தென் கி கவிதை ஆர்வம்
[06/03, 13:45] Vovkaniankrishnan:
கிவாஜவின் பாடலாம் பாட்டு படித்தும்
தவிக்கிறேன் இன்னும் கவிக்கு.
[06/03, 13:54] Vovkaniankrishnan:
உரைநடை யில்சிறப் பானதென் கிக்கு
வரவில்லை யேநற் கவி.
[06/03, 16:18] Madurai Babaraj:
சொன்னது யாரோ? கவிதை படைக்கின்ற
நம்பிக்கை உண்டே உணர்.
பாபா
[06/03, 16:40] Vovkaniankrishnan:
கவிதை எழுதலாம் எல்லோரும் உள்ளம்
கவிதையால் நிற்பின் நிறைந்து.
[06/03, 16:40] Madurai Babaraj:
குறள்வெண்பா நாளும் படைக்கின்ற
நீங்கள்
சிறப்பாய்க் கவிஞர்தான்! சொல்.
பாபா










































