தான்.


எண்பேரா யத்தாரும் அய்ம்பெரும்

நற்குழுப்

பண்பாளர் சேர்ந்துவந்தார் அங்கு.


அரசாளும் மன்னரை வாழ்த்தினார் நின்று!

உலகம் வியந்தது கண்டு.

சிலம்புக்குறள் 1

 சிலம்புக்குறள்

முக்காண்டம் ஏந்தும் சிலப்பதி காரத்தை

நற்றமிழ்ச் சொல்லால் குறள்வடிவப் பாக்களாய்

அக்கறையாய் நானெழுத முன்வந்தேன்! வாழ்த்துங்கள்!

கற்றறிந்தோர் தூண்டல் துணை.



பூம்புகார் மாநாய்கன் செல்வமகள் கண்ணகி

பூமகளாய் நின்றாள் வளர்ந்து.


பூம்புகார்  செல்வந்தன் மாசாத் துவான்மகன்

கோவலனும் வாழ்ந்தான் வளர்ந்து.


மங்கல நாளில் திருமணம் செய்தனர்!

கண்கண்ட கோலந்தான் காண்.


கண்ணகியும் கோவலனும் ஏழடுக்கு மாளிகையில்

நான்காம் அடுக்கிலே சேர்ந்து


மணியிழைத்த கட்டிலின்மேல் வீற்றிருந்தார் உள்ளம்

தணிக்கவொன்னா காதலுடன் தான்.


நிலாமுற்றம் ஏழில் இருந்ததால் சென்று

குலவினர் கொஞ்சிக் களித்து.


மாசாத்து வானின்  மனைவி விருந்தோம்பல்

பாசத்தைக் காணவேண்டும் என்று


தனிக்குடும்பம் வைத்தாள் மகிழ்ந்து!

இணையரின் இல்லறத்தை வாழ்த்து.


மாதவி


ஆடலும் பாடலும் பேரழகும் கொண்டவள்

ஈடற்ற மாதவி தான்.


பன்னிரண்டாம் ஆண்டில் அரங்கேற்றம்! சோழனுக்குத்

தன்னாற்றல் காட்ட விழைந்து


அரங்கிலே ஆடினாள்! யாழும் குழலும்

சுரந்தன இன்னிசை யங்கு.


சோழமன்னன் தந்தான் தலைக்கோல் பட்டத்தை! தாழநின்றாள் நாணத்தில் தான்.


கிளிச்சிறை பொன்மதிப்பு கொண்டமாலை இஃது!

விலைகொடுத்து வாங்குவோ ரே


கொடிபோன்ற மாதவிக்கு நாயகனாய் வாழ்வில்

மகிழ்வித்து வாழலாம் என்று


மாதவியின் தாயான சித்ராபதி

மாலையைக்

கூனியிடம் தந்தாள் உவந்து.


நகரிலே கூனியை நிற்கவைத்தாள்! விற்கும் அடையாள மாகத்தான் அங்கு.


கோவலன் வாங்கினான்! கூனியுடன் மாதவியின்

வாழ்விடம் சென்றான் விழைந்து.


மாதவியின் பேரழகில் தான்மயங்கி அம்மயக்க

போதையிலே மெய்மறந்தான் வீழ்ந்து.


தன்வீட்டை, தன்மனைவி கண்ணகியைத் தான்மறந்தான்!

கண்டதே காட்சியென்றான் காண்.


வசந்தா கவிதைகள்!

 வசந்தா கவிதைகள்!

ஆங்கிலக் கவிதை!

BIRD'S VIEW!

Stars are scattering light and twinkling

Like my past peaceful life,in a calm way

No.one would cause harm to you!

Because, you are in the sky!

But i am a small bird living in the world!

World is surrounded by greedy people!

Selfish; They are satisfied only about their thoughts!

In between their useless world,like me.

So many of them put to life; without wish,

Before this I am a singing bird

Now my songs are thrown away,

And lead a sorrowful vagabond life

I have lost all my aims and happiness

My peaceful life has been spoiled

Now I am like a dying animal

I want a short but peaceful life.


Vasanthan


Brightly shining sweet Moon!

How i imagine about your Nature!

You are the only Moon to the world

Like my high ambition in life!


வசந்தா கவிதைகள்!

 வசந்தா கவிதைகள்!

கமலா

இயற்கை!

தென்னமர தோப்பினுள்ளே தோகைமயில் ஆட

தென்றல்வீச கூகை குரலெடுக்க சந்தனமணம்

வீச வீறு கொண்டெழும் ஆண்மை உள்ளம்

கோப்பையிலே குடியிருக்க இசைவெள்ளம் நதியாக

இளநெஞ்சம் படகாக ஆட பெண்அன்னம் ஆற்றிலே

இளந்தென்றல் மிதக்க நிலவென்னும் மங்கை

நிறையொளி வீச  அன்பென்னும்  மழையதனில்

ஆடுதம்மா இருநெஞ்சம் ஆசைபொங்க

பச்சைக்கிளி இரண்டு மரகத ஊஞ்சலிலே

பாசம் எனும் கயிற்றில் ஆடுதம்மா!

உலகை மறந்து உறவை நினைந்து!


என்மனைவி என்னைப்பற்றி எழுதிய கவிதை:


08.06.75


எங்கள் மணநாள்: 29.05.75


தென்னவன் என்னவன்!


இமயத்தின் உச்சியென உயர்ந்திட்ட உன்னதன்

எந்தன் கனவெனும் மாளிகையின் மன்னவன்!

அன்னவனின் பின்எந்தன் பேதைமனம் பற்றியது

இன்றவன் என்னவன் தென்னவன் மன்னனவன்

உள்ளமெனும் மலர்வீதியில் உலவிவரும் தென்றலவன்

பொதிகை மலைபிறந்த மலர்வனம் எந்தன்

மனமெனும் மாளிகையில் ஆட்சிசெய்யும் அரசன்!

காலமெனும் கடலிலே மலர்கிறேன்

என்னவனின் நெஞ்சத்தில் வண்ண மலரென!


வாழ்க்கை எனும் பாதையிலே!


வாழ்க்கையெனும் பாதையிலே வாழ்கின்ற

வாடிக்கையாளர் நாமெல்லாம் இப்புவிமேல்!

இப்புண்ணிய மண்ணிலே வாழ்ந்த

வாழ்வு

வளமற்று இன்பமற்று ஏங்குதம்மா!

கண்ணிருந்தும்  கும்மிருட்டாய்

செவியிருந்தும் செவிடாக

வாயிருந்தும் ஊமையாய்

வாழ்வதற்கு மனமின்றி மங்குவதற்கா

வாழ்க்கையெனும் பாதையிலே ஏங்குகின்றா

வசந்தா கவிதைகள்

 வசந்தா கவிதைகள்

இளம்பிறை!

14.01.75

அமுதம் எனும் அழகிய நிலவே!

உன் அழகிய திருமுகம் நினைத்தேன்!

சிறுகுழவி சீரடி எடுத்துவந்து அழகெல்லாம்

கொட்டிக் கிடக்க துள்ளி வந்தது போன்று

அழகிய இளம்முகத்தை காட்ட 

என் அகமும் முகமும் மலர இன்பம் அடைந்தேன்!

என்று உன் இன்முகம் முழுதும்

வருமோ? இன்னும் எத்தனை நாட்களோ?

உன் முழுமுகம் காட்டி விரைவில் வருகவே!

அதுவரை எங்கிருந் தாலும் வாழ்க!

என்னை மகிழ்விக்க திருமுகம் காட்டி

அருள் முகத்துடன் அழகு முகமும் காட்டி

என்னுடன் கலந்திட விரைவில் வாராயோ?


எழுதிய நாள்:18.2.75


என் இனியன் வசந்தன் தன் உள்ளம் வெண்கமலம்!


என் வசந்தன் கவிதைகளை இனிமையுடன்

நான் படித்து நெஞ்சம் கிறுகிறுத்தேன்!


தேன்கலந்து தந்தாளோ? தெள்ளமுதைத் தந்தாளோ?

ஊன்மறந்தேன் எனைவாட்டும்

துயர்மறந்தேன்!


இன்பவானில் சிறகடித்துப் பறக்கின்றேன் நான்!

உனைப்போல் கவிதை மனம்  எனக்கில்லை!

இருந்தாலும் முயலுகிறேன் நானும்

பாட்டெழுத!


என்ன எழுதுவேன் எதை உரைப்பேன்!

எனதன்பு தனையா? 

இதயத் துடிப்பினையா?


சொற்களைத் தேடுகிறேன்! 

சொல்லத் துடிக்கிறேன்,!


பேதை மனமன்றோ! மிஞ்சுவது தடுமாற்றம்!

உனதன்பைப் பெறும்தகுதி எனக்கில்லை இதுஉண்மை!

எனநினைத்து என்னுள்ளம் 

நாணு கின்றேன்!


வெண்கமலம் உன்னுள்ளம் இவ்வுள்ளம் கலங்காமல்

இக்கமலம் இருந்திடுவேன்

என்றும்நீ வாழ்க!


என் இன்பக்கனவு வசந்தனுக்கு

அன்பு இதழ்விரிக்கும் தாமரை!

வசந்தா கவிதைகள்

 வசந்தா கவிதைகள்

மங்கையின் எண்ணம்

வான்முகிலின் வழங்கலைப் போல வாழ்க்கையின் வசந்தங்கள்

வாழ்வெனும் தீபமேற்ற

தஞ்சையெனும் தரணிநின்று

தன்துணைக் காண தவிப்புடனே

வந்தவளை மானை

தன்மனங் கொண்ட அரசன் மனமெனும்

கையினால் மானசீகமாக மாண்புடனே வரவேற்றான்!

களிப்புடனே நங்கையும் 

ராஜாவைக் காண,

இன்பவானில் எழில்எண்ணம் சிறகடித்துப் பறக்கவே

இனியவள் வாழ்வில் இன்பங்கள் குவியவே!


இன்பச்சோலை!


சித்திர மண்டபத்தில் சிறகடித்து வண்டிசைக்க

தென்றல் வீசும் சோலையில் வசந்த

காலத்தில் காண்பவை எல்லாம் இனிமையாக

இதயக்கமலத்தில் நிறையும் மல்லிகையின் மணமும்

தஞ்சை எனும் தரணியில் காண பாட்டெழுத

நோட்டம் வரும்; ஏடெடுக்க எண்ணம் பிறந்தது!

கலைமகளுடன் தனமகளும் நிறைந்து வழியும்

இத்திருநகரில் வாழ்க்கைச் செல்வம்

இன்பச்சோலையே!


எழுதிய நாள் 12.1.75 அமாவாசை!


அழகு மலர்கள் பூத்துக் கிடக்கும்

அகன்ற வானிலே

அழகுக்கே இலக்கணமான பூரணமான அழகே!

நின் அழகு ஒளியின்றி இன்று மருகுகிறேன்!

என்று உன் திருமுகம் அழகாய் சிரிக்குமோ!

பழைய இனிய கவிஞருக்கெல்லாம் கன்னியாய்

என்றும் உந்தன் இதயமெனும் வீதியிலே

என் வாழ்வு இணைந்திட அலைகின்றேன்!

இலையின் மேலுள்ள பனித்துளி போன்றவள் நான்!

நின் அன்பு ஒளியிலே மிளிரும் நான்

காலத்தின் விளிம்பில் நடமாடும் இளமங்கை!

வாழ்வு எனும் இனிமையான தோப்பினுள்ளே

என் நிலையின்றி உன் அன்பில் ஆடுகின்றேன்!

உன்னை காணாத நாள் வாடும் அழகுமலரே!

என்நிலை மாறி இன்பம் விரைவில் வருகவே!

உன் திருமுகம் காண இன்னும் இத்தனை நாட்களா?

விரைவில் நிலவே உன் திருமுகத்தைக் காட்டு!


வசந்தா கவிதைகள்!

 வசந்தா கவிதைகள்!

10.06.75. 12.15 pm

அன்பு நிழலிலே!

இயற்கையன்னை ஏற்றிவைத்த எழில் சிற்பியே!

இன்பத்தினை வழங்கிவைத்த வளமார்ந்த வள்ளலே!

காவினுள் சுற்றி வட்டமிடும் வண்டெல்லாம்

என் மனமெனும் மஞ்சத்தில் மங்காத மாயவனே!

உன்நினைவில் என்நெஞ்சம் எஞ்ஞான்றும் வாடுதம்மா!

உள்ளத்தில் உள்ளுந்தோறும் உவகை பெருகுதம்மா!

அன்புக்குப் பொருள்கூறி அறிவைப் புகட்டி

எக்கலையும் சிறப்புறவே பயின்று புகழுடன்

திசையெட்டும் உன்புகழ் பரவ இந்த ஏழை

மனம் அங்கனமே உன் அடி நீழலில் என்றென்றும்

அடிமையாகி என்மீது அன்புமழை நீங்காது பொழியவே! அதுவே நான்விரும்பும் வாழ்க்கை இன்பம்!

அதற்கென அரசனின் மனநிலையறிய

அடியவளும்

விரும்பி இன்று முழுமையாக பெறவே

மது அருந்திய வண்டானேன் மயங்கியே நிற்கிறேன்!

மன்னவனின் அன்பு நிழலில்!


எழுதிய ஆண்டு 1971

தமிழ் தெய்வம்!

தமிழ் வளர்க்கும் இதயத்தில் தான்வளரும் தெய்வம்!

அமிழ்தினும் இனியசொல்லாம் முருகனொரு தெய்வம்!

சொல்லுக்குப் பொருள்கூறி சுவைதந்த தெய்வம்! தான்

சொல்லாகிப் பொருளாகி சுவையுமான தெய்வம்!

குன்றத்தில் குடியிருக்கும் 

தெய்வம் எங்கள் தெய்வம்!

குறவள்ளி தனைமணந்த

தெய்வம் எங்கள் தெய்வம்!

உம் வாழ்வெனும் காவினுள் நலம்பெருகி அருமலர் மலர

நம் வயலூர் ஆனந்த

தெய்வமருள் செய்கவே!


வசந்தா கவிதைகள்!

 வசந்தா கவிதைகள்!

22.07.75 2.25 pm

துயரத்தின் எல்லையில்!


பனிபடர்ந்த பாதையிலே

வீட்டுக்குள் பாதையின்றி பாங்குடனே

என்மனக் கோவிலைத் திறந்து வைத்தேன்!

உருகிவிட்ட மெழுகினிலே ஒளியேது?

உடைந்துவிட்ட சிலையினிலே அழகேது?

நானொரு உடைந்த கப்பல்!

சொல்லியதை நம்பவும் மனமில்லையா?

நானழுதேன் தேற்றவும் துணியவில்லை!

ஆனவரை சொல்லி விட்டேன்

அழுதழுது பார்த்து விட்டேன்

தாய் மொழியில் வார்த்தையில்லை!

வாய் மொழிக்கும் வலிமையில்லை!

எந்தன் வழக்கில் சாட்சி இல்லை!

என் பக்கம் யாருமில்லை!

இறைவா தலைவா என்மீது குற்றமா?

மரணம் வந்தால் தெரிந்துவிடும்

நல்லவர் யாரென புரிந்துவிடும்

ஊர்சுமந்து போகும் போது

உங்களுக்கும் கூட விளங்கிவிடும்!


11.06.75. 6.15 pm

அழகுமலர் ஒளியிலே!


எண்ணத்தை ஏடாக்கி உள்ளியதை வண்ண

ஓவியமாக்கி இதயத்தை அன்புமதுக் கிண்ணமாய்

ஏந்தியவளாய் வந்துநான் தலைவனின்  உள்ளக்

கோவிலிலே ஏற்றிவைத்த சுடர் விளக்காய்

எஞ்ஞான்றும் நந்தா விளக்காய் நயத்துடன்

விளங்கவே நல்லவளும் விரும்பு கிறேன்!

கண்ணனின் மணி வண்ணனின் நாயகனின்

அன்பு ஒளி என்மீது நீங்காது வீசவே

நானும் ஒளியில் மிளிரும் மலரானேன்!


வசந்தா கவிதைகள்!

 வசந்தா கவிதைகள்!

மழலைச் செல்வம்!

மலைவீழ் அருவியின் மௌனமான ஒலியிலும்

தென்றலில் சலசலக்கும் மரத்தின் ஓதையிலும்காவினுள் இன்னிசைக்கும் வண்டின் சப்தத்திலும்

அன்புள்ளத்தின் ஊற்றெனப் பெருகிவரும் வெள்ளத்திலும்

இளம்மாலையில் தென்னை வீசும் ஒய்யாரத்திலும்

செந்நிற தேவனின் வரவை தெளிவுடனே

அறிவிக்கும் முன்னே இருக்கும் மயக்க

இருளின்

மனமார்ந்த அமைதியின் இசையிலும்

எனதன்புத் தலைவனின் மழலை மொழியினை

பாங்குடனே கேட்கிறேன் இப்புவியின்

இயற்கை மடியினிலே எனது மழலைச் செல்வமே

எந்தன் உயிரே!


30.07.75 12.20 pm


வாழ்க்கை வீதியிலே!


ஆற்று வெள்ளம் கரைபுரண் டோட

ஆற்றுமோ இவ்வுள்ளம் ஓடுகின்ற

காலவெள்ளத்தில் அரசன் எனது

தென்றலில் தள்ளாடும் எழில் வண்ணன்!

பொழிலில் மலரும் அழகு குணமலரே!

இதழ்விரித்துச் சிரிக்கும் சிரிப்பில் எழில்ததும்பும்

வண்ண ஓவியமே! நிந்தன் தந்தவண்ண

இதயத்தின் அன்பு தீபமே! வசந்தா

வாழ்க்கை வீதியிலே நீர் எமது குன்றிலிட்ட விளக்கு,

பச்சை வண்ண கண்கவரும் ஊஞ்சலில்

பாசம் எனும் கயிற்றில் ஆடுகின்றோம்!

உலகை மறந்து உறவை நினைந்து!


வசந்தா கவிதைகள்

 வசந்தா கவிதைகள்!


22.10.75/11.11.75


எனக்கென்று ஒரு இதயம் உண்டா வையகத்தில்?


வாழ்க்கை தோட்டத்தில் வண்ணக் களஞ்சியத்தை

எண்ண வீதியிலே எழிலார்ந்த அன்பு மலரினை

ஆசையுடனே நினைத்தேன் என் மனதினை அண்ணனவன்

கடந்த காலத்திலே களிப்புடனே முடித்தான்

அன்னவன் எண்ணத்தை தங்கையவள் மாண்புடனே

நடத்தினாள் காலவெள்ளத்தில் வளர்ந்த பூஞ்சிட்டு

ஆனதனால் கடமையும் வந்தது இன்று

அந்தநாள் நினைவும் வந்தது கடந்த

காலமோ முடிந்துவிட்ட கதை ஆச்சு!

அண்ணனின் மனமும் இந்த அன்னத்தை

தலைவனவன் கையில் பிடித்துக் கொடுத்து

ஆழ்ந்த அமைதிக் கடலில் நீந்தியது

இன்றவள் பாசக் கடலில் காலம்

முழுவதும் நீந்த இருக்கும் வாழ்க்கை

கடல் இரண்டிலும் கிடந்து புரள்கிறது!

கடமைக்கு முதலிடம் என்பதனை அறியாமல்

அண்ணா கதறுகிறேன் இந்த நிலையில்

என்னை பார்க்கத்தான்ஏங்கி இருந்தாயோ?

என் மனக்கோவிலைத் திறந்து வைக்கிறேன்

அங்கு ஏற்றிவைத்து ஒளிவிளக்கு என்அத்தான்

அன்புடனே மனமிசைந்து வாழ்கிறேன் அத்தகைய

வாழ்க்கை பாதையை வகுத்தளித்த வள்ளலே

என்னைப்பற்றி துயரங் கொள்ளும் இனியவள்

வாழ்வில் இன்பம் குவிப்பது உன்எண்ணம்

அவ்வெண்ணம் ஈங்கு என் தலைவனால்

இனிமையுடன் நிறைவேற்ற படும் என்ற

நிம்மதியில் உன்மனம் துயில்க அமைதியில்

நீந்துக எனக்கென்று ஓரிதயம் உண்மையில்

வையகத்தில் இருக்கும் அது என் இன்னுயிரின்

மலர் போன்று மென்மையான இதயம்

அதற்காக வாழ்கின்றேன் வாழத் துடிக்கிறேன்

வாழ்க்கையின் பாதைதான் தெரியாமல்!

Friend Jebaraj 70 th birthday




 

வசந்தா கவிதைகள்!

 வசந்தா கவிதைகள்!

2.7.75 9.40 am

மன அமைதி!


அழகும் ஒளியும்தன்னகம் கொண்டாலும்

விண்மீனின் பெருமை வானில் இருந்தாலே

செம்மையும் மனமும் கொண்டது என் சிகப்பு ரோஜா

அதன்பெருமை மங்கையின் கூந்தலிலே

வண்டுகள் புவியில் சுற்றி வலம்வந்தாலும்

தேன்சுந்தும் மலரிலேதான் மகிழ்ச்சி

நிலவு மங்கை நீங்கா ஒளிசிந்தினாலும்

தன் சுற்றத்துடன் வானுலகில்தான் மகிழ்வு

அடைந்து புன்னகையை இதழ்க்கடையில் விரிக்கிறது

எத்தனை செல்வங்கள் உலகின் எந்த

மூலையில் சிதறிக் கிடந்தாலும் மங்கை

என் மனஅமைதி தலைவனின் மலரடியில்தான்

வசந்தா கவிதைகள்!

 வசந்தா கவிதைகள்!


9.2.76 இதயத்தில் அமைதி என்றோ?


இன்ப வானின் எழில்சிறகை விரித்து

இதயத்தில் அன்பு மழை பொழிய

இதமாக வாழ்ந்தேன் எந்தன் தலைவனுடன்!

இன்றவரோ வாடி நிற்கிறார் மனமிழந்து

அதைக்காண தவிக்கிறேன் உள்ளத்தின் எண்ணத்தை

விரித்துரைக்க தெரியவில்லை விளங்காமல் ஏங்குகிறேன்!

அவர் என்னை முழுவதும் ஆட்கொள்ளவே

விரும்பு கின்றேன்! இருப்பினும் என் மனநிலையை

அறிய மறுக்கிறார் இன்றுவரை எதிர்த்ததில்லை!

இனியும் இருக்கும் நாள்வரை அவ்வாறே

என்ஏட்டை முடித்திட முடிவு கொண்டேன்!

நான் செய்த தவறெல்லாம் அவருடன்

ஒத்துக் கொள்ளாமல் மறுத்திட்டேன்! ஏன்

செய்தேன் தெரியவில்லை! தன்மானம் தவிர்த்ததுவே!

என்னுடைய கடந்தகால வாழ்விலும் இதுவரை

கேட்டதில்லை என்அண்ணன் வளர்த்திட்ட வாழ்வு

இன்றும் என்றும் அப்படியே என்மனம் நாடுகிறது

என்அன்னை தன்னிடமே கேட்டதற்கு விரும்பாத

உள்ளமிது என்செய்வேன்? இனிமேலும் தலைவனிடமும்

அப்படியே இருந்து அவரது பிஞ்சுமனதை

முள்ளாக உறுத்தி அதை கிழித்து

அதனின்று வடியும் செந்நிறத் துளிகாண

என்றுமே துணியேன்! பூப்போல காத்திட்டு

இன்பமாக புன்னகை சிந்த என்னால் முடிந்தவரை

இயலுவேன்! இதுவரை நான்செய்த குற்றத்திற்கு

இதயமே நீ இன்னும் நிம்மதியாக உறங்குதியோ?

அவர்படும் இன்னல்களை காண முடியவில்லையே!

இதயமேநீ இயக்கத்தை நிறுத்திவிட்டு என்னை

மகிழ்விக்க கூடாதா? ஏன் மறுக்கிறாய்?

உனக்கு என்மீது இரக்கம் இல்லாவிடினும்

என்னுயிர் என்றால் தங்கி இருப்பதை

நீ அறியாயோ? இன்னும் ஏனிந்த மௌனம்?

உன் அமைதி என்னை வதைக்கின்றது!

என் இதயம் அதாவது அவரது மனம்

அமைதியுடன் இன்பமடைய நான் விரும்புகிறேன்!

என் இதய தாகத்தை ஏட்டில் எழுதிவிட்டேன்!

எழுதியது ஈடேறும் நாள் வருமா?

என் இதயமே உன்னைக் கேட்கிறேன்!

இதற்கு காலமே விடை கூறட்டும்!



வசந்தா கவிதைகள்!

 வசந்தா கவிதைகள்!


When twilight pulls the curtain

And pins it with a Star

Remember we are true friends

No matter where we are!


From

வார்த்தை தவறிவிட்டாய்


Vasantha


05.02.83


ஏனிந்த வாட்டம்?


வானமிருந்தால் நிலவுண்டு

வனமிருந்தால் மரமுண்டு

மலரிருந்தால் மணமுண்டு

மணமிருந்தால் வண்டுவுண்டு

கடலிருந்தால் அலையுண்டு

மலையிருந்தால் முகிலுண்டு

தென்றலினால் இன்பமுண்டு

தேன்தமிழால் இனிமையுண்டு

பேதைமனம் தெளிவிருந்தும்

ஏனிங்கு வாடுகிறது?



வசந்தா கவிதைகள்!

 வசந்தா கவிதைகள்!

விமலாவுக்காக

அருமையான புன்சிரிப்பு

அரும்புபோன்ற சொல்வரிசை

எறும்புபோன்ற சுறுசுறுப்பு

எப்பொழுதும் ஓடிவரும் துறுதுறுப்பு!


என் கண்மணி விமலாவுக்கு


கண்ணிலே கலக்கத்தின் எதிரொலிதான்

பாசத்தின் படைப்புதான்

நேசத்தின் வலைவிரிப்புத்தான்

அன்பின் சொந்தம்தான்!

என் செல்ல விமலாதான்!


தூங்கிவிட்ட இன்ப வாசலை

தூய்மையுடன் தட்டிவிட்டு

துவண்டுவிட்ட மாலையை

துடிப்புடனே எடுத்துவிட்டாள்

என் அருமை விமலாதான்!


எங்கிருந்தோ வந்த பந்தம்

எட்டு சில நாட்கள்தான்

என்றபோதும் துடிக்குது இதயம்ஏனிந்த தவிப்பு ! புரியுமா?

என் இனிய விமலாவுக்கு!




வசந்தா கவிதைகள்

 வசந்தா கவிதைகள்

24.11.81 உயர்ந்த உள்ளங்கள்!

தென்றல் தாலாட்டும் பொதிகையினும்

பனி படர்ந்த உதகையினும்

மலைகள் அடர்ந்த திருமலையினும்

புண்ணியநதி  தோன்றிவரும் இமயத்தினும்

இதயத்தால் உயர்ந்து நிற்கும் 

இனியவர்களே! இன்று தங்கள்

இன்பத்தைக் காண இன்முகத்துடன்

வாழ வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்!


வசந்தா கவிதைகள்!2

 வசந்தா கவிதைகள்!2


மகன் எழில்


இமயத்தில் நிற்கும் இதயமே

என்றும் நீதான் குலவிளக்கு

குமுறும் எரிமலையின் ஊற்று

குளிரும் உன்மனம் ஒருநாளில்

விதையாய் வீழ்ந்து இன்று

விண்முட்ட எழுந்து நிற்கிறாய்!

மனதின் நம்பிக்கை விளக்கு

மலர்ந்திட நானும் பார்த்திருப்பேன்


மருமகள் சத்யபாமா


தாமிரபரணி தரணியில் இருந்து

வந்த தரமான மருமகள்தான்!

சத்தியத்தில் தலைநிமிரும் சத்யாதான்!

எண்ணங்களில் செயல்களில்

சீரான சிந்தனை! குடும்பத்தில் சிறப்பு!

மென்பொருள் துறையில் சிறந்த முயற்சி!

குடும்பத்தில் ஈடுபாடு ! குழந்தைகளுடன் மகிழ்ச்சி!

என்றும் நிலைத்திட இயற்கை துணைவேண்டும்!


பேரன் நிக்கில் அபிசேக்!


சிந்தனை சிறகடிக்க சிப்பிக்குள் முத்தாக

எங்கள் வாழ்வில் உதித்த உன்னத பேரனே!

மழலை முதல் என்றுமிங்கே எங்களின்

இதய வானிலே வண்ணச் சிறகனே!

இமயம் தொட என்றும் விரும்பும்

உந்தன் நலம்விரும்பும் உள்ளங்கள்

எங்கும் உன்னுடன் வாழும் பாசமலர்கள்!


பேரன் வருண் ஆதித்யா!


செல்லக் குட்டியின் வண்ண ஓவியம்

சிந்தை மயக்கும் அழகான கைவண்ணம்!

எல்லோருக்கும் வணக்கம் கூறும் பண்பு சிறக்க

வாழ்வின் இலட்சியத்தில் மனம்போல் உயர்ந்திட

கடைக்குட்டியின் அன்பு வெள்ளம்

மகிழவைக்கும் உண்மையே!

செல்லச் சிணுங்கல் கிறங்கவைக்கும்!

என்றுமே வாழ்வில் இன்பமே!





வசந்தா கவிதைகள்!

 வசந்தா கவிதைகள்!

மகள் சுபா -- 

இவள்தான் என் தேவதை-- இரு

கால் முளைத்த தாமரை

தோளோடு தோளாய் நின்றவள் நீ

தோன்றிய நாள்முதல் நெஞ்சிலே

என்றும் வாடாத வண்ண மலரே

நினைவில் நீந்தும்  விண்மீன்


மருமகன் C.ரவிக்கு வாழ்த்து!


நித்தம் உதிக்கும் இளம் சூரியனே

மந்திரப் புன்னகை மனதை வருடும்

சுயநலமில்லா சிறகடிக்கும் சிந்தனைகள்

மக்கள் அனைவரையும் மகிழ்விக்கும்

 மலரே

தங்களை எங்களுடன் இணைத்த

 உறவிழையே

தரமான வாழ்வுக்கு வழிவகுத்த

 வல்லவனே

நித்தம் வாழ்வில் ஒளிவீசும் உண்மையே

குலம் விளங்க நீடூழி வாழ்க பல்லாண்டு!


பேரன் சுஷாந்த் ஸ்ரீராம்!


குடும்பத் தோட்டத்தில் மலர்ந்த முதல்மலரே!

இன்ப ஊற்றில் நனைத்த முத்தே!

அமைதியான உறுதியான உன்னத பேரனே!

வாழ்க்கை முழுமையானது உன்னால்!

வானுயர  வாழ்வில் புகழடைய

மனமிங்கு எந்நாளும் வாழ்த்துமே!

என்றுமே உயர்ந்த எண்ணங்கள்

உலகினிலே முதல்நிலை அடையுமே!

குழந்தைகளுக்கு குறளமுதம் 39

 குழந்தைகளுக்கு குறளமுதம் 39

குறள் 79:

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும்

 யாக்கை

அகத்துறுப் பன்பி லவர்க்கு.


அப்பா அப்பா குறளுக்கு

உரிய பொருளைக் கூறப்பா!


அப்பா அப்பா அங்கேபார்!

அழகான மாமா பார்!


ஆடை எல்லாம் அழகுபார்!

அந்தப் பாப்பா அவர்குழந்தை!


பள்ளிக் கருகில் வந்ததுமே

குழந்தை சாக்லேட் கையாலே


அவரை அழுக்கு செஞ்சதால்

அன்பே இன்றி அடிக்கின்றார்!


பாவம் அந்தப் பாப்பாவோ

அழுது கொண்டே போகுதே!


உள்ளத் தன்பே அழகாகும்!

அந்த அழகே இல்லாமல்


வெளியில் உள்ள உறுப்புகள்

அழகாய் இருந்து என்னபயன்?


இதுதான் இந்தக் குறளுக்கு

உண்மைப் பொருளாம் கேட்டுக்கோ!



குழந்தைகளுக்கு குறளமுதம் 38

 குழந்தைகளுக்கு குறளமுதம் 38

குறள் 78:

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை

 வன்பாற்கண்

வற்றல் மரந்தளிர்த் தற்று.


பாலை வனத்தில் ஏனம்மா

பசுமை மரங்கள் வளர்வதில்லை?


பாலை வனத்தில் நீரில்லை!

நீரில் லாத நிலத்தினிலே


பட்ட மரங்கள் தழைப்பதில்லை?

அதுபோல் உலக வாழ்க்கையிலே


அன்பே இல்லா நிலையிருந்தால்

பாலை வனம்போல் வெறுமைதான்!


அன்பே வாழ்வின் உயிரோட்டம்!

அன்பை வளர்க்கக் கற்றுக்கொள்!


குழந்தைகளுக்கு குறளமுதம் 35

 குழந்தைகளுக்கு குறளமுதம் 35

குறள் 35:

அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து

இன்புற்றார் எய்தும் சிறப்பு.(75)


அம்மா அம்மா பாரேன்!

அந்த வீட்டைப் பாரேன்!


நாரு போட்ட கட்டில்தான்

நாலு பேரு உட்கார்ந்து


சிரிச்சுப் பேசி இருக்காங்க

தினமும் பாத்து  ரசிக்கிறேன்!


குடிசை வீட்டில் இருந்தாலும்

கூடி வாழும் பண்பிருக்கே!


நமக்கு நிறைய இருந்தாலும்

இப்படிச் சிரிக்க முடியல!


ஏனம்மா ?  என்னம்மா!

காரணத்தச் சொல்லம்மா!


அவர்க ளது உள்ளத்தில்

அன்பு நிறைய இருப்பதால்


இன்பமாக சிரிக்கின்றார்!

துன்பத்தை மறக்கின்றார்!


அன்பின்றி வாழ்பவர்கள்

துன்பத்தில் வாழ்கின்றார்!


அன்பை வளர்க்கக் கத்துக்கோ!

இன்பம் வளரும் புரிஞ்சுக்கோ!


என்னுடைய அம்மாதான்!

எனக்கு நல்ல அம்மாதான்!


குழந்தைகளுக்கு குறளமுதம் 34

 குழந்தைகளுக்கு குறளமுதம் 34

குறள் 34

அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்

நண்பென்னும் நாடாச் சிறப்பு.(74)


அன்பைப் பற்றிச் சொல்லம்மா!

நட்பைக் குறித்துச் சொல்லம்மா!


பரபரப் பான அன்பினிலே

பக்குவத் தெளிவே இல்லையம்மா!


பக்குவ மற்ற நட்பினிலே

வக்கிரம் தானே ஊற்றெடுக்கும்


களங்க மற்ற அன்புடனே

கைகள் கோர்த்துப் பழகவேண்டும்!


அந்த அன்பே நிலைத்திருக்கும்!

மற்றவை எல்லாம் மறைந்துவிடும்!


நிலைத்த அன்பே கனிந்துவரும்!

கனியக் கனிய நட்புவரும்!


இந்தச் சிறப்பே வாழ்வினிலே

என்றும் மதிப்பை உருவாக்கும்!


துன்பந் தன்னில் ஒதுங்காமல்

துணையாய் நிற்பதே நட்பாகும்!


ஒதுங்கிச் சென்றால் நட்பில்லை!

அந்த நட்பில் உண்மையில்லை!






குழந்தைகளுக்கு குறளமுதம் 33

 குழந்தைகளுக்கு குறளமுதம் 33

குறள் 33

அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு

என்போ டியைந்த தொடர்பு.(73)


அன்பு என்றால் என்னம்மா?

எங்கே கிடைக்கும் சொல்லம்மா?


கடையில் விற்கும் பொருளல்ல!

கனிந்தே கலக்கும் உறவாகும்!


அம்மா அப்பா உன்மீது

பாசம் பொழிந்தால் அன்பாகும்!


கொஞ்சிப் பேசிப் பழகுவதால்

உணரும் நிலையே அன்பாகும்!


செல்லக் கோபம் அன்பாகும்!

மறந்தே சிரித்தால் அன்பாகும்!


நேர்மறை எண்ணம் அன்பாகும்!

எதிர்மறை எண்ணம் வம்பாகும்!


உடலும் உயிரும் இணைவதுபோல்

அன்பும் வாழ்வும் இணைந்திருக்கும்!


அன்பே இல்லா வாழ்வெல்லாம்

உயிரே இல்லா உடம்பாகும்!


சுட்டே எரிக்கும் பாலையாகும்!

அன்பு தழைத்தால் சோலையாகும்.!





குழந்தைகளுக்கு குறளமுதம் 32

 குழந்தைகளுக்கு குறளமுதம் 32

குறள் 32

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு.(72)


அந்தோ அந்தச் செல்வந்தர்

அன்பு என்றால் என்னவிலை?


என்றே கேட்பார் பாரம்மா!

கண்ணுக் கெட்டிய தூரம்வரை


வீடு மனைகள் என்றேதான்

அனைத்தும் அவருக் குரியதுதான்!


அன்பே இல்லா இதயத்தால் 

எல்லாம் தமக்குரியர் ஆகிவிட்டார்!


அந்த ஏழை விவசாயி

நாளும் உழைத்தே உருக்குலைந்தார்


உலகில்  உயிரினம்  உண்பதற்கே

உடல்பொருள் ஆவி அனைத்தையுமே


தியாகம் செய்யும் விளக்கானார்!

இந்தக் குறளின் பொருளானார்!


மற்றவர் வாழ உழைப்பவர்கள்

தன்னல மற்ற ஏந்தல்கள்!


அன்பின் சின்ன மாவார்கள்!

பொதுநலத் தூதர் ஆவார்கள்!


குழந்தைகளுக்கு குறளமுதம் 31

 குழந்தைகளுக்கு குறளமுதம் 31

குறள் 31

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்

 ஆர்வலர்

புண்கணீர் பூசல் தரும்.(71)


அம்மா நேற்று ஆசிரியை

பணியில் இருந்தே நிறைவுபெற்றார்!


வழிய னுப்புக் கூட்டத்தில்

நாங்கள் கூடி நின்றிருந்தோம்!


அவரோ நல்ல  ஆசிரியை

நாளை இருந்தே வரமாட்டார்!


அன்பைப் பொழிந்தே பாடத்தை

அருமை யாக நடத்துபவர்!


இந்த ஏக்கம் தாக்கியதும்

நாங்கள் அனைவரும் அழுதுவிட்டோம்!


அன்பை அடைக்கும் தாழில்லை

கண்ணீர் அதனை வெளிப்படுத்தும்!


வள்ளுவர் தாத்தா சொன்னதோ

உண்மை அம்மா பொய்யில்லை!


இன்னும் நெஞ்சைப் பிசைகிறதே!

அன்பின் வலிமை இதுதானோ?


குழந்தைகளுக்கு குறளமுதம் 30

 குழந்தைகளுக்கு குறளமுதம் 30

குறள் 30:

மகன் தந்தைக் காற்றும் உதவி

 இவன்தந்தை

என்நோற்றான் கொல்லெனும் சொல். (70)


கணினித் துறையில் முன்னேறி

காசும் பணமும் சேர்த்தேதான்


வளமுடன் வாழ்வான் என்றேதான்

பெற்றோர் நண்பர் சுற்றத்தார்


நினைத்தே மகிழ்ந்த நேரத்தில்

குறும்படப்  போட்டியில் கலப்பதற்கு


இருந்த வேலையை உதறிவிட்டு

முழுமூச் சாக இறங்கிவிட்டான்!


வென்றான் சாதனை படைத்தான் !

வாழ்த்தி மகிழ்ந்தார் குடும்பத்தார்!


முன்னனு பவமே இல்லாமல்

கலைத்துறைக் குள்ளே நுழைந்துவிட்டான்!


கையைப் பிசைந்தே நின்றிருந்தோம்!

நான்கு படங்கள் வெற்றிபெற


ஊக்கம் கொண்டான் வேகமுடன்

ஐந்தாம் படமோ சிகரத்தில்!


இயக்குந ராகத் திகழ்கின்றான்!

இமாலய சாதனை புரிகின்றான்!


உலகம் போற்ற உயர்ந்துவிட்டான்!


இவனது தந்தையும் தாயுமிங்கே

பெறுவதற் கென்ன தவம்செய்தார்?

எட்டுத் திசையும்  வாழ்த்துமழை!

மகனோ தந்தைக்குக் காட்டிவிட்டான்

அகம்நிறை நன்றியைத் தெரிவித்து!

குறளும் பொருளும் இதுதானே!

குடும்பப் பெருமை இதுதானே!




குழந்தைகளுக்கு குறளமுதம் 29

குழந்தைகளுக்கு குறளமுதம் 29

குறள் 29:

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்

 தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய். (69)


தமிழ்வழிக் கல்வி படித்தவன்தான்!


ஆங்கிலப் பாடத் திட்டங்கள்

திணற வைத்த கல்லூரி

படிப்பையும் இங்கே நிறைவுசெய்தான்!


கணினித் துறையில் கால்பதித்தான்

பணியின் நிமித்தம் அமெரிக்கா

எல்லாம் சென்று வந்துவிட்டான்!


கொழுந்து விட்ட லட்சியத்தீ

காட்டிய ஒளியில் பயணித்தான்

தனியாய் நிறுவனம் தொடங்கிவிட்டான்!


என்னால் முடியும் கொள்கையுடன்

நிறுவன வளர்ச்சி கண்டுவிட்டான்


ஒருநாள் அழைத்தான் பெற்றோரை

தனது நிறுவன வளர்ச்சியினை

பெருமிதம் கொண்டே  காட்டிநின்றான்

தாயைப் பார்த்தான் பணிவுடனே


தாயும் பார்த்தாள் மகிழ்ந்தேதான்

பெற்ற பொழுதினும் தாய்மகிழ்ந்தாள்!


குழுவின் உழைப்பை வாழ்த்திநின்றாள்

உணர்ச்சிப் பிழம்பாய்ப் பெற்றோர்கள்!


குறளின் பொருளோ இதுதானே!

தாயும் மெச்சும் புகழ்தானே!


குழந்தைகளுக்கு குறளமுதம் 28

 குழந்தைகளுக்கு குறளமுதம் 28

குறள் 28:

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை

 மாநிலத்து

மன்னுயிர்க் கெல்லாம் இனிது. (68)


எனது தந்தை விவசாயி

எனது தாயும் துணைபுரிவார்


சொந்த மான நிலத்தினிலே

தினமும் உழைத்தார் கடுமையாக


என்னைப் படிக்க அரும்பாடு

பட்டார் எந்தன் தாய்தந்தை


பட்டப் படிப்போ நகரினிலே

கடனை வாங்கிப் படிக்கவைத்தார்


நன்றாய் மதிப்பெண் வாங்கித்தான்

வெற்றி பெற்றேன் தேர்வினிலே


முதல்வர் விருதைப் பெறுவதற்கு

நாங்கள் மூவரும் சென்றிருந்தோம்


படிப்பறி வில்லா பெற்றோரோ

படிக்க வைத்த காரணத்தால்


அறிவுத் திறனில் பெற்றோரை

விஞ்சிய மகனாய்த் திகழ்கின்றேன்!


முதல்வர் விருதைப் பெற்றுவிட்டேன்!

மாநில மக்கள் மெச்சுகின்றார்!


தாயும் தந்தையும் பெருமையுடன்

தலைநிமிர்ந் தேதான் நடக்கின்றார்!


ஊரில் வந்தே இறங்கியதும்

அடுத்த வீட்டு உறவினரோ


தனது மகனுக்கு அன்றுவந்த

மடலுட னேதான் ஓடிவந்தார்


மகனோ வெளியூர் போனதாலே

படித்தவ ரிடத்தில் விவரத்தைக்


கேட்டுத் தெரிய நான் வந்தேன்

சொல்லு தம்பி படித்ததம்பி!


அய்யா உங்கள் மகனுக்கு

வேலை கிடைச்ச செய்தியிது


என்றே சொன்னதும்  வந்தவரோ

இவனது பெற்றோர் மகிழ்ந்திடவே


நன்றி சொன்னார் பெற்றோர்க்கு

வாழ்த்தைச் சொன்னார் உளங்கனிய


வள்ளுவர் இந்தப் பொருளுடனே

அன்றே குறளை எழுதிவிட்டார்!


தாயும் தந்தையும் என்தெய்வம்

நன்றி யுடனே வணங்குகிறேன்!

குழந்தைகளுக்கு குறளமுதம் 27

 குழந்தைகளுக்கு குறளமுதம் 27

குறள் 27:

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல். (67)


நண்பா நண்பா தமிழரசா

உன்னைப் பாக்கப் பெருமைதான்!


மகனை மகளை வளர்ப்பதற்கு

உழைத்த உழைப்பை நானறிவேன்!


அன்பு நண்பா தமிழரசா

மகளின் மகனின் திறமைகள்


 ஊடகம் மூலம் நானறிந்தேன்!

மேடைப் பேச்சில் இருவருமே


அருமை அற்புதம் ஆகாகா!

கேட்போர் எல்லாம் வியக்கின்றார்.!


மாநில அளவில் கல்வியிலும் 

மதிப்பெண் நிறைய வாங்குகிறார்.


பெற்றோர் நீங்கள் அவர்களுக்கு

ஆற்றிய கடமை உணர்வாலே


அவையில் முந்தச் செய்தீர்கள்

அவர்களும் கனவை நினைவாக்கி


பெயரும் புகழும் எடுக்கின்றார்!

வாழ்க வாழ்க தமிழ்போல!


உங்கள் முயற்சி வீணில்லை!

குறளின் பொருளே நீங்கள்தான்!

குழந்தைகளுக்கு குறளமுதம் 26

 குழந்தைகளுக்கு குறளமுதம் 26

குறள் 26:

குழலினி தியாழினி தென்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர். (66)


எந்தன் தோழி தேன்மொழியே!

இசைநி கழ்ச்சி போகின்றேன்


குழலிசை வித்தகர் இசைக்கின்றார்

கேட்டு் ரசிக்கப் போகின்றேன்!


யாழிசை என்றே இலக்கியத்தில்

நாமும் வகுப்பில் படித்துள்ளோம்!


அந்த யாழை மீட்டித்தான்

புதிதாய் ஒருவர் இசைக்கின்றார்!


வந்தால் கேட்டு்  மகிழலாம்

வருகின் றாயா என்தோழி?


எந்தன் குழந்தை பேசுகின்ற

தேனினும் இனிய மழலைமுன்


இந்த இசையோ ஒன்றுமில்லை

மழலை தானே இனிமையாம்!


மழலைச் சொல்லைக் கேட்காதோர்

குழலும் யாழும் இனிதென்பார்


இப்படித் தானே கூறுகின்றார்

நமது வள்ளுவர் பேரறிஞர்!


நாளை நீயும் உன்குழந்தை

மழலைப் பேச்சைக் கேட்பாயே!


அன்று நீயும் என்கருத்தை

ஏற்றே போற்றுவாய் என்தோழி!


உண்மை தாம்மா என்தோழி

உள்ளம் மயங்கிடும் மழலைமுன்!


குழந்தைகளுக்கு குறளமுதம் 25

 குழந்தைகளுக்கு குறளமுதம் 25

குறள் 25:

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு (65).


அன்புத் தோழி அன்னம்மா!

உந்தன் குழந்தைக் கன்னலா?


கட்டித் தழுவிக் கொஞ்சுகின்றாய்!

முத்தம் தந்தே மகிழ்கின்றாய்!


மழலைப் பேச்சை ரசிக்கின்றாய்!

மயங்கி மயங்கிச் சிரிக்கின்றாய்!


புதுப்புது அர்த்தம் தருகிறாய்!

மொழி பெயர்த்து மகிழ்கிறாய்!


விட்டு விலக மறுக்கின்றாய்!

யானை போல நடக்கின்றாய்!


முதுகில் சுமந்து களிக்கின்றாய்!

தூக்கிப் போட்டுப் பிடிக்கின்றாய்!


ஆமா ஆமா  பொன்னம்மா!

இதற்கு ஈடும் உள்ளதோ?


செல்லத் தோட விளையாண்டால் 

நேரம் போத வில்லையே!


குழந்தையைத் தழுவிக் கொஞ்சுவதே

உடலுக் கின்ப மாகுமாம்!


மழலைப் பேச்சைக் கேட்பதே

பெற்றோர் செவிக்கு இன்பமாம்!


வள்ளுவர் வாய்க்குச் சக்கரை

போட வேண்டும் பொன்னம்மா

குழந்தைகளுக்கு குறளமுதம் 24

 குழந்தைகளுக்கு குறளமுதம் 24

குறள் 24:

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ் (64).


அம்மா அம்மா  வாயேன்!

தம்பிப் பாப்பா பாரேன்!


தட்டில் உள்ள  சோறைக்

கையால் நன்கு பிசைந்து


கூழாய் மாற்றி ஒழுக

இரண்டு கையைத் தட்டி


பொக்கை வாயைக் காட்டி

சிரிக்கு தம்மா பாரேன்!


அசிங்கம் தானே அம்மா

வந்து ரெண்டு போடு!


அம்மா வந்து தூக்கி 

கொஞ்சி முத்தம் தந்தாள்!


மகளே இந்தக் கூழ்தான்

அமுதம் என்றே வள்ளுவர்


இந்தக் குறளில் சொன்னார்!

நீயும் இவனைப் போலதான்


அந்த நாளில் இருந்தாய்

நானும் ரசித்துச் சிரித்தேன்!

குழந்தைகளுக்கு குறளமுதம் 23

 குழந்தைகளுக்கு குறளமுதம் 23

மக்கட்பேறு

குறள் 23:

தம்பொருள் என்பதம் மக்கள்

 அவர்பொருள்

தந்தம் வினையான் வரும்.(63)


அத்தை மாமா வாங்க!

குறளின் பொருளைச் சொல்லுங்க!


எங்கள் பெற்றோர் எங்களை

வளர்த்தார் இல்லறம் தந்துவிட்டார்


நாங்களும் கடமையில் திறமைகள்

காட்டி வந்தோம் முன்னேறி!


வாய்ப்பைத் தந்தோம் உங்களுக்கு

உங்கள் திறமையைக் காட்டுங்கள்!


நீங்களும் உங்கள் வாழ்க்கையில்

உழைப்பால் உயர்ந்து உயர்ந்தேதான்


சாதனை யாளர் ஆகுங்கள்!

வரலா றாக மாறுங்கள்!


எங்கள் பெற்றோர் செல்வங்கள்

இந்தத் தரணியில் நாங்கள்தான்!


நீங்கள் எங்கள் செல்வமென்றே

உங்கள் செயலால்  நாட்டுங்கள்!

குழந்தைகளுக்கு குறளமுதம் 22

 குழந்தைகளுக்கு குறளமுதம் 22

மக்கட்பேறு

குறள் 22:

எழுபிறப்பும் தீயவை தீண்டா

 பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்.(62)


பெரியப்பா பெரியப்பா!

இந்தக் குறளைக் கேளுங்க!


பொருளைச் சொல்லி விளக்குங்க!

பொறுமை  யாகச் சொல்லுங்க!


மகனே மகளே குறளுக்கு

இதுதான் விளக்கம் கவனிங்க:


பள்ளிக் கூட ஆசானும்

உங்கள் நல்ல பெற்றோரும்


நல்ல பண்பைச் சொல்வாங்க

கற்றுக் கொண்டால் நல்லது!


கெட்ட பழக்கம் வேண்டாமே

பழியைச் சுமக்க வைத்துவிடும்!


பண்புகள் மிளிரும் குழந்தைகள்

குடும்பம் போற்றும் முத்துக்கள்!


பழிகள் இன்றி வாழ்ந்தால்தான்

நீண்ட காலம்  புகழுடனே


மற்றவர் போற்ற வாழ்ந்திடலாம்!

துன்பம் இன்றி வாழ்ந்திடலாம்!

குழந்தைகளுக்கு குறளமுதம் 21

 குழந்தைகளுக்கு குறளமுதம் 21

மக்கட்பேறு

குறள் 21:

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த

மக்கட்பே றல்ல பிற.(61)


இந்தக் குறளின் பொருளென்ன

அம்மா அப்பா சொல்லுங்க!


பருவம் பார்த்துக் குழந்தைகளைப்

பள்ளியில் சேர்த்தல் எம்கடமை!


படிக்கப் படிக்க கற்கின்றாய்

அறிவை வளர்த்து நிற்கின்றாய்


பெற்றோர் ஆசான் பெருமையுடன்

ஆற்றல் தன்னில் உயர்கின்றாய்!


இப்படிப் பட்ட அறிவார்ந்த

குழந்தைகள் தானே நற்பேறு!


மற்ற பேறுகள் எல்லாமே

பேறுகள் இல்லை ஊறுகளே!


குழந்தைகளுக்கு குறளமுதம் 20

 குழந்தைகளுக்கு குறளமுதம் 20

2. வான்சிறப்பு

குறள் 20:

நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்

வானின் றமையா தொழுக்கு.


சித்தப்பா! சித்தப்பா!

குறளுக்குப் பொருள் என்னப்பா?


கொஞ்சம் சொல்லு சித்தப்பா!

கொஞ்சிச் சொல்லு சித்தப்பா!


மழையே பெய்ய வில்லையென்றால்

நாட்டின் நதிகள் வறண்டுவிடும்!


மாநிலங் களுக்குள் போராட்டம்

தினமும் நடக்கும் காட்சியாகும்!


ஒவ்வொரு மாநில நீர்வளங்கள்

எல்லாம் இங்கே சுருங்கிவிடும்!


விளைச்சல் இன்றி மக்களெல்லாம்

பஞ்சம் பட்டினி என்றலைவார்!


தேவைக் கிங்கே அல்லாடும்

சூழல் தானே உருவாகும்!


கொள்ளை திருடு என்றேதான்

ஒழுக்கக் கேடு உருவாகும்!


தண்ணீர் உலகின் உயிர்மூச்சு!

நீரைத் தருவது மழையாகும்!


இதுதான் குறளின் பொருளாகும்!

நீரைச் சேமித்தல் கடனாகும்!


குழந்தைகளுக்கு குறளமுதம் 18

 குழந்தைகளுக்கு குறளமுதம் 18

2. வான்சிறப்பு

குறள் 18:

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.


அண்ணா அண்ணி குறளுக்குப்

பொருளைச் சொல்லித் தாருங்கள்!


குறளின் பொருளைச் சொல்வதற்கு

நாங்கள் இங்கே வந்துவிட்டோம்!


மழையோ இங்கே பெய்யாமல்

வறட்சிப் பிடியில் சிக்கவைத்தால்


ஊரும்  உலகமும்  வறண்டுவிடும்

அனைத்து இயக்கமும் நின்றுவிடும்!


விழாக்கள் பூசை நடக்காது!

வாழ்க்கைப் பாலை வனமாகும்!


வானில் வாழ்வோர் எனச்சொல்லும்

வானோர் களுக்கும் பூசையில்லை!


இதுதான் தம்பி பொருளாகும்!

மழையின் சிறப்பும் இதுவாகும்!


குழந்தைகளுக்கு குறளமுதம் 17

 குழந்தைகளுக்கு குறளமுதம் 17

2. வான்சிறப்பு

குறள் 17:

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும்

 தடிந்தெழிலி

தான்நல்கா தாகி விடின்.


இன்பச்சுற்றுலா!

இதுதான் வங்கக் கடலாகும்,!

இயற்கை தந்த கொடையாகும்!


சென்னைக் கழகு இதுதானே!

சிறப்பைச் சேர்ப்பதும் இதுதானே!


மாணவ மாணவி எல்லோரும்

மணலில் ஓடிப் பாருங்கள்!


கடலின் கரையை ஒட்டித்தான்

அலையில் காலை நனைக்கலாம்.!


உள்ளே தூரம் போகாதே!

உயிருக் காபத்து அவையாலே!


காணும் இந்தக் கடலிங்கே 

வற்றும் நிலைதான்  வாராதோ?


துடுக்காய் மாணவன் கேட்டான்பார்!

பொறுமை யோடு பதில்சொன்னார்.!


மழையே பெய்ய வில்லையென்றால்

கடலும் வற்றிப் போய்விடுமே!


கடலில் வாழும் உயிரினங்கள்

வாழத் தேவை தண்ணீரே!


முத்து போன்ற கடல்செல்வம்

வற்றா நிலைக்கு நீர்வேண்டும்!


கடலின் இயல்பு மாறாமல்

இருக்க மழைநீர் தேவைதான்!


வள்ளுவர் குறளில் கூறுகின்றார்!

வானின் சிறப்பில் விளக்குகின்றார்!


குழந்தைகளுக்கு குறளமுதம் 15

 குழந்தைகளுக்கு குறளமுதம் 15

2. வான்சிறப்பு

குறள் 15:

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்

 றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை.


அன்பைப் பொழியும் தமிழம்மா!

அறிவைப் புகட்டும் தமிழம்மா!


இந்தக் குறளின் பொருள்தன்னை

கொஞ்சம் சொல்லிக் கொடுங்கம்மா!


நன்றாய் வாழ்வோர் வளமிழந்து

நலியச் செய்வது வான்மழையே!


பருவ மழையோ பொய்த்துவிட்டால்

வறட்சிப் புயலில் வளமிழப்போம்!


மீண்டும் மழையோ பொழிந்துவிட்டால்

இழந்த வளங்கள் சேர்ந்துவிடும்!


வளத்தை இழப்பதும் வான்மழையால்!

இழந்ததைப் பெறுவதும்தேன்மழையால்!


வாழ்வில் இன்பமும் மழையாலே!

வாட்டும் துன்பமும் மழையாலே!




குழந்தைகளுக்கு குறளமுதம் 14

 குழந்தைகளுக்கு குறளமுதம் 14

2. வான்சிறப்பு

குறள் 14:

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்

வாரி வளங்குன்றிக் கால்.


சென்ற ஆண்டு மாமாஊர்

செழிப்பாய் இருத்ததை நான்பார்த்தேன்


இந்த ஆண்டு ஏனந்த 

செழிப்பைக் காணோம் சொல்லம்மா!


மழையே இல்லை என்செல்லம்

அதனால் விளைச்சல் இல்லையே!


விளைச்சல் தானே வருமானம்

அதுவே குறைந்து போனதே!


அதனால் உழவுத் தொழிலிங்கே

நின்று போன கோலம்பார்.!


ஊரே வறட்சிப் பிடியினிலே

வறண்டு போனது பார்பார்பார்!


இதுதான் காரணம் தெரிஞ்சுக்கோ

மழையே ஆதாரம் புரிஞ்சுக்கோ!





குழந்தைகளுக்கு குறளமுதம் 13

 குழந்தைகளுக்கு குறளமுதம் 13

2. வான்சிறப்பு

குறள் 13:

விண்இன்று பொய்ப்பின் விரிநீர்

 வியனுலகத்து

உள்நின் றுடற்றும் பசி.


அணிலே  அணிலே ஓடிவா

அழகாய் அழகாய் ஓடிவா


இந்தக் குறளைப் படித்துப்பார்

படித்துப் பார்த்துப் பொருளைச்சொல்!


பாப்பா நானும் படித்துவிட்டேன்

பொருளைச் சொல்றேன் பிடித்துக்கொள்!


உலகைச் சூழ்ந்தே கடலுண்டு!

கடலுக் குள்ளே  நீருண்டு!


இருந்த போதும் உணவாக

நமக்கு இங்கே உதவாது!


நமது உயிரை வான்மழைதான்

உணவைத் தந்தே காப்பாற்றும்!


வான்மழை இங்கே பொய்த்துவிட்டால்

பசியால் உயிர்கள் வாடிவிடும்!


பருவ மழையே உயிர்நாடி!

இல்லை என்றால் துயர்கோடி!


Friday, March 27, 2026

குழந்தைகளுக்கு குறளமுதம் 12

 குழந்தைகளுக்கு குறளமுதம் 12

2. வான்சிறப்பு

குறள் 12:

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித்

 துப்பார்க்குத்

துப்பாய தூஉ மழை.


அங்கும்  இங்கும் அலைகின்ற

அருமை மேகக் கூட்டமே!


அருகில் வந்து நில்லாயோ!

குறளின் பொருளைச் சொல்லாயோ!


அன்புத் தம்பி தங்கையே!

ஆகா நாங்கள் வந்துவிட்டோம்!


மழையைச் சுமந்து வருகின்றோம்!

மண்ணகம் குளிரத் தருகின்றோம்!


உலக உயிர்களைக் காப்பதற்கு

உணவைத் தருவதும் மழைதானே!


தாகம் தன்னைத் தீர்ப்பதற்கு

உணவாய் உள்ளதும் மழைதானே!


உணவைத் தருவதும் மழையாகும்!

உணவாய் உள்ளதும் மழையாகும்!


உங்கள் உயிரைக் காக்கின்றோம்!

எங்கள் சிறப்பும் இதுதானே!


கடமை எங்களை அழைக்கிறது!

விரைந்து நாங்கள் செல்கின்றோம்!





நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


உங்கள் செயல்பாட்டில் உள்ள குறைகளுக்கு

மற்றவர்மேல் குற்றம் சுமத்திடக் கற்கவேண்டாம்! 

உள்ளதைச் செய்யுங்கள் என்ன முடியுமோ

செய்யுங்கள்! மற்றவர்க்குத் தொல்லை கொடுக்காமல்!

உங்கள் இலக்கே குறி


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்கு கவிதை:


செய்யவேண்டும் என்று நினைத்தால் உடனேதான்

செய்யுங்கள்! தாமதமாக் காதீர்கள் தாமதித்தால்

அப்பணி நீண்டநேரம் தாமதிக்கும்! அப்பணி

தன்னுடைய முக்கியத்தை அங்கே இழந்துவிடும்!

செய்ய நினைத்ததைச் செய்.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில் புத்தன்


 நண்பர் எழில் புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


கையில் இருக்கும் பணிமுடித்தல் நல்லது!

கண்ணுக் கெதிரிலே உள்ள படியிலே

 கால்வைப்ப தைவிட்டு மாடிக்குப் போகின்ற

அந்தப் படியனைத்தை நோட்டமிடல் தப்பாகும்!

உள்ளத் தெளிவை அளிக்கும் இலக்குகளை

வெல்ல வழிவகுக்கும் சொல்.

மதுரை பாபாராஜ்

உரிமையும் சலுகையும்!


 உரிமையும் சலுகையும்!

உரிமைகள் எல்லாம் சலுகைகள் அல்ல!

சலுகைகள் எல்லாம் உரிமைகள் அல்ல!

உரிமை உனக்கான தாகுமிங்கே! ஆனால்

சலுகை பொதுவான தாம்.

மதுரை பாபாராஜ்

குழந்தைகளுக்கு குறளமுதம் 11

 குழந்தைகளுக்கு குறளமுதம் 11

2. வான்சிறப்பு

குறள் 11:

வானின் றுலகம் வழங்கி வருதலால்

தானமிழ்தம் என்றுணரற் பாற்று.


மேகம் அண்ணா வாங்க!

இந்தக் குறளின் பொருளை

கொஞ்சம் சொல்லிப் போங்க!

குழந்தை சத்தம் கேட்டு

மேகம் கீழே பார்த்து

சிரித்துச் சிரித்து வந்தே

குழந்தை அருகில் வந்தது!

கடலில் நீரை முகந்து

குளிர்ச்சி யாக மாற்றி

உலகில் மழையைப் பொழிவேன்!

உயிரை வாழ வைப்பேன்!

உலகை வாழ வைக்கும்

உயிர்நீர் ஆவ தாலே

அமிழ்தம் என்றே வள்ளுவர்

அன்றே எழுதி வைத்தார்.!

கேட்ட தற்கு நன்றி!

சென்று வரு  கின்றேன்!





குழந்தைகளுக்கு குறளமுதம் 10

 குழந்தைகளுக்கு குறளமுதம் 10

குறள் 10:

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்.


அக்கா இங்கே வாயேன்

குறளைச் சொல்லித் தாயேன்!


நாளை நானும் வகுப்பில்

சொல்ல வேண்டும் அக்கா!


அருமைத் தங்கை வர்ரேன்

குறளைச் சொல்லித் தர்ரேன்!


அன்னை தந்தை ஆசான்

நமக்கு நல்ல வழிகாட்டி!


அவர்கள் சொல்லை மதித்து

நாமும் இங்கே வாழ்ந்தால்


இந்தப் பிறவிக் கடலை

எளிதாய் நீந்திக் கடக்கலாம்!


அவர்கள் கூறும் அறவுரைகள்

வழியைக் காட்டும் ஒளிவிளக்கு!


அவர்களைத் தவிர்த்துச் சென்றால்

தத்த  ளிக்க  நேரும்!


இதனை உணர்ந்து வாழ்வோம்

இதயங் குளிர வாழ்வோம்!


அன்புத் தங்கை நீயும்

மனதில் வாங்கிக் கொண்டு


நாளை வகுப்பில் சொல்லு!

தலையை நிமிர்த்தி நில்லு!


 


குழந்தைகளுக்கு குறளமுதம் 9

 குழந்தைகளுக்கு குறளமுதம் 9

குறள் 9:

கோளில் பொறியின் குணமிலவே

 எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை.


அத்தை இங்கே வாங்க

குறளைச் சொல்லித் தாங்க


வந்துட் டேனே செல்லம்

அருமைக் குறள் வெல்லம்


எட்டு வகை குணங்களெல்லாம்

வாழ்க்கைக் கேற்ற ஒழுக்கங்கள்!


இதனை உயிராய் மதிப்பவர்கள்

உலவும் உயர்ந்த சான்றோராம்!


உலக மக்கள் போற்றுகின்ற

உயர்ந்த நெறிகள் கொண்டவராம்!


இப்படிப் பட்ட  உயர்ந்தோரை

வணங்க மறுத்து வாழ்வோர்க்கு


பொறிகள் ஐந்தும் இருந்தாலும்

கட்டுப் படுத்தும் திறனின்றி


சலனப் பட்டு வாழ்ந்திருந்தால் 

அந்தப் புலன்கள் இருந்தாலும்


இயங்கா நிலைதான் கண்மணியே!

பகுத்தறி வோடு இயங்கவிடு!


சான்றோர் தன்னைப் பின்பற்று!

வாழ்க்கை இங்கே வளமாகும்!


பெருமை யோடு வாழ்வதற்குப்

பெரியோர் ஆசிகள் துணைபுரியும்!

குழந்தைகளுக்கு குறளமுதம் 8

 குழந்தைகளுக்கு குறளமுதம் 8

குறள் 8:

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது.


கண்ணே செல்லப் பேத்தியே

கையில் என்ன திருக்குறளா


ஆமாம் தாத்தா உங்களிடம்

பொருளை அறியக் கொண்டுவந்தேன்


இந்தக் குறள்தான் என்தாத்தா

விளக்கம் சொல்லித் தாருங்கள்


ஆகா அருமை சொல்கின்றேன்

உன்னை நானும் மெச்சுகின்றேன்


அறவழி் நடக்கும் சான்றோரின்

அறிவுரை கேட்டு நடந்திட்டால் 


துன்பக் கடலைக் கடக்கலாம்

மற்றவர் கடப்பதோ அரிதாகும்


அறவழிச் சான்றோர் ஒழுக்கத்தைப்

போற்றி் நடந்தால் வாழ்வினிலே


வாழ்க்கைக் கடலை நீந்தலாம்

மற்றவர் நீந்த முடியாது.


குழந்தைகளுக்கு குறளமுதம் 7

 குழந்தைகளுக்கு குறளமுதம் 7

குறள் 7

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது.


இந்தக் குறளுக்குப் பொருளென்ன 

மாமா நீங்கள் சொல்லுங்க


செல்லக் கண்ணே வந்துட்டேன்

தெரிந்த பொருளைச் சொல்கின்றேன்


இணையே இல்லா நற்பண்பை

தங்கள் வாழ்வில் கடைப்பிடிக்கும்


சான்றோர் நமக்கு வழிகாட்டி!

நடப்போம் அவரைப் பின்பற்றி!


அவரது நெறியில் நாம்வாழ்ந்தால்

கவலை இன்றி வாழ்ந்திடலாம்!


அவரைத் தவிர்த்து வாழ்பவர்க்கு

கவலை தீர வழியில்லை!


நாமும் சான்றோர் வழிநடப்போம்

மனதின் கவலையை மாற்றிடுவோம்


குழந்தைகளுக்கு குறளமுதம் 6

 குழந்தைகளுக்கு குறளமுதம் 6

குறள் 6:

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்.


அம்மா அப்பா வாங்க

குறளைச் சொல்லித் தாங்க


அக்கா தம்பி நாங்க

ஆர்வத் தோடு வந்தோம்


சொல்லித் தந்தால் மகிழ்வோம்

சொன்னால் பொருளை அறிவோம்


நம்மிடம் உள்ள ஐம்புலனைக்

கட்டுப் படுத்தி வாழ்கின்ற


தூயோன் போற்றும் நெறிகளையே

ஒழுக்கத் துடனே பின்பற்றும்


நல்லோர் ஈட்டும் நற்புகழால்

ஒளிரும் வாழ்வே நிலையாகும்


புலன டக்கம் இல்லாதோர்

உயர்ந்தோர் எனினும் கீழோரே!


நாமும் புலன்களை அடக்கித்தான்

நிமிர்ந்தே வாழ்வோம் உலகத்தில்



குழந்தைகளுக்கு குறளமுதம் 5

 குழந்தைகளுக்கு குறளமுதம் 5

குறள் 5:

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு


அப்பா அப்பா இங்கேவா

அய்ந்தாம் குறளைச் சொல்லித்தா


வள்ளுவர் என்ன சொல்றாரு

வந்தே நீயும் சொல்லித்தா


வந்தேன் மகனே உன்னிடத்தில்

குறளின் பொருளைச் சொல்கின்றேன்


இறைவனின் உண்மைப் பொருளுணர்ந்து

ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடித்து


புகழை நாட்ட விரும்புவோர்கள்

நன்மை தீமை இரண்டையும்


சமநிலை கொண்டே பார்ப்பார்கள்!

சலனம் இன்றி வாழ்வார்கள்!


இந்தப் பொருளை நீயுணர்ந்து

உன்னைச் செம்மைப் படுத்திக்கொள்!


குழந்தைகளுக்கு குறளமுதம் 4

 குழந்தைகளுக்கு குறளமுதம் 4


குறள் 4

வேண்டுதல்வேண் டாமை இலானடி

சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல


அம்மா அம்மா சொல்லித்தா

அடுத்த குறளைச் சொல்லித்தா

வாம்மா  நீதான் பக்கத்தில் 

வாகாய் நானும் சொல்லிடுவேன்

விருப்பு வெறுப்பு இல்லாமல்

வாழும் இறைவனைச் சரணடைந்தால் 

நமக்குத் துன்பம் நெருங்காது

நிம்மதி யோடு வாழ்வோம்நாம்

விருப்பு வெறுப்பு அற்றவர்கள்

இறைவன் நிலைக்கு ஒப்பாவார்.you

வள்ளுவம் சொல்லும் நற்கருத்தை

மனதில் ஏந்தி நடைபோடு.








குழந்தைகளுக்கு குறளமுதம் 3

 குழந்தைகளுக்கு குறளமுதம்!

குறள் 3:

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்.


அம்மா அப்பா வாங்க

அருகில் வந்து சொல்லுங்க

மூன்றாம் குறளைப் பாருங்க

முத்தாய்க் கருத்தைக் கூறுங்க

மலரைப் போன்ற மனதிற்குள்

போற்றும் இறைவன் திருவடியை

நினைத்தே வாழும் மாந்தர்கள்

நிலைத்த புகழுடன் வாழ்வார்கள்

அவரே வாழ்வின் வழிகாட்டி

அவரைப் போற்றி வாழ்வோம்நாம்

அந்தப் பண்பே புகழ்சேர்க்கும்

நீடு வாழ வழிகாட்டும்!

மனதில் பதித்துப் பின்பற்று

வையகம் உனது வசமாகும்!


குழந்தைகளுக்கு குறளமுதம் 2:

 குழந்தைகளுக்கு குறளமுதம்

குறள் 2:

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.

அம்மா அப்பா வாங்க

இந்தக் குறள சொல்லுங்க

படிச்சு முடிச்ச பெற்றோரே

என்ன பொருளோ சொல்லுங்க!

செல்லக் குட்டி என்கண்ணே

சொல்லித் தாரேன் கேட்டுக்க

உரிய வயதில் படித்துக்கொள்

ஒழுக்கந் தன்னைக் கற்றுக்கொள்

அடக்கம் பணிவே இமையாகும்

அதுவே வாழ்வின் வழியாகும்

அறிவில் மூத்த சான்றோரை

வணங்கும் பண்பைக் கற்காதோர்

என்ன கல்வி கற்றாலும்

எந்தப் பயனும் இல்லையம்மா!

பெரியோர் ஆசிகள் வாழவைக்கும்

வணங்கி வாழக் கற்றுக்கொள்

அம்மா அப்பா புரிந்துகொண்டேன்

நன்றி நன்றி உங்களுக்கு!


குழந்தைகளுக்கு குறளமுதம் ! 1

 குழந்தைகளுக்கு குறளமுதம்!


அறத்துப்பால்

1.வழிபாடு

குறள் 1:

.அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.


அம்மா இங்கே வாவா

அருமைக் குறளைச் சொல்லித்தா

இந்தோ வந்தேன் என்செல்லம்

குறளே அமுதம் என்செல்லம்

மொழியின் முதலோ அகரந்தான்

தமிழுக்கு அதுவே சிகரந்தான்

உலக மொழிகள் அனத்திற்கும்

முதலாம் எழுத்தே அகரந்தான்!

உலகின் மூலச் சான்றோர்கள்

ஆதி பகவன் எனச்சொல்வோம்!

இதுதான் முதலாம் திருக்குறளாம்

கற்பது உந்தன் கடமையாம்

நன்றி நன்றி என்னம்மா!

ஆசை முத்தம் உனக்கம்மா!

வாழ்வியல் அந்தாதி 91-100

 91.கோடுகளை நீரில் நிலத்திலே வான்வெளியில்

  நாடுகள் தங்களுக்குள் போட்டு வரையறுத்தார்!

  கோடுகளைத் தாண்டினால் மக்களைக் கொல்கின்றார்!

  கேடுதரும் கோடுகளை நீக்கு.


92.நீக்கும் களைகளை வெட்டி, பயிரினத்தைக்

  காக்கும் முயற்சி எடுத்தால் வயல்களில்

  நோக்கும் இடமெல்லாம் நெற்கதிர்கள் கூத்தாடும்!

  நாட்டின் உயிரே உழவு.


93.உழவுத் தொழிலை உயிரெனப் போற்றி

  உழைக்கும் உழவர்கள் வாழ்வில் வளங்கள்

  நிலையாக வேண்டும்! நிம்மதியும் வேண்டும்!

  உலகே உழவரை வாழ்த்து.


94.வாழ்த்தினால் வாழலாம்! வீழ்த்தினால் வீழ்ந்திடுவோம்!

  வாழ்த்தப் பழகுங்கள் உற்சாகம் ஊற்றெடுக்கும்!

  காலம் வசப்படும்! அனைவரும் மதித்திடுவார்!

  வாழ்த்தி மகிழ்வோம் தினம்.


95.தினமும் வளர்கின்றோம் தேய்பிறை என்பார்!

  மனமே! நிலவுக்கோ தேய்பிறைக்குப் பின்பு

  தினமும் வளர்பிறைதான்! நிலவை ரசிப்போம்!

  மனிதனோ தேய்வ தியல்பு.


96.இயல்பான மாற்றம் நிலையாக நிற்கும்!

  இயல்பாக மாறும் மனமாற்றம் ஒன்றே

  பயனளிக்கும்! இல்லறத்தில் ஒற்றுமை கூடும்!

  தளமற்ற ஒற்றுமை வீண்.


97.வீண்புரளி தன்னைப் பரப்பித்தான் அச்சத்தைத்

  தூண்டிவிடும் வக்கிரச் சிந்தனை கொண்டவர்கள்

  மானே! மிருகமனங் கொண்டலையும் கூட்டத்தார்!

  வீணர்கள் என்றே விலக்கு.



98. விலக்குவதை இங்கே விலக்காமல் விட்டால்

   கலக்கத்தில் வாழ்க்கை கரையுடைத்துச் செல்லும்!

   விலக்கிவிட்டால் வாழ்வே ஒளிமயமாய் மாறும்!

   களங்கமின்றி வாழ்தல் அறிவு.


99 அறிவிலே ஆற்றறிவும் ஐய்ந்தறிவும் உண்டு!

   நெறிப்படுத்தி வாழ்பவர் ஆறறிவு மாந்தர்!

   நெறிபிறழும் ஐந்தறிவு கொண்ட விலங்கு!

   நெறியுடன் வாழ்தல் மனிதம்.


100 மனிதம் தழைத்தால் உலகம் சிறக்கும்!

   புனிதம் நிலைக்கும்! அறவழி ஓங்கும்!

   மனிதநேயத் தொண்டுகள் பொங்கிப் பெருகும்!

   மனைதோறும் மங்கலம் உண்டு.

வாழ்வியல் அந்தாதி 81-90

 81. மரங்கள் வளர்ந்தால் மழைபெறும் நாடு!

   கழனி செழித்தால் வளம்பெறும் வீடு!

   உயர்வின் உயிரே தமிழென்று பாடு!

   உலகமே நீயெழுதும் ஏடு.


82. ஏடுகளின் மூலந்தான் முன்னோரின் நாகரிகத்தை

   கூடு, குகைகளில் வாழ்ந்த வரலாறை

   சூடு பறக்கச் சுழன்றடித்த போர்முறையை

   நாடறிய நாம்கற்றோம் நன்கு.


83.நன்கு படித்தவர்கள் நாடறிய வாழ்பவர்கள்

  என்றும் தனிமனித நல்லொழுக்கப் பண்புகளைக்

  கண்போலப் போற்றவேண்டும்! கண்ணிமைபோல் காக்கவேண்டும்!

  இன்றேல் உலகமே! தூற்று.



84.  தூற்றும் செயல்களை வேண்டியவர் செய்துவிட்டால்

    போற்றும் நிலையெடுக்கும் போலித் தனத்தாலே

    காற்றடிக்கும் திக்கெல்லாம் காகிதமாய்ச் செல்லாதே!

    தூற்றுவதைத் தூற்று நிமிர்ந்து.


85 .நிமிர்ந்தோம் எனநினைப்போம் அப்போது வாழ்க்கை

   குனியவைத்துப் பார்க்கும்! சோர்ந்திடுவோம்! உடனே

   நிமிரவைக்கும்! வாழ்க்கை நகர்த்துகின்ற காய்கள்

   மனிதனுக்குப் பாடமென்று சொல்.


86. சொல்வதை நேர்படச் சொல்வதை விட்டுவிட்டுக்

   கள்ளத் தனமாகப் புறம்பேசி வாழாதே!

   உள்ளக் குமுறல் உளைச்சலுக்கு வித்தாகும்!

   புல்லருக்குப் பொய்மையே சொத்து.  


87. சொத்துக்கள் உட்பகையைத் தூண்டிவிட்டுச் சொந்தங்கள்

    கட்டவிழ்ந்து போர்க்கோலம் பூணவைத்துப் பார்த்திருக்கும்!

    விட்டுக் கொடுக்கும்  மனக்கதவை மூடிவிடும்!

    சொத்தே உயிர்க்கொல்லி நோய்.


88 . நோய்களின் தாக்கம் உடற்பரப்பை மொய்த்தால்

    நோய்கள் குணமாக இங்கே மருந்துண்டு!

    நோய்வடிவில் நாளும் கவலைகள் உள்ளத்தை

    மேய்ந்தால் மருந்துண்டோ? செப்பு.


89. செப்புப் பதுமைகள் வைத்து விளையாடும்

    சிற்றில் பருவத்துச் சின்னக் குழந்தைகள்

    தத்தித் தவழ்ந்தே மழலைத் தமிழ்ச்சொல்லால்

    திட்டும் அழகே அழகு.


90. அழகின் சிரிப்பு நிறங்களில் அல்ல!

    உயர்வான எண்ணம் உறவாடும் உள்ளம்

    அழகின் திருக்கோயில் ஆகும்! இதுதான்

    அழகின் இலக்கணக் கோடு.

வாழ்வியல் அந்தாதி 71-80

 71.உயிரும் உடலும் இணைந்தியங்கும் போது

  புவியும் வணங்கும்! உறவும் மதிக்கும்!

  உயிர்பிரிந்த பின்பு சடலமென்று கூறி

  எரிப்பதற்கே முந்துவார் இங்கு.


72.இங்கேயும் அங்கேயும் பார்க்கும் பொருளையெல்லாம்

  தங்கு தடையின்றி வாங்கிக் குவிக்கின்றார்!

  தங்கிவாழும் வீட்டில் நடக்க இடமில்லை!

  கண்மணியே! தேவையெனில் வாங்கு. 


73. வாங்குகின்ற சக்தி இருக்கின்ற காரணத்தால்

   வாங்கத் துடிப்பது நல்லதல்ல! வாங்குவதை

   வாங்கும்முன் தேவை அறிந்தேதான் வாங்கவேண்டும்!

   வாங்கியபின் சோகம் தவிர்.

74. தவிர்ப்போம் சினத்தை, பகையை, பொய்யை,

   பழிவாங்கும் எண்ணத்தை, வன்முறையை, நம்மை

   அழிக்கும் குடிவெறியை என்றே துணிந்தால்

   புவியில் உயரும் புகழ்.

75. புகழ்ந்தாலும் நம்மை இகழ்ந்தாலும் நாமோ

   அகங்குளிர ஏற்கும் மனநிலை பெற்றால்

   அடலேறாய் யாருக்கும் அஞ்சாமல் நாளும்

   கடமையைச் செய்வோம் துணிந்து.


76.துணிந்தால் மலையும் மடுவாகும்! நாளும்

  குனிந்து குனிந்தேதான் குட்டுகள் பெற்றால்

  பணிவல்ல கோழைத் தனமென்பேன்! என்றும்

  துணிவில் விவேகத்தைச் சேர்.





77.சேர்ந்துவாழ்ந்தால் கோழையும் ஆற்றலுடன் வீரனாவான்!

  சேராமல் வாழ்ந்திருந்தால் வீரனும் கோழையாவான்!

  சேர்ந்திருந்தால் நன்மையுண்டு! அன்றித் தனித்திருந்தால்

  நாரற்ற பூக்கள்தான் வாழ்வு.


78.வாழ்வை வளைத்தல் கடினம்! அமைகின்ற

  வாழ்க்கை நடப்பதற் கேற்ப வளைந்துகொடு!

  நாள்தோறும் நிம்மதி வாசலில் கோலமிடும்!

  வாழ்வதற்கு விட்டுக் கொடு.


79.கொடுப்பதை அன்புடன் தந்தால் மகிழ்வார்!

  வெடுக்கென்று பேசி முகஞ்சுழித்துத் தந்தால்

  கொடுப்பது மாணிக்கம் என்றாலும் வாங்க

  மறுத்திடும் உள்ளம் வெறுத்து.


80.வெறுப்பை மறந்தால் உறவு தழைக்கும்!

  வெறுப்பை வளர்த்தால் பகையும் வளரும்!

  கடும்பகை இன்றியே அன்பைப் பொழிவோம்!

  நடுவோம் போதி மரம்.



வாழ்வியல் அந்தாதி 61-70

 61.மெய்ஞ்ஞானப் பார்வையோ ஆன்மிக எண்ணங்கள்!

  விஞ்ஞானப் பார்வை அறிவியல் சிந்தனை!

  விஞ்ஞானம் இங்கே நிரூபித்துக் காட்டுவது!

  மெய்ஞ்ஞானம் நம்புவது தான்.


62.தான்செய்யும் தப்புகளை மூடி மறைப்பதும்

  தேனகமே! மற்றவர்கள் என்றால் நகைப்பதும்

  கோணல் மனங்கொண்ட வக்கிரப் புத்தியாகும்!

  ஈனமனச் சிந்தனைகள் ஏன்?


63.ஏனம்மா என்றேன்! அருகில் நெருங்கிவந்தாள்!

  மான்விழியே! உன்பெயரைச் சொல்லேன்? எனக்கேட்டேன்!

  நான்தான் உந்தன் கவியரசி என்றதும்

  நான்பறந்தேன் வானில் மிதந்து.


64.மிதந்துவரும் மேகங்கள் நீரை முகந்துக்

  கடந்துசெல்லும் நேரம் கருமேக மாகிச்

  சடசட வென்றேதான் பாரபட்சம் இன்றி

  அகங்குளிர நாட்டில் மழைபெய்யும் தொண்டால்

  நடக்கிறதே இவ்வுலக வாழ்வு.


65.வாழ்வின் உயிராம் மழைநீரைத் தேக்காமல்

  நீர்நிலைக் குள்ளேயே வீடுகளைக் கட்டிவிட்டோம்!

  நீர்தேங்கத் தத்தளித்தே ஊருக்குள் வீட்டுக்குள்

  பாய்ந்துவந்து சீரழிக்கும் கோலத்தை உண்டாக்கி

  பாழ்பட்டு நிற்கின்றோம் பார்.


66.பார்த்தனர்! கண்கள் கலந்தன! பார்த்தவள்

  பார்த்தவனின் பார்வையைச் சற்றே தவிர்த்திட

  ஊர்ந்துவந்த நாணத்தின் தேரை நகர்த்தினாள்!

  காகுத்தன், சீதை நிலை.


67.நிலைகளை முன்னேற்ற நேர்வழியே நன்று!

  அலைபாய விட்டுக் குறுக்குவழி சென்றால்

  நிலைகுலையும்! வாழ்க்கையின் நிம்மதி போகும்!

  விழலுக் கிறைத்திட்ட நீர்.


68.நீரெது? பாலெது? கண்மணியே! அன்னம்போல்

  நீரை ஒதுக்கவேண்டும்! பாலை அருந்தவேண்டும்!

  நீரென்றால் வேற்றுமையாம்! பாலென்றால் ஒற்றுமையாம்!

  பாலருந்தி வாழ்தல் உயர்வு.

69.உயர்வு மனப்பான்மை கர்வம் கொடுக்கும்!

  உலகிலே தாழ்வு மனப்பான்மை வாழ்வில்

  கலங்கவைக்கும் கோழைத் தனத்தை வளர்க்கும்!

  உயர்வை உயர்த்தும் பணிவு. 


70. பணிவும் அடக்கமும் பக்குவத்தின் வேர்கள்!

    கனிவு, கருணை இரக்கத்தின் தூண்கள்!

    துணிவும் உழைப்பும் உயர்வின் படிகள்!

    அனைத்துமே வாழ்வின் உயிர்.


வாழ்வியல் அந்தாதி 56-60

 56.நகைத்ததை எண்ணித் தலைகுனிய வேண்டாம்!

  சிறைப்படுத்தும் உந்தன் அறியாமை போக்கி

  முறையாய் அறிவாற்றல் தன்னை வளர்த்துக்

  குறைநீக்கி நிற்பாய் நிமிர்ந்து.


57.நிமிர முடியாமல் தத்தளிக்கும் ஏழை

  நிமிர்வதற்கு வாய்ப்புகளைத் தந்தாக வேண்டும்!

  நிமிரத் துடிப்பவர்கள் வாய்ப்பினை ஏற்றே

  நிமிர்ந்தேதான் வாழ்தல் சிறப்பு.


58.சிறப்பான பண்புகளைக் கடைப்பிடிக்க வேண்டும்!

  சிறந்தவர் என்றே பெயரெடுக்க வேண்டும்!

  இறந்த பிறகும் புகழ்நிலைக்க வேண்டும்!

  பிறவிப் பயனிது தான்.


59.தானென்னும் ஆணவத்தைத் தத்தெடுக்கும் உள்ளத்தில்

  ஈனத் தனங்களே கொண்டாட்டம் போட்டிருக்கும்!

  மானத்தைத் தள்ளி அவமானந் தன்னையே

  மானமென்று கூறும் சிரித்து.


60.சிரித்து நடிப்பார்! நடித்துச் சிரிப்பார்!

  சிரித்து நடித்தால் திறமை! நடித்துச் 

  சிரித்தால் கயமை! இதயங் குளிர

  சிரிக்கும் சிரிப்பொன்றே மெய்


வாழ்வியல் அந்தாதி 51-55

 51.உயிருள்ள போதோ உணவின்றி நாளும்

  தவிக்கவிட்டு வேடிக்கை பார்த்தவ ரெல்லாம்

  உயிர்போன பின்னே படையலைப் போடும்

  இழிமனம் கொண்டதேன்? கூறு.


52.கூறுவதை இங்கே தெளிவாய்ச் சுருக்கமாய்க்

  கூறுகின்ற நுட்பமும் பக்குவமும் நாட்டுக்கு

  நாடுசென்று செய்திகளைச் சேகரிக்கும் ஒற்றர்கள்

  பாடுபடும் ஆற்றலுக்கு வித்து.


53.வித்தின்றி மண்ணிலே நல்விளைச்சல் காணலாம்!

  இத்தரணி மீது விருந்தினர் உண்டபின்

  மிச்சத்தை உண்பார் நிலத்தில் விதைக்காமல்

  எக்காலும் பொன்விளைச்சல் உண்டு.


54.உண்டு களிப்பதும் தூங்கி விழிப்பதும்

  என்றிருத்தல் சோம்பேறி வாழ்க்கையாம்----கண்ணே!

  எறும்பு, பறவைகள்போல் சோம்பலை நீக்கிச்

  சுறுசுறுப்பாய் வாழ்தல் அறிவு.


55. அறிவார்ந்த சான்றோர் அவையில் தனது

  அறியாமை தன்னை அறிவாற்றல் என்றே

  பறைசாற்ற முற்பட்டால் எல்லோரும் பார்த்தே

  அறிவிலி என்பார் நகைத்து.

வாழ்வியல் அந்தாதி 46-50

 46 .காட்டுக்குள் சென்று தவமிருந்து ஞானத்தைத்

    தேக்கிவைக்க வீட்டுக் கடமை மறந்துவிட்டு

    நாட்டமுடன் செல்வது குற்றந்தான்! நம்பியுள்ள

    வீட்டாரைக் காத்தல் தவம்.


47. தவமாய் நினைத்துக் கடமையைச் செய்தால்

   கவனம் சிதறாமல் செய்து முடிப்போம்!

   தவத்தைத் துறவறம் என்றே நினைக்கும்

   தவறை மனிதனே நீக்கு.


48.நீக்கவேண்டும் வாழ்வைச் சிதைக்கும் குடிவெறியை!

  தேக்கவேண்டும் இல்லறத்தைக் காக்கும் குறள்நெறியை!

  நீக்குவதைத் தேக்கிவைத்துத் தேக்குவதை நீக்கிவிட்டால்

  தூற்றும் சமுதாயம் சூழ்ந்து.



49.சூழ்ந்திருக்கும் நண்பர்கள் நல்லவரா? கெட்டவரா?

  காய்தல் உவத்தலின்றித் தன்னல எண்ணமின்றி

  நாளும் கபடமின்றி உள்ளவரா? என்றேதான்

  பார்த்துப் பழகுவதே நட்பு.


50.நட்பற்ற வாழ்க்கை நரம்பற்ற வீணைதான்!

   நட்பின் அரவணைப்பில் உள்ளம் நெகிழ்ந்திருக்கும்!

  நட்பின் முரண்பாட்டில் நெஞ்சம் தகித்திருக்கும்!

  நட்புதான் வாழ்வின் உயிர்.


வாழ்வியல. அந்தாதி 41-45

 41.மனதை அலைபாய விட்டுவிட்டால் போதும்!

  கணப்பொழுதும் நிம்மதியைக் காண்ப தரிது!

  மனதை நிலைப்படுத்தி உன்வச மாக்கு!

  அனைவரும் ஏற்பார் மதித்து.


42.மதிப்பை உயத்துவதும் தாழ்த்துவதும் பண்பே!

  மதிக்கப் பழகு! மதிக்கப் படுவாய்!

  மதிக்கத் தவறினால் பண்பற்றோர் என்றே

  ஒதுக்கித்தான் வைக்கும் உலகு.


43.உலகமே இப்பொழுது கைக்குள் அடங்கும்

  வியத்தகு மாற்றத்தை, நாளும் கணினிப்

  புரட்சி உருவாக்கி நாடுகளின் வாழ்க்கைத்

  தரத்தை உயர்த்தியதே இன்று.


44. இன்றிருப்போர் நாளையில்லை என்றிருக்கும் வாழ்க்கையில்

   என்னென்ன கோபங்கள்! என்னென்ன ஆர்ப்பாட்டம்!

   மண்ணுக்குள் மண்ணாக மக்கும் மனிதனே!

   பண்பகமாய் வாழப் பழகு.


45.பழகுவதில் என்றும் பரபரப்பாய் நெருங்கிப்

   பழகினால் உள்ளத்தில் பக்குவம் இல்லை!

   விலகிநின்ற போதும் விவேகத் தெளிவைப்

   பழகுகின்ற நட்பிலே காட்டு.

வாழ்வியல் அந்தாதி 36-40

 36.நொந்து தளரவைக்கும் சூழ்நிலைகள் தோன்றினால்

   சந்திக்க வேண்டும் தளராதே மானிடனே!

   சிந்தித்து மூண்டெழுந்தால் சூழ்நிலைகள் ஓடிவிடும்!

   சந்தித்து வாழ்தல் அறிவு.

------------------------------------------------------------------------------------------------


37.அறிவுத் திருக்கொயில் நம்முடைய உள்ளம்!

  அறிவைப் பயன்படுத்திச் செம்மையாய் வாழ்வோம்!

  வெறிகொண்டு கண்டதையும் நாடும் மடமை

  தறிகெட்ட வாழ்வைத் தரும்.


38.தருவதை அன்புடன் தந்தால் மகிழ்வார்!

  விருப்பின்றித் தந்தால் முகஞ்சுழித்துப் போவார்!

  துரும்பளவோ தூணளவோ என்னவென் றாலும்

  கருணை பொழியக் கொடு!


39.கொடுப்பதை இங்கே விளம்பரம் இன்றிக்

  கொடுப்பதே நன்கொடை யாகும்--அடுத்தவர்

  போற்றுவதற் காகக் கொடுத்தால் இழிவாகும்!

  ஏற்பவர் உள்ளம் சுடும். 


40.சுடுசொல்லை நாளும் அடுத்தவர் மீது 

  தொடுத்தேதான் இன்புறுதல் வேண்டாம்--தொடுத்தது

  மீண்டு தொடுத்தவரைத் தாக்கித் துடிக்கவைத்தால்

  ஏங்கித் தவிக்கும் மனது.

வாழ்வியல் அந்தாதி 31-35

 31.தாயை மறந்தவன் இங்கே மனிதனல்ல!

  தாய்நாட்டைத் தூற்றுபவன் என்றும் துரோகிதான்!

  தாய்மொழியைச் சாடுபவன் கோடரிக் காம்பென்பேன்!

  தாய்மைக்கு நன்றியுடன் வாழ்.


32.வாழ்க்கையை இப்படித்தான் வாழவேண்டும் என்றேதான்

  வாழ்வில் நெறிமுறையைப் பின்பற்றி வாழ்ந்திருந்தால்

  சூழ்ந்திருக்கும் ச்ற்ரமும் நட்பினமும்! கண்டபடி

  வாழ்ந்தால் விலகும் கலைந்து.


33. கலைவதும் கூடுவதும் வாழ்வின் இயல்பு!

   கலைகின்ற நேரமும் கூடுகின்ற போதும்

   நிலையாய்ப் பகைவளர்க்கும் கோபத்தைக் காட்டி

   உலைவைக்க லாமா உறவு?


34.உறவின் நிழலில் உவகை பெருகும்!

  உறவின் பகையில் உளைச்சல் துளைக்கும்!

  உறவுகள் வாழ்வின் உயிர்த்துடிப் பாகும்!

  உறவுகள் இல்லறத்தின் வேர்.

35. வேரூன்றி நின்றால் மரங்கள் நிமிர்ந்திருக்கும்!

   வேர்தளர்ந்து போனால் மரங்களோ தள்ளாடும்!

   சூழ்நிலைகள் நன்றா? மனிதன் சிரித்திருப்பான்!

   பாழானால் வாடிநிற்பான் நொந்து.

வாழ்வியல் அந்தாதி 26-30

 26. இறைவனை நம்பிக் கடமையைச் செய்தால்

   இறையருள் கிட்டுமிங்கே! நம்பாமல் செய்தும்

   இறையருள் கிட்டும்! கடமையைப் போற்றும்

   இறைவன் கருணைக் கடல்.


27. கடலேழும் எல்லைக்குள் ஆடித்தான் நாளும்

   அடக்கமுடன் வாழ்வதும் உண்டு!---அடங்காமை

   கொண்டு சுனாமியாய் மாறி அழிக்கின்ற

   தன்மையும் உண்டென்று கூறு. 


28. கூறுவதே குற்றமென்று வாய்ப்பூட்டுச் சட்டத்தை

    நாடுகளில் கொண்டுவந்தோர் காணாமல் போய்விட்டார்!

    பாடுபட்டு மக்களாட்சி மாண்புகளைக் காப்பவர்கள்

    ஏடுபோற்ற வாழ்வார் நிலைத்து.


29. நிலைத்தது செல்வமென்று தேடுகின்றார் மக்கள்!

   துளைபோட்ட பானையிலே தண்ணீர்தான் செல்வம்!

   நிரப்ப நிரப்ப வழிந்தோடும் செல்வம்!

   விலக்கவேண்டும் ஆசையை நீ.

---------------------------------------------------------------------------------------------------------


30.நீயென்னைப் பெற்றெடுத்துக் கண்ணிமைபோல் பாதுகாத்தாய்!

  நீபொழிந்த அன்பை நினைத்துச் சிலிர்க்கின்றேன்!

  நானுன்னை வாழ்த்தி வணங்கி மகிழ்ந்திருப்பேன்!

  வான்மழை போன்றவளே தாய்.

--------------------------------------------------------------

வாழ்வியல் அந்தாதி 21-25

 21. குணங்களில் நல்லகுணம் கெட்டகுணம் என்றே

   இனம்பிரித்து வைத்துள்ளார்! நல்லகுணம் ஏற்றால்

   மனங்குளிரும்! கெட்டகுணம் தத்தளிக்க வைக்கும்!

   தினவாழ்வில் நற்குணத்தைப் போற்று.


22. போற்றுவதைப் போற்றும் பெருந்தன்மைப் பண்புடன்

   தூற்றுவதைத் தூற்றும் துணிவும் இணைந்துவிட்டால்

   காற்றடிக்கும் திக்கெல்லாம் காகிதமாய் மாறமாட்டார்!

   போற்றும் செயல்களைச் செய்.


23. செய்யும் கடமையை எப்படியும் செய்யவேண்டும்!

   செய்த பிழைகளுக்குக் காரணத்தைத் தேடாதே!

   செய்ய முடிந்ததைச் சிந்தித்துச் சொல்லிவிடு!

   செய்தால் மனதார வாழ்த்து.


24. வாழ்த்துவதும் ஊக்கம் கொடுப்பதும் முன்னேற்றும்!

   தாழ்த்துவதும் அண்டிக் கெடுப்பதும் பாழாக்கும்!

   தாழ்வு மனப்பான்மை வாழ்வைத் தகர்த்துவிடும்!

   வாழ்ககையே வாழ்வதற்கு வாய்ப்பு,


25. வாய்ப்பு வரும்பொழுது நன்கு பயன்படுத்து!

   வாய்ப்பை நழுவவிட்டு நாளும் புலம்பாதே!

   வாய்ப்பே கிடைக்காமல் தவிப்பவர்கள் ஏராளம்!

   வாய்ப்பின் உருவே இறை.


வாழ்வியல் அந்தாதி 26-20

 16.நினைவிலே நிற்கின்ற வண்னமிங்கே வாழ்ந்தால்

  மனிதன் பிறவிப் பயனை அடைவான்!

  நினைத்தாலே முள்ளானால் வாழ்ந்தநாட்கள் இங்கே

  அனைத்துமே வீணென்று செப்பு.


17.செப்புமொழி இவ்வுலகில் எத்தனை வாழ்ந்தாலும்

  அத்தனையும் எந்தமிழுக் கீடாமோ?--எப்படிப்

  பார்த்தாலும் செந்தமிழின் செம்மைக்கோ ஒப்பில்லை!

  தாய்த்தமிழை என்றும் வணங்கு.


18. வணங்கிவிட்டு நல்லவர்போல் வாழ்த்திவிட்டு நெஞ்சில்

   இணக்கமின்றி மேலோட்ட மாகப் பழகும்

   மனமிருக்கும் நண்பரைக் காட்டிலும் நேரில்

   மனக்கசப்பைச் சொல்பவரே மேல்.


19. மேல்சாதி கீழ்ச்சாதி என்பதைத் தூக்கியெறி!

   வாழ்க்கையில் நன்னெறியைப் போற்றுபவர் மேல்சாதி!

   நாள்தோறும் தீயவழி செல்பவர்கள் கீழ்ச்சாதி!

   வாழ்விலே சாதிவெறி தீங்கு.


20. தீங்கு விளைவிக்கும் தீவிர வாதிகளே!

   தூண்டும் உணர்ச்சிக் கடிமையாகி வன்முறைக்

   கூண்டுக்குள் குற்றவாளி யாகநிற்கும் கோலமேன்?

   வேண்டாம் மிருகக் குணம்.

வாழ்வியல் அந்தாமி 11-15

 11 .பண்புகளைப் பின்பற்றி வாழ்வோரைப் போற்றுவார்!

   பண்பும் ஒழுக்கமும் இல்லாமல் இவ்வுலகில்

   கண்டபடி வாழ்வோரை தூசியாக எண்ணுவார்!

  பண்புகளே வாழ்க்கைக்குத் தூண்.


12. தூண்களில் மக்களாட்சித் தூண்களோ நான்காகும்!

   தூங்காமல் மக்களைக் காக்கின்ற நல்லரசு!

   வேண்டியவர் வேண்டாதோர் பாராத நீதிமன்றம்!

   மாண்புகளைக் காக்கின்ற மக்கள் உறுப்பினர்கள்1

   ஆண்மையுடன் அஞ்சாமல் தொண்டாற்றும் ஊடகங்கள்!

   நான்குதூண்கள் நாட்டுக்(கு) அரண்


13..அரண்கள் தனிமனித நல்லொழுக்கம் போற்றித்

  தரமுடன் தங்கள் கடமைகளைச் செய்தால்

  உலக அரங்கில் தலைநிமிரும் நாடு.

  தவறினால் என்றும் சரிவு.

14. சரிவுகள் வந்தால் தளர்வதும், ஏற்றக்

   களிப்பில் குதிப்பதும் இன்றி, இரண்டு

   நிலைகளையும் ஒன்றாய்ச் சமநிலையில் பார்க்கும்

   கலையினைக் கற்பது நன்று.


15.நன்றை மறப்பது நல்லதல்ல! அல்லதை

  அன்றே மறப்பது நன்றென்பேன்!-- புண்படுத்திப்

  பேசுவோரைப் பண்படுத்தும் பண்பை வளர்த்துக்கொள்!

  தேசமே போற்றும் நினைந்து.


வாழ்வியல் அந்தாதி 6-10


6.இங்கொன்றும் அங்கொன்றும் என்றே படித்துவிட்டுத்

 தன்னைப்போல் யாருமில்லை என்ற அகந்தையிலே

 தன்னடக்கம் கொண்டிருக்கும் சான்றோரைச் சீண்டினால்

 என்றும் அவமானந் தான்.

----------------------------------------------------------------------------------------------------------


7.தான்தான் எல்லாமே என்ற நிலையெடுக்கும்

 ஆணவப் போக்கை வளரவிட்டுத் துள்ளினால்

 ஈனமனப் பித்தனென்றே எள்ளிநகை யாடுவார்!

 மானே! தலைக்கனத்தைத் தூற்று.

----------------------------------------------------------------------------------------------------------------

8.தூற்றுவோர் சொல்லும் கருத்தில் பொருளிருந்தால்

 ஏற்றுக்கொள்! உன்னைத் திருத்திக்கொள்! இல்லையேல்

 தூற்றுவோரை அன்பால் வசப்படுத்தித் திருத்திவிடு!

 வேற்றுமையை ஒற்றுமையாய் மாற்று.

----------------------------------------------------------------------------------------------------------------------------------

9. மாற்றுவதை மாற்றினால்தான் முன்னேற்றம் ஏற்படும்!

 மாற்றத்தில் நேர்மறை மாற்றங்கள் நல்லது!

 மாற்றம் எதிர்மறை யாகிவிட்டால் ஏமாற்றம்

 ஊற்றெடுத்துச் சாடும் உணர்.


10. உணர்வு நிலையாகும்! பார்த்தவுடன் தோன்றும்

   உணர்ச்சியோ நீர்க்குமிழி போல மறையும்!

   உணர்ச்சிவசம் இன்றி உணர்வை வளர்ப்போம்!

   உணர்வுகளின் பின்னலே பண்பு.


வாழ்வியல் அந்தாதி 1-5

 1.அன்பில் களங்கமில்லை என்றால் அத்தகைய

 அன்போ எலும்பை உருக்கிவிடும் என்பதே

 உண்மையான அன்பிற்குத் தன்மையென்றார் ஞானிகள்! 

 அன்பின் வலிமையைப் பார்.

------------------------------------------------------------

2. பார்ப்பதும் கேட்பதும் மெய்யில்லை! கண்மணியே!

  தீர விசாரிப்பதே மெய்யாம்! எனச்சொன்னார்!

  பார்ப்பதைக் கேட்பதை வைத்து முடிவெடுத்தால்

  வேரூன்றும் உட்பகைதான் சொல்.

---------------------------------------------------------------------------------------------------------

3. சொல்வதைச் செய்வதும் செய்வதைச் சொல்வதும்

  நல்லவர்கள் பின்பற்றும் நல்லொழுக்கம்--- சொல்லொன்றும்

  செய்யும் செயலொன்றும் என்றேதான் வாழ்பவர்கள்

  பொல்லாதோர் பின்பற்றும் தீது.

------------------------------------------------------------------------------------------------------------------

4. தீதுக்குத் தூதுவிட்டு வாழாதே! தீயோரின்

 சூதுக்குத் தோள்கொடுத்துச் சுற்றாதே! வன்சொல்லைக்

 காது கொடுத்துக் கேட்காதே! வஞ்சகரைக் 

 காததூரம் தள்ளிவைத்தால் நன்று.

--------------------------------------------------------------------------------------------------------------------------

5.நன்றாய்ப் பழுத்த பழமரத்தை நாடித்தான்

 வண்ணப் பறவைகள் நாடிவரும்-- சிந்தனை

 ஊற்றெடுக்கும் ஞானம் செறிந்தவரைத் தேடிவந்து

 போற்றுவார் நன்மக்கள் இங்கு.

-----------------------------------------------------------------------------------------


கயமை -- 108


திருக்குறள் குழந்தைப் பாடல்

----------------------------------------------------------------

கயமை -- 108

---------------------------------------------------------------

கயமை என்பது கீழ்த்தரமான பண்பாகும்!

----------------------------------------------------------------

கயவர், நல்லவர் தோற்றத்தால்

ஒன்றாய் இருப்பது போலிங்கே

பிறஇனந் தன்னில் கண்டதில்லை!


நன்மை தீமை அறிந்தவரைக்

காட்டிலும் அவற்றைப் பற்றியெல்லாம்

கவலைப் படாத கயவர்மேல்!


கண்டதே காட்சி கோலமென்று

விருப்பப் படிதான் வாழ்வதாலே

கயவரும் தேவர் போலத்தான்!


இழிந்தோர் தங்களைக் காட்டிலும்

இழிந்தவரைக் கண்டால் தாங்கள்தான்

உயர்ந்தோர் என்றே மகிழ்ந்திடுவார்!


அச்சம் இருப்பதால் கீழ்மக்கள்

ஒழுக்கந் தன்னைப் பேணுகின்றார்!


விரும்பும் பொருள்கள் கிடைப்பதுதான்

ஒழுக்கத் திற்குக் காரணமாம்!


ரகசியந் தன்னைக் காக்காமல்

தேடிச் சொல்லும் கயவர்கள்

தமுக்குக் கருவிக் கொப்பாவார்!


தன்னைத் தாக்கும் கைகளுக்கும்

கயவர் உதவுவார் முன்வந்து!


மற்றவர்க் காக எச்சில்கை

உதறிக் கூட உதவமாட்டார்!


தேவையைக் கேட்டால் மனமுவந்து

உதவிகள் செய்வார் மேன்மக்கள்!


கரும்பைப் பிழிதல் போலத்தான்

பிழிந்தால் உதவுவார் கீழ்மக்கள்!


உடுத்தும் உண்டும் பிறர்வாழும்

நிலையைக் கண்டே பொறாமையில்

குற்றம் சொல்வார் கீழ்மக்கள்!


தமக்குத் துன்பம் வந்துவிட்டால்

தன்னையே விற்பார் கீழ்மக்கள்!


மதுரை பாபாராஜ்





இரவு அச்சம் -- 107

 திருக்குறள் குழந்தைப் பாடல்

--------------------------------------------------------

இரவு அச்சம் -- 107

----------------------------------------------------------

கேட்கும் நிலைக்கு பயப்படுதல்!

--------------------------------------------------------------

ஈந்து மகிழ்வோர் இல்லத்தை

நாடி நின்றே இரவாமல்

இருப்பதே உலகில் கோடிநன்மை!


பிச்சை எடுத்தே உயிர்வாழும்

சூழல் இங்கே வந்துவிட்டால்

உலகந் தன்னைப் படைத்தவனே

அலைந்து திரிந்து அழியட்டும்!


வறுமையைப் போக்க உழைக்காமல்

இரந்தே வாழ்வோம் எனநினைக்கும்

கொடுமை போல வேறில்லை!


வழியே இல்லை என்றாலும்

இரத்தலை ஏற்கா நற்குணமோ

உலகை விஞ்சும் பெருமைதான்!


சொந்த உழைப்பில் கூழெனினும்

சுவையில் நிகரோ வேறில்லை!


பசுவுக் காக நீர்கேட்கும்

நிலையும் இங்கே இரத்தல்தான்!

அதைப்போல் நாவுக் கிங்கேயோ

கேவலம் வேறு இல்லையம்மா!


இருப்பதை மறைக்கும் கருமியிடம்

பிச்சை எடுக்க வேண்டாமே!


இரத்தல் என்னும் மரக்கலமோ

மறைத்தல் என்னும் பாறைமேல்

மோதி நின்றால் நொறுங்கிவிடும்!


இரத்தல் கொடுமை உருகவைக்கும்!

மறைக்கும் கொடுமை பதறவைக்கும்!


இருப்பவர் மறைத்தால், கலக்கமுடன்

இரப்பவர் உயிரே போய்விடுமே!


இல்லை என்றே சொன்னவரின்

உயிர்தான் எங்கே ஒளிந்திடுமோ?


மதுரை பாபாராஜ்


இரவு -- 106

 திருக்குறள் குழந்தைப் பாடல்

----------------------------------------------------------------

     இரவு -- 106

----------------------------------------------------------------

பிறரிடம் கேட்டுப் பெறும் நிலை!

----------------------------------------------------------------

கொடுப்போ ரிடத்தில் கேட்கலாம்!

கேட்டு மறுத்தால் பழியவர்க்கே!


தருவோர் இனிமையாய்த் தந்துவிட்டால்

பிச்சை எடுப்பதும் இன்பந்தான்!


ஏழைக் குதவும் பெருந்தகையை

நாடி இரத்தலும் அழகாகும்!


கனவிலும் உள்ளதை மறைக்காமல்

உதவும் நல்லோ ரிடம்தேடி

கேட்பதும் ஈகை போலாகும்!


இல்லை என்று மறைக்காமல்

கொடுப்போர் உலகில் இருப்பதால்தான்

குறிப்பால் இரத்தல் தொடர்கிறது!


மறைக்கும் செயலைச் செய்யாதோர்

கண்டால் இரப்போர் துன்பமென்னும்

வறுமைத் துயரம் நீங்கிவிடும்!


இரப்பவ ரைத்தான் இகழாமல்

உதவும் மனிதரைக் கண்டுவிட்டால்

இரப்போர் உள்ளம் மகிழ்ந்திருக்கும்!


இரப்பவர் மட்டும் இல்லையென்றால்

மக்கள் நடத்தும் வாழ்க்கையோ

கயிற்றால் இயக்கும் மரப்பொம்மை

நடக்கும் காட்சி போலாகும்!

இரந்து வாழ்வோர் இல்லையெனில்

கொடுப்போர் புகழுக் கிடமேது?

இரப்போர் சினத்தைத் தவிர்க்கவேண்டும்!

வறுமையே சினத்தின் அறிகுறியாம்!


Thursday, March 26, 2026

நல்குரவு -- 105

 திருக்குறள் குழந்தைப் பாடல்

----------------------------------------------------------------

நல்குரவு -- 105

----------------------------------------------------------------

வறுமை தருகின்ற துன்பங்கள்

----------------------------------------------------------------

வறுமை போன்ற துன்பமெது?

வறுமை தவிர வேறில்லை!


வறுமைக் கொடுமை வந்துவிட்டால்

எந்தப் பிறவியும் துன்பந்தான்!


குடும்பப் பெருமை, புகழ்தன்னை

அழித்தே கெடுக்கும் இல்லாமை!


உயர்ந்த குடியில் பிறந்தவரும்

வறுமை வந்தால் கடுஞ்சொல்லைப்

பேச வைக்கும் சூழ்நிலைகள்!


வறுமைத் துன்பம் வந்துவிட்டால்

அடங்கும் அதற்குள் பிறதுன்பம்!


உயர்ந்த கருத்தைச் சொல்பவனோ

ஏழையாய் இருந்தால் செல்லாது!


அறநெறி மறந்து வறுமையிலே

துடிக்கும் ஒருவனை இவ்வுலகில்

பெற்ற தாயும் அயலான்போல்

கருதிப் பார்க்கும் நிலைவருமே!


நேற்று வதைத்தச் சுடுவறுமை

இன்றும் வந்தெனைக் கொன்றிடுமோ?


நெருப்புப் படுக்கையில் தூங்கிடலாம்!

வறுமையில் இல்லை கண்ணுறக்கம்!


உணவே இன்றி வாடுவோர்கள்

வாழ்வைத் துறக்க எண்ணாமல்

வாழ்வது உப்பு, கஞ்சிக்கு

கேடாய் மாறும் நிலையாகும்!


மதுரை பாபாராஜ்

நண்பருக்கு வாழ்த்து


 நண்பர் சேதுமாதவன் அனுப்பிய படத்திற்கு கவிதை!


இட்லி வடைகளுடன் நல்ல குளம்பியும்

அட்டகாச மாக அனுப்பினார் மாதவன்!

நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்