உணர்வதே மெய்!
மெய்யறிவு!
நம்பென்று சொல்வது ஆத்திகம்!
சொன்னதை
நம்பாமல் யார்சொன்ன போதும்
பகுத்தறிவால்
மெய்ப்பொருள் காண்பதே நாத்திகம்
என்றறிவோம்!
என்றும் உணர்வதே மெய்.
----மதுரை பாபாராஜ்
மெய்யறிவு!
நம்பென்று சொல்வது ஆத்திகம்!
சொன்னதை
நம்பாமல் யார்சொன்ன போதும்
பகுத்தறிவால்
மெய்ப்பொருள் காண்பதே நாத்திகம்
என்றறிவோம்!
என்றும் உணர்வதே மெய்.
----மதுரை பாபாராஜ்
வீண்!
ஆள்வதற்கு வாய்ப்பளித்தால்
ஆள்பிடிக்கும் காட்சியில்
நாள்போகும்! நேரமெல்லாம் வீணாக்கிப்
பார்க்கின்றார்!
மாற்றங்கள் வேண்டுமென்றார் ஏமாற்றம்
ஒன்றுதான்
மாற்றமோ? என்னமோ? சொல்.
மதுரை பாபாராஜ்
மணநாள் 03.06.2026
இணையர்
திரு S.P. கெஜராஜ்
திருமதி. G.மல்லிகா
கலைத்துறையில் ஆற்றலை
நாள்தோறும் காட்டி
மலைக்கவைக்கும் தம்பியோ நல்ல
நடிகர்!
வகைவகையாய் இங்கே குணச்சித்ர
வேடம்!
புகழ்பெற்று வாழ்கபல் லாண்டு.
நல்ல குடும்பமே பல்கலைக் கூடமென்ற
நல்லோரின் ஆசிகளுடன் நாள்தோறும்
வாழியவே!
அன்புடன் பண்பு மிளிரும் இணையரோ
வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்
நாடும் காடும்!
என்னநேரும் ஏதுநேரும் எப்பநேரும்
என்றேதான்
ஒன்றும் புரியாமல் நாட்டிலே
வாழ்வதைப்போல்
தங்களுக்கு எப்பகை எப்படித்
தாக்குமென்றே
ஒன்றும் புரியாமல் வாழ்கிறது
பார்க்கின்றோம்!
என்றென்றும் காட்டில் விலங்கு.
மதுரை பாபாராஜ்
தங்கை திருமதி. ராஜபாக்யம்
தெய்வத்திரு.ஜோதிகுமார்
மணவாழ்க்கை 51!
மணநாள் 29.05.75--29.05.2026
மதுரையில் தஞ்சையில் சென்னைபெங்க ளூரில்
விதவிதமாய் வாழ்கின்ற இல்லறம் ஏற்றே
நிறைவாக ஐம்பத்து ஒன்றினைக் காணும்
முறையான பொன்னாளாம்! பாவாவை எண்ணிக்
கடமைகளை என்தங்கை பாங்குடனே செய்து
தடம்பதித்து வாழ்வதை வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்.
Prabakar Padma family
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் ...மாமா மற்றும் அத்தைக்கு,
🙏🙏