Monday, April 20, 2026
ஆத்திகம்- நாத்திகம்
ஆத்திகம் -- நாத்திகம்!
ஆத்திகம் உன்னையோ நம்பென்று
சொல்லியே
நாளும் அடிமையாய் என்றுமே
மாற்றிவிடும் !
நாத்திகம் சிந்தித்து மூடநம்பிக்
கைதன்னை
மாற்ற வழிவகுக்கும் இங்கு.
மதுரை பாபாராஜ்
Saturday, April 18, 2026
Friday, April 17, 2026
Thursday, April 16, 2026
Wednesday, April 15, 2026
சிக்கல்
சிக்கல்!
வெளியிலே சொல்ல முடியாத சிக்கல்
தவிக்கவைத்து வேடிக்கைப் பார்த்திருக்க
வாழ்க்கை
துவைத்துப் பிழிந்தெடுத்துச் சக்கையாய்
நாளும்
மலைக்கவைக்கும் சூழலைப் பார்.
மதுரை பாபாராஜ்
ChatGPT
A trouble I cannot voice to the world outside,
Life stands watching—tormenting me in quiet pride;
Wrung and worn like cloth, drained day by day,
Behold the crushing weight of the world I face.
Monday, April 13, 2026
திருமதி சரசுவதி மூர்த்தி
[13/04, 11:19] Muthuveeran Rajkumar:
Our close friend Prabakar’s mother, Mrs. Saraswathi Moorthy, is a wise and well‑educated 91‑year‑old. She is writing a summary of her observations about the book. I will share it soon. Thanks
[13/04, 13:29] Madurai Babaraj:
திருமதி சரசுவதி மூர்த்தி அவர்களுக்கு வாழ்த்து:
தொண்ணூற்றி யோர்வயதில்
புத்தகத்தை வாசித்துத்
தன்கருத்தை நச்சென் றெழுதித்தான்
ஆசிகளை
வண்டமிழில் தந்த தகைமைக்கு
நன்றியுடன்
என்வணக்கம் கூறுகின் றேன்.
அமெரிக்க நாடிருந்து ராஜ்குமார் நூலாம்
தமிழ்க்கவிதைப் பூக்கள் மணப்பதை
இங்கே
அமுதமாய்த் தந்த சரசுவதி மூர்த்தி
தமிழ்போல வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
ராஜ்குமார் மாமா
Sunday, April 12, 2026
தளபதி கிருஷ்ணமூர்த்தி
தளபதி கிருஷ்ணமூர்த்தி வருவார்
உடற்பயிற்சி செய்வார்!
உடற்பயிற்சி செய்யும் தளபதி மூர்த்தி
கடந்தசில நாளாய் வெளிநாடு சென்றார்!
உடற்பயிற்சி செய்யும் இடமோ வெறுமைத்
தடம்பதித்து காணப் படுகிறதே இன்று!
பொறுப்பாய்! தளபதி மூர்த்தி வருவார்!
உடற்பயிற்சி செய்வார் விரைந்து.
மதுரை பாபாராஜ்
ChatGPT
The Commander Will Return!
The valiant commander, Krishnamoorthy,
Who trained with strength and steady will,
Has journeyed far to foreign lands—
And now the grounds lie silent, still.
Where once his footsteps marked the earth,
Now empty paths alone remain;
Yet wait with trust and sense of duty—
He shall return, and train again.
Mr Col Krishnamoorthy
*பெயருக்கு முன்னால் தளபதி என்ற பெரிய நிதி சேர்த்து இந்த மூர்த்தியின் கீர்த்தியை உயர்த்தியுள்ளீர்...*
*உடற்பயிற்சிக்கு இங்கு தளர்ச்சியும் அயர்ச்சியும் சிறிதும் இல்லாது உடலை உற்சாகப்படுத்த கூடம்* *பிரம்மாண்டம்....*
*எண்ணிக்கை குறைவிலும் உடற்பயிற்சிக்கு அங்கு கிடைக்கும் திருப்தி... இங்கு கூட்டத்தின் நடுவே* *தனிமையே...ஆகவே அந்த அளவுகோலில் இது பாதியே...*
*அங்கு மைதானத்தின் உடற்பயிற்சிக்கு உதவும் 'குட்டி சுவற்றின் மேல்' என்னுடைய பெரிய நினைவுகளை விட்டு* *வந்திருக்கிறேன்...எனினும் அந்த வெறுமை நீங்க சிறிது நாட்கள் அவசியம் பொறுமை...அங்கு தொடர்வதே* *எனக்கு பெருமை.*
*நல்ல நலம் விரும்பி நலம் விசாரித்ததில் எங்கள் நலம் என்றும் இருக்கும் நலம்.*
*அண்ணியாரை மிகவும் விசாரித்ததாக சொல்லவும்...*
வள்ளுவர் என்னத்த சொன்னாரு?
[12/04, 20:54] Madurai Babaraj:
வள்ளுவர் என்னத்த சொன்னாரு?
சொல்லாததே இல்லங்க!
அன்பைப் பத்தி
ஆக்கத்தைப் பத்தி
இன்சொல் பத்தி
ஈகையப் பத்தி
உழவைப் பத்தி
ஊக்கத்தைப் பத்தி
எளிமையப் பத்தி
ஏற்றத்தைப் பத்தி
ஐம்புலன் பத்தி
ஒழுக்கத்தப் பத்தி
ஓங்குபுகழ் பத்தி
ஔவைத் தமிழ்ல
எஃகு போல சொல்லி இருக்காரு!
அடேயப்பா இவ்வளவா?
இதுமட்டுமில்ல!
அவரு சொல்லாததே இல்லங்க!
மதுரை பாபாராஜ்
ChatGPT
What did Valluvar leave unsaid?
Nothing—he spoke it all!
Of love that binds the human heart,
Of wealth and ways to shape its art,
Of gentle words that soothe and heal,
Of giving hands with noble zeal.
Of farming toil that feeds the land,
Of courage firm that helps us stand,
Of simple living, pure and clear,
Of rising high through righteous cheer.
Of mastering the senses five,
Of moral paths that keep us alive,
Of growing fame through virtuous deed—
In chaste Tamil, like tempered steel indeed!
Oh, is that all?—not quite, you see,
For nothing escaped his poetry!
[12/04, 21:35] Vovemayavaramban:
உயிரை வழிநடத்த
உள்ளுவோம் வள்ளுவம்!
அ முதல் ஃ வரை
அய்யன் சொல்லாததில்லை!
மதுரை மாகவி
மாண்புடன் கவிதையாய்
உயிரெழுத்தில் சொல்லிவிட்டார்!
வாழ்த்துவோம் அய்யாவை
வணங்கியே!
நகைச்சுவை
நகைச்சுவை!
நகைச்சுவையை என்றும்
நகைச்சுவையாய் எண்ணு!
பகைச்சுவையாய் எண்ணும் எதிர்மறை
எண்ணம்
அகத்திலே தோன்றினால் உள்ளம்
இறுகும்!
நகைச்சுவையாய் எண்ணுதல் நன்று.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Humour!
Take humour always as humour—light and kind;
Turn it to hatred, and a darkened mind
Will harden the heart from deep within;
To laugh with grace—that’s where joys begin.
நல்லவரால் மழை
நல்லவரால் மழை!
எல்லோரும் நல்லவர்கள் இல்லைதான்! இவ்வுலகில்
எல்லோரும் கெட்டவர்கள் இல்லைதான்! கெட்டவரும்
நல்லவரும் யார்யார்தான்? உள்ளத்துப் பண்புகள்
நல்லவையாய்க் கொண்டவரே நல்லவராம் பாரிலே!
நல்லவரால் மட்டும் மழை.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Rain Falls by the Good
Not all are virtuous in this wide world—
yet not all are wicked either.
Who, then, are truly good or bad?
They alone are good, whose hearts
hold gentle, noble qualities within.
And so it seems—
it is by the goodness of such souls
that even the rain descends upon the earth.
நல்லவரால் பெய்யும் மழை!
அல்லாதவரையும் வாழ்விக்கும்! எனில்
நல்லவராய் வாழ்வதற்கு யாரிங்கே முயல்வார்?
ஈசா, யோசி!-- சுபசு நாதன்.
VovsubramanianThane:
எல்லோரும் நல்லவரே என்று விரும்புவோம்...
நீடித்த இவ்வுலகத்தில் தன்னலம் கருதாத நல்லவர் ஒருவர் இருப்பாராயின் அவரது நற்குணத்திற்காகப் பெய்யும் மழை, உலகத்தில் உள்ளோர் அனைவருக்கும் பெய்து நன்மை பயக்கும்.
கண்ணகி விரும்பியது போல் மழை பொறுப்பாக நடந்து கொள்ளும்...
மழை டிரம்ப் போல் நடக்காது
அவரும் நல்லவராக உந்தப் படுவார்
"நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை" - அவ்வையார்
🌧️











