1127இன்பத்துப்பால்
[12/02, 15:38] Vovkaniankrishnan:
கம்பூன்றி தெருவைக் கடக்கும் பாட்டி!
கம்பைத்தான் ஊன்றி நடந்தே தெருவைத்தான்
நம்பிக்கை கொண்டே கடப்பதைக் கண்டேன்நான்!
அம்மம்மா! தள்ளாடும் இந்த வயதிலே
என்ன துணிச்சலோ? சொல்.
மதுரை பாபாராஜ்
ChatGPT
An old granny crossing the street, leaning on a stick
Leaning on her staff, she crossed the road,
Trust alone her steady foothold showed.
Oh, grandma! At this wavering age so frail,
What courage is this—tell me, tell!
— Madurai Babaraj
பம்பரமாய் சுழன்று அம்பாக பாய்ந்து வெம்பாமல் தெம்பாய் பெரிய கொம்பாய் குடும்பத்தை நடத்தியது அன்று அருந்திய கம்பங்கூழ்... உடம்பை பாழாக்காமல் வைத்தாலும், பதுமை மாறிய முதுமை இன்று கம்பை துணை தேடியதோ...
Col Krishnamoorthy
யாரிங்கே சரிசெய்வார்?
தேர்போல வாழ்க்கையோ ஊர்ந்து நகர்ந்திருந்தால்
ஓர்நாள் நிலைசேரக் கூடுமிங்கே வாழ்க்கையோ
பாரிலே முன்னேற்றம் சற்றுமே இல்லையே!
கோலத்தை யார்சரிசெய் வாரிங்கே எப்போதோ?
காலமெல்லாம் இந்தநிலை ஏன்?
மதுரை பாபாராஜ்
ChatGPT
Who Will Set This Right?
If life crawls forward like a chariot slow,
Perhaps one day it may find its resting place.
Yet here on earth, not even a hint of progress shows—
Who will ever straighten this crooked design? When?
Why must this state endure through all of time?
குறள்களில் ஆழங்கால் பட்டவர்க்கும் நாளும்
குறள்களை ஆர்வமுடன் கற்பவர்க்கும் உள்ள
சிறப்பான வேறுபாட்டைப் பேச்சால் எழுத்தால்
அறியலாம் வாழ்விலே நாம்.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Depth and Curiosity!!
Those who have plunged deep into the Kurals
and those who study them daily with eager hearts—
the subtle difference between the two
is revealed in speech and script,
and ultimately,
in the way they live.
அருமை ஐயா
அற்புத விளக்கம்
குறளின் நுணுக்கமான பகுதிகளை கற்றாரின் ஊடே
கற்பது அறிவுக்கு விருந்து
நன்றி ஐயா
திரு செல்வராஜ்
கேளம்பாக்கம்
எங்கள் முழங்கால் வரைதான் குறளின் கடலில் பட்டுள்ளது... ஆனால் பாபாராஜ் அவர்கள் ஆழமாக நீந்தி முத்துக்களை கொத்தாக எடுத்து தருகிறார்... இவருக்கு *குறள்ராஜ்* என்று புனைப்பெயரில் அழைத்தாலும் தகுமே...
Col Krishna moorthy
Brundhavan A6
விழுந்து கிடந்த அணிலும் காகங்களும்!
பார்த்தவர் KK
ஆடித் திரிந்த அணிலொன்று வீழ்ந்தேதான்
வாடிப் படுத்திருக்க காகங்கள் சுற்றிநின்று
வாடிய அந்த அணிலைத்தான் கொத்திகொத்தி
தூக்கித்தான் சென்றதோ? தங்கள் இரையாக!
பார்த்துவிட்டு நண்பர் கிருஷ்ண குமாருடனே
பாபா விடம்சொன்னார் இன்று.
மதுரை பாபாராஜ்
பதினாறும் பெற்று வாழ்க!
புது மனைப் புகுவிழா!
08.02.26
குறள்நெறி போற்றிக் குடும்பத்தார் சூழ
சிறப்புடன் வாழ்கபல் லாண்டு.
கல்வி,அறிவுடன் ஆயுளும்,
ஆற்றல்,
துள்ளும் இளமை,துணிவு,
பெருமை
நல்வளப் பொன்னும் பொருளும் ,
நற்புகழும்
பல்வள மண்நிலம் நல்லொழுக்கம், நோயின்மை
வெல்லும் முயற்சியுடன் வெற்றி எனவாழ்வில்
சொல்லும் பதினாறு செல்வங்கள் பெற்றேதான்
இவ்வுலகில் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்
ChatGPT
Praised by the Kural’s path,
Encircled by family’s love,
May you live long in splendor!
With learning and wisdom,
With strength and vitality,
With youthful spirit and fearless courage,
With honor that shines.
With golden wealth and noble fame,
With fertile lands and righteous ways,
With freedom from illness,
And tireless striving that wins success—
May you possess these sixteen treasures,
And with them,
Flourish for countless years in this world!
பண்பாளர் பழனிவேல் அவர்களுக்கு வாழ்த்து!
குறுநகை ஏந்தும் முகமும் அகத்தில்
சுறுசுறுப் போடு எளிமை அமைதி
கடமை உணர்வும் அதிகாலை நேரம்
தொடங்கி இரவு வரைக்கும் களைப்பில்
சுணங்காமல் வாழ்கின்ற பண்பாளர் நண்பர்!
பழனி குடும்பத்தார் வாழிய நீடு!
வளர்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
சிக்கலை உண்டாக்காதே!
சிக்கல்கள் தானாக வந்துசேரும் வாழ்க்கையில்
சிக்கலை உண்டாக்கிச் சிக்கலுக்குள் சிக்குகின்ற
குற்றத்தைச் செய்வாரை என்னென்று கூறுவது?
சிக்கல் தவிர்ப்பதே நன்று.
மதுரை பாபாராஜ்
இனிக்குமா வாழ்வு?
ஒருவருக்கோ இன்பம்! ஒருவருக்கோ துன்பம்!
இருநிலை கொண்டிருக்கும் வாழ்விலே நாளும்
அரும்பு மலர்வதே இப்படி என்றால்
கரும்பாய் இனிக்குமா வாழ்வு?
மதுரை பாபாராஜ்
சுமைதாங்கி!
நேர்மறையாய்ச் சிந்தித்தேன் நேர்மையாய் வாழ்கின்றேன்
ஆர்வமுடன் வீட்டுக் கடமைகள் செய்கின்றேன்!
வாழ்வில் சுமைதாங்கிக் கல்லாய்ச் சுமக்கின்றேன்!
பாரத்தைத் தாங்குகின்றேன்? நான்.
மதுரை பாபாராஜ்
இணையர்:
மருமகன் C. ரவி
மகள் சுபாதேவி
இல்லற முத்து:
பேரன் R S சுசாந்த் ஸ்ரீராம்
நாள்:07.02.26
திருமண மாகியே இல்லறத்தில் இன்று
இருபத்தா றாண்டுகள் வாழும் இணையர்!
மனைமாட்சி காத்து குடும்பத்தார் சூழ
இணக்கமாய் வாழ்க! வளமுடன் வாழ்க!
தமிழ்போல வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்