Friday, May 30, 2025

தடைகளைச் சந்தித்து வாழ்வோம்


 

ஊடகத்தொண்டு



 

Thursday, May 29, 2025

கரும்புள்ளி

 கரும்புள்ளி!

மணநாள் 50 ஆண்டு நிறைவு!

29.05.1975-29.05.2025

வெண்ணிற ஆடை அணிந்திருந்த போதிலும்

கண்களில் இங்கே முதலில் படுவதோ

வெண்ணிற ஆடையில் உள்ள கரும்புள்ளி

மட்டுந்தான்! அந்தக் கரும்புள்ளி யைப்போல

சொந்தமகன் ஆகிவிட்டான்! எங்களுடன் இல்லாமல்

சொந்தமகன் ஊருக்குச் சென்றுவிட்டான்! சுற்றத்தார்

உள்ளனர் வாழ்த்தினர் இங்கு.

மதுரை பாபாராஜ்


பாலுவுக்குப் பணிநிறைவு வாழ்த்து


 மருமகன் மு. பாலமுரளிக்குப் பணிநிறைவு வாழ்த்து!

நாள்: 30.05.2025

Life Insurance Corporation of India!

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்!

முப்பத்தைந் தாண்டு படிப்படி யாகத்தான்

தன்முனைப் பாற்றலில் முன்னேற்றங் கண்டேதான்

இன்று பணிநிறைவு காணும் மருமகன்

அன்பான பால முரளியை வாழ்த்துகிறேன்!

நன்னெறி வாழ்கின்றார் வாழ்த்து.


பெற்றோரின் ஆசிகள் இல்லத் 

தரசியுடன்

முத்தான பொன்மகள்கள் மற்றும் மருமகன்

சுற்றத்தார் சூழ சிறப்புடன் வாழியவே!

நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

ஐம்பது 50

 Vovemayavaramban: 

*வாழ்விணையர் மதுரகவி பாபாராஜ் - வசந்தா பொன்விழா ஆண்டு மணநாள் வாழ்த்து!*

இல்லறத்தின் மாண்பை

ஏற்றமுடன் போற்றி

இல்லறத்தை நல்லறமாய்

நடாத்தி வரும்

வாழ்விணையர் கவிஞர்

பாபாராஜ் - வசந்தாம்மா

வாழ்க்கையில் இணைந்த

பொன்னாளின் பொன்விழாஆண்டு!

இல்லற வாழ்வில்

இன்னலும் கன்னலும்

இயல்பென எண்ணி

இன்னலில் துவளாமல்

இன்பத்தில் திளைக்காமல்

எளிமையை மேற்கொண்டு

இல்லறத்தின் இலக்கணத்தை

இல்வாழ்வில் கடைபிடித்து

நல்லறத்தின் நாயகனாய்

நாயகியாய் வடிவமைத்து

நல்வழிக் காட்டிடும்

நற்றமிழ் இணையரே!

சீரிளமைத் தமிழாக

சிறப்புடன் வாழ்கவென்று

பெருமைமிகு பாபாவை

அம்மா வசந்தாவை

இதயத்தால் வாழ்த்துகிறேன்!

இன்புற்று என்றும்வாழ்க!

வாழிய வாழியவே!

வாழிய பல்லாண்டு!

கோ.இமயவரம்பன்

29.05.2025

[29/05, 21:54] Madurai Babaraj: கவிதை வாழ்த்து கவிஞர் இமயம்

புவிபோற்ற தந்துவிட்டார் வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

Rajaramperiakanna: 


💐💐Happy 50th Wedding Anniversary

God bless you with good health and long life🙏🙏

 Rajaram &Hema👆


Jeyasaraswathi Sethu


Dear Anna ,Vadhinai  Hearty congratulations. Wish you a very happy  golden wedding  anniversary. May God bless you with good health and happiness to  celebrate many more happy  anniversaries. 🙏🙏💐💐👍👍👌👌👏👏😊


Dr Sethu

உலக தம்பதியர் தினத்தன்று,

மணநாள் ஆண்டு நிறை

பொன்விழா காணும்

உன்னத தம்பதியற்கு

மனம் நிறை நல்வாழ்த்துகள். 

மணவாழ்வின் இனிய நினைவுகள்

இதயத்தை நிறைக்கட்டும் .

இனிவரும் நாட்களில்

அனைத்து நலத்தையும்,

ஆதிபகவன் அருளட்டும்.


Krishnamoorthy Ramanujan


பாலைப் போல தூய்மை தன்னை

வளர்த்து கொள்கிறார்

அவர் பழத்தை போல இனிமை தன்னை

பகிர்ந்து கொள்கிறார்

பாலைப் போல தூய்மை தன்னை

வளர்த்து கொள்கிறார்

அவர் பழத்தை போல இனிமை தன்னை

பகிர்ந்து கொள்கிறார்


குன்று போல எரிவதென்ன குத்துவிளக்கு

குன்று போல எரிவதென்ன குத்துவிளக்கு

அது கோலம் போட்டு காட்டுவது குடும்ப விளக்கு

குடும்ப விளக்கு



பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு

தம்பதிகள் வாழியவே இல்லறம் கண்டு


 Vovramanujan: 

ஐயா, வணக்கம்!

     அருமை!

     வாழ்வியல் பாடங்கள் அனைத்திலும் தாங்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்று மகிழ்ந்தவர் என்பதைப் புரிந்து கொண்டேன். மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா.

      தங்கள் இருவருக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துகள்! நீவிர் இருவரும் இணைந்து பல்லாண்டு வாழ்கநல் வளத்துடன்!


Vovramanujan: 


பின்னால் அந்நாள் படமும், முன்னால் இந்நாள் படமும் எழிலூட்டுகின்றன.


Krishnamoorthy Ramanujan


பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு தம்பதியர் வாழியவே. இல்லறம் கண்டு.


உங்கள் திருமணநாள் உலக தம்பதியர் தினத்தன்று அமைந்தது மிகச் சிறப்பு.


Stalin Ramakrishnan:


இணையர் இருவரும்,  என்றென்றும் அன்பு பொங்கி நலமும், வளமும் பெற்று  வாழ்க என்று அன்புடன் வாழ்த்தி ,உங்களின் ஆசியை வேண்டுகிறேன். 

🙏


Vovkaniankrishnan:

தம்பதியர் இன்பமாய் என்றும் பிரியாது


 நிம்மதியாய் வாழ்கபல் லாண்டு.


 தென்.கி


மனம் ஒத்த இணையர்,

மணம் கமழ இணைவர்!

இறை ஒத்த இல்லறம்!

என்றும் வாழும் நல்லறம்!


S saminathan


Sridhar:

மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா...


KANDADAMY:

இனிய மணநாள் வாழ்த்துக்கள்


VOVCR:

இல்லறக் கடமைகளை  "மடுத்த வாயெல்லாம் பகடு போல" செய்து கொண்டிருக்கிறீர்கள் பாபா 

அன்பும் அறனும் நிறைந்த , 

மேடு பள்ளங்கள் நிறைந்த இல்வாழ்க்கை... ஒருவகையில் எல்லோருக்கும் அப்படித்தான்...

பயணம், இனிதே தொடரட்டும்.. மீண்டும் ஒருமுறை எங்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் பாபா ஐயா- வசந்தா அம்மா

[29/05, 23:25] Kalanavaneethan:

 💐💐Happy 50th Wedding Anniversary Anna and vadhinai. 

Wish you both happiness, good health in the years ahead.

[30/05, 00:27] DrMallikagovindababu:

 Happy 50th Wedding Anniversary dear Anna & Vathinai💐💐💐💐

Wishing you both long happy healthy years 🎂🍧🍬🎁🌹

தங்கைக்கு வாழ்த்து


 தங்கை ராஜி ஜோதிகுமார் குடும்பத்தாருக்கு வாழ்த்து!

நாள் 29.05.1975 --29.05.2025

கேக்குடன் பூங்கொத்தும் எங்கள் படத்திற்கு

ஏற்றாற்போல்  மின்விளக்கு மின்னொளி தந்தேதான்

ஊற்றெடுக்கும் பொன்விழா வாழ்த்துகளை அன்புடனே

தங்கைக் குடும்பத்தார் காட்டிவிட்டார் வாழ்த்துகிறோம்!

நன்றி நவில்கின்றோம் இன்று.


பாவா வுடனிங்கே வாழ்ந்தநாளை எண்ணித்தான் 

வாழ்கின்றார் என்தங்கை! பொன்விழா கண்டுவிட்டார்!

பாங்குடனே பிள்ளைகள் தங்கள் குடும்பத்தை

தாங்குகின்றார் ஆற்றலுடன்! வாழ்த்து.


மதுரை பாபாராஜ்


Wednesday, May 28, 2025

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


நீங்கள் மகிழ்ச்சியின் தூண்டுகோல் ஆயிரம்
பேர்களுக்கு! உங்கள் செயல்களால் அந்நிலையை
நாளும் இழக்கவைக்க வேண்டாம்! மகிழ்ச்சியைத்
தூண்டுங்கள் உங்களைச் சுற்றித்தான்! எல்லோரும்
போற்றுவார் உங்களைத் தான்.

மதுரை பாபாராஜ்

Tuesday, May 27, 2025

அறநெறி காப்போம்


 

சந்திப்பும் பிரிவும் இயல்பு


 

சென்றதற்காக ஏங்கவேண்டும்


 

நாமாக வாழ்வோம்


 

Monday, May 26, 2025

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!

நம்பிக்கை என்றுமே முக்கிய மானது!
நல்ல உறவுகள் மற்றுப் மகிழ்ச்சியைக்
கட்டமைப்ப தற்குத் தளமாகும்! நேர்மறை
எண்ணமுடன் வாழ்வை அணுக சரியாக
நம்மை வழிநடத்தும் இங்கு.

மதுரை பாபாராஜ்

நண்பர் BSNL இராமசாமி


 நண்பர் BSNL. இராமசாமி அனுப்பிய படத்திற்குக் கவிதை!


மகிழ்ச்சியான திங்கட் கிழமையாய் மாற

அகங்குளிர வாழ்த்தும் இராமசாமி வாழ்க!

அகநக நட்புடன் வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

Sunday, May 25, 2025

வேலிக்குள் வாழப் பழகு


 

மூடநம்பிக்கை



 

மருமகள் சத்யபாமா


 என்றும் நினைவிலே போற்றுவோம்!

பள்ளிப் பருவம் நினைத்தால் இனிமைதான்!

எங்கெங்கோ வாழ்ந்தாலும் எப்படியோ வாழ்ந்தாலும்

அன்று புளியங் குடியில் படித்தகாலம்

இன்று நினைவில் நிழலாட பார்த்திருந்தோம்!

என்றும் நினவிலே போற்று.


மதுரை பாபாராஜ்


Saturday, May 24, 2025

நண்பர் பாலு B1


 நண்பர் பாலு(B1) அனுப்பிய படத்திற்குக் கவிதை!


வாழை இலையிலே சாதமும் அப்பளமும்

நால்வகைக் காய்கறிகள் சாம்பார் ரசத்துடன் 

மோரும் பருப்புடன் நம்மைக் கவர்ந்திழுக்கும் 

நான்குசில்வர் கிண்ணத்தில் வாழைப் பழத்துடன் 

பாக்குடன் வெற்றிலையும் வைத்திருந்தார்! ஆகாகா!

அட்டகாசம் போங்கள் உணவு.


மதுரை பாபாராஜ்

Friday, May 23, 2025

நண்பர் பழனிவேல் அவர்கள்


 நண்பர் 

திரு பழனிவேல் அவர்கள் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


ஈருருளி, கூடையும் கூடைக்குள் பூங்கொத்தும்

ஆர்வமுடன் நண்பர் பழனி வணக்கத்தை

ஏந்திவந்த பண்பினை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

நண்பர் BSNL இராமசாமி


 நண்பர் BSNL இராமசாமி அனுப்பிய படத்திற்குக் கவிதை:


செடியிலே பூத்த மலரோ சிரிக்க

அழகாய் வரைந்தேதான் ஓவியத்தைத் தீட்டிப்

பதுமையாக்கித் தந்தவரை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

மகன் எழில் அனுப்பியது


 மகன் எழில் அனுப்பிய படங்கள்:

மேலே முதல்வரிசை நடுவில் உள்ளவர் வசந்தாவின் தமக்கை சரோஜா அவர்கள்.

இரண்டாவது வரிசை வசந்தா மடியில் பேரன்.நிக்கில் அபிசேக்

குறள்வழி வாழ்பவள்!

மனைவி வசந்தா!

இல்வாழ்க்கை ஏற்றதும் வாழ்க்கைத் துணைநலம்

நல்லபடி யாயமைந்தே இல்லற மாண்புடன்

மக்களைத் தந்தாளே அன்புடைமை கொண்டேதான்!

பண்பாய் விருந்தோம்பல் செய்தே உறவுகளைத்

தக்கவைத்தாள்! வாழ்த்துகிறார் இன்று.

மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


உங்கள் அணுகுமுறை வைத்தே வழிமுறையும்
திக்கும் அமைக்கப் படுகிறது! உங்களது
உள்ள அணுகுமுறை நேர்மறை யாயிருந்தால்
உங்கள்  திசைகளும் நேர்மறை யாயிருக்கும்!
முன்னேற்றம் காணலாம் இங்கு.

மதுரை பாபாராஜ்

Thursday, May 22, 2025

வாழ்க்கைத் துணைநலம்

 வாழ்க்கைத் துணைநலம்!

வாழ்க்கைப் பிடிக்கவில்லை! வாழ முடியவில்லை!

வாழவேண்டும் என்பதற்கு காகத்தான் வாழ்கிறேன் !

வாழ்க்கைத் துணைநலம் பேணுகின்ற காரணத்தால்

வாழ்கிறேன் ஆனமட்டும்! இங்கு.


மதுரை பாபாராஜ்


பொதுநலத்தைப் போற்று


 

குடைசாயும் வண்டி


 பாபாவை நினைக்கிறபோது பெருமிதமாயுள்ளது அவரது எளிமைக்கும் எளிமையான பாட்டுத்திறன் கண்டு.

தென்.கி

சுமை


 

பொறுமைக்கு எல்லையுண்டு


 

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


ஒவ்வோர் செயலுக்கும் நேர வரையறை
உண்டு! செயல்பாடு எல்லாம் நிகழ்வாகும்!
என்றுமே நேரத்தில் நாமோ நிறைவேற்றி
அந்தச் செயலைச் சிறப்பாய் நினைவிலே
தங்குமாறு செய்தலோ உங்கள் கரங்களில்
உள்ளது! என்றுணர்தல் நன்று.

மதுரை பாபாராஜ்

Wednesday, May 21, 2025

பாசம் கீழ்நோக்கித்தான் போகும்

 பாசம் கீழ்நோக்கித்தான் போகும்!


அம்மாவும் அப்பாவும் தங்களது வாழ்நாளைக்

கண்ணுங் கருத்துமாய்ப் பிள்ளை வளர்ப்பிலே

அன்றாடம் காட்டுவார்! பெற்றோர் முதியவராய்

இங்கேதான் ஆனாலும் மாறமாட்டார்! பிள்ளைகள்

தங்கள் சிறகை விரித்தே பறந்திருப்பார்!

பெற்றோரைப் பிள்ளைகள் இப்படிப் பார்ப்பாரா?

எப்போதும் பாசமோ கீழ்நோக்கித் தான்போகும்!

இப்படித்தான் வாழையடி வாழையாய் வாழ்கிறோம்

நற்றமிழே!  வாழ்க்கையில் நாம்.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


நம்முடைய நேர்மறைச் சிந்தனைகள் வாழ்க்கையில்
நம்முடைய நண்பர்க ளாவர்! அவைகளோ
உங்களை நாளும் அமைதியாய் வாழவும்
உங்கள் உளைச்சல் களைப்பைக் குறைக்கவும்
என்றும் உதவும்! நலங்காக்கும்! நேர்மறைச்
சிந்தனையைப் பின்பற்றி என்றும் மகிழ்ச்சியாக
இங்குவாழ்தல் நன்று! உணர்.

மதுரை பாபாராஜ்

அருமை முதல்வர் ஸ்டாலின்

 அருமை முதல்வர் ஸ்டாலின்!


நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை

நிலத்திலே யார்க்கும் அஞ்சா நெறிகள்

உளத்திலேந்தச் சொன்னவர் பாரதி! கண்முன்

களமாடும் ஸ்டாலின் அருமை முதல்வர்!

உளங்கனிந்து வாழ்கவென்று வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

900 3260 981

நினைப்பதும் நடப்பதும்


 

Tuesday, May 20, 2025

விழுவோம் எழுவோம்


 

Monday, May 19, 2025

ஈனமனம்


 

இவரா அப்படி?

 இவரா அப்படி?

மழையும் புயலும் புரட்டியே போட்ட

நிலைபோல சண்டை முதல்நாள் மறுநாள்

தலைகீழாய் மாறி அமைதியாவார் வந்து!

இவர்தானா அப்படிச் சண்டைகள் போட்டார்?

எனக்கேட்போம் பார்த்து வியந்து.

மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


யாரோதான் வந்து மகிழ்ச்சியை உண்டாக்கி
காணவைப்பார் என்றேதான் காத்திருக்க வேண்டாமே!
நீங்கள்தான் அந்த மகிழ்ச்சியின் ஆதாரம்!
நீங்கள் அனைத்து இடத்திலும்  அம்மகிழ்ச்சி
பாங்காய்ப் பரப்புங்கள் சென்று.

மதுரை பாபாராஜ்

Sunday, May 18, 2025

நண்பர் சோம வீரப்பன்


 Somaveerappan:

நேற்று 18/5/25 *கீழடி* சென்றோம்...

பெயர்த்தி அக்ஷராவிற்கும் பெயரன் குமரனுக்கும்

தமிழ் நாகரி கத்தின் தொன்மையைக் காட்டியதில் பெரு மகிழ்ச்சி...

மாப்பிள்ளை ஶ்ரீதருக்கும், மகள் ஶ்ரீவித்யாவிற்கும் நன்றி!

*தமிழன் என்று சொல்வோம் !*

*தலை நிமிர்ந்து நிற்போம் !!*


சோம வீரப்பன்

மதுரை பாபாராஜ்:

குறளினிது சோமவீ ரப்பன் மனதில்
நிறைவுடன் பேரக் குழந்தைகள் சூழ
சிறப்புகள் சொல்லும் கீழடி சென்றார்!
அறக்குறள் வேந்தரை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

மு.சரவணப்பெருமாள்-- ஜெயசித்ரா மணநாள் வாழ்த்து!


 இணையர் மணநாள் வாழ்த்து!

மு.சரவணப் பெருமாள்

ச.ஜெயசித்ரா


மணநாள்: 19.05.25

ஆண்டுகள்: 28/29


இல்லற வாழ்வில் இருபத்து எட்டுதனை

நல்லறப் பாதையில் நன்கு நிறைவுசெய்து

பல்வளம் காண இருபத்து ஒன்பதில்

இன்று அடியெடுத்து வைக்கும் இணையரோ

வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


குறள்நெறி போற்றிக் குடும்பத்தார் சூழ

சிறப்புடன் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

எல்லாம் கனவு


 அயர்ந்து தூங்கும் நேரத்தை விட்டு பிற நேரமெல்லாம் கவிதையே சிந்தையில்.உங்களின் உயிர் முதலில் வாழ்க்கைத் துணையிடம் பின்னர் கவிதையிடம்.

தென் கி

Saturday, May 17, 2025

தட்டுத் தடுமாறும்


 *நீங்கள் ஒரு பல்கலைக்கழகம்.*

தென். கி

கலைமாமணி ஏர்வாடியார்



 கலைமாமணி ஏர்வாடியார் அவர்களின் 

78 ஆம் பிறந்தநாள் விழா வாழ்த்து!

நாள்: 18.05.2025

இலக்கிய ஏரால் கவிதை உறவை

உழவுசெய்த ராதா கிருஷ்ணனை வாழ்த்து!

வளர்தமிழ்போல் வாழ்க வளர்ந்து.


வங்கிப் பணிசெய்த போதும் மொழிபெயர்ப்பு

வங்கிப் பணிச்சொற்க ளுக்கேதான் செய்திட்ட

தன்னிக ரற்ற  கலைமா மணிவாழ்க! 

பண்பாளர் வாழ்க வளர்ந்து.


குறள்நெறி போற்றிக் குடும்பத்தார் சூழ

சிறப்புடன் வாழ்க! நலமுடன் வாழ்க!

நிறைவுடன் வாழ்க! வளமுடன் வாழ்க!

அகங்குளிர வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

Thursday, May 15, 2025

நண்பர் பழனிவேல.


 நண்பர்பழனிவேல் அவர்களுக்கு வணக்கமும் வாழ்த்தும்!

வெள்ளிக் கிழமை மகிழ்ச்சி நிறையட்டும்!

துள்ளித்தான் ஆடும் முயலிரண்டும் கூறுகின்ற

நல்ல படத்தாலே நண்பர் பழனியிங்கே

சொல்கின்றார் நற்றமிழே! வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

Wednesday, May 14, 2025

பேரன்.R S சுசாந்த் சிரிராம்


 பேரன் 

R.S.சுசாந்த் சிரிராம் வாழ்க! வளர்ந்து!

14.05.25

தமிழ்நாட்டுக் காரர் துபாய்க்கார ரானார்!

படிப்பைத் தொடரப் பறந்தேதான் சென்றார்!

படிப்பை நிறைவேற்றி வாழ்வில் அமையும்

பணிக்களத்தில் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

வசந்தா அவ்வா

உறவின் காலம் மாறியதே

 உறவின் காலம் மாறியதே!


எளிதாய் நினைத்ததை யெல்லாமே  பேசிப்

பழகிய காலங்கள் போனதே! இன்று

தயங்கித் தயங்கியே அச்சமுடன் பார்த்தே

அளவளாவும் கோலமே இங்கு.


மதுரை பாபாராஜ்

சார்ந்துள்ளோம்


 

Tuesday, May 13, 2025

மனைவியின் உடல்நிலை

மனைவி வசந்தாவின் உடல்நிலை!

நாள்:13.05.25

PHYSIO

மனைவி வலியால் முகஞ்சுழிக்கும் போது

மனது பிசைகிறது! கைகள் துடிக்க

உடல்பயிற்சி நேரம் மனம்நோகப் பார்க்கும்

கடமையில் வாழ்கிறேன் நான்.


அந்த அழகான புன்னகையை மீண்டும்நான்

என்றுகாண்பேன்? எப்படிக் காண்பேனோ? என்னசொல்ல?

பண்பட்ட பேச்செங்கே? பாடும் குரலெங்கே?

கண்ணெதிரே வாடுகின்றா ளே!


நடந்து வருவாளா? கேலிசெய்து பார்த்துக்

கடந்தேதான் போவாளா? அய்யோ! கவலைப்

படுவதுதான் வாழ்வா? பகர்.


மதுரை பாபாராஜ்


மனைவி வசந்தா

 மனைவி வசந்தாவின் உடல்நிலை!

நாள்:13.05.25

PHYSIO

மனைவி வலியால் முகஞ்சுழிக்கும் போது

மனது பிசைகிறது! கைகள் துடிக்க

உடல்பயிற்சி நேரம் மனம்நோகப் பார்க்கும்

கடமையில் வாழ்கிறேன் நான்.


அந்த அழகான புன்னகையை மீண்டும்நான்

என்றுகாண்பேன்? எப்படிக் காண்பேனோ? என்னசொல்ல?

பண்பட்ட பேச்செங்கே? பாடும் குரலெங்கே?

கண்ணெதிரே வாடுகின்றா ளே!


நடந்து வருவாளா? கேலிசெய்து பார்த்துக்

கடந்தேதான் போவாளா? அய்யோ! கவலைப்

படுவதுதான் வாழ்வா? பகர்.


மதுரை பாபாராஜ்


Monday, May 12, 2025

கோமாளி ஏமாளி


 

நண்பர. திருமலை அவர்களுக்கு வாழ்த்து!


 நண்பர் நமது மண்வாசனை திருமலை அவர்களுக்கு வாழ்த்து!


வாழ்நாளின் சாதனை நூல்கள் அறுபது!

ஆர்வமும் ஆற்றலும் இல்லாமல் இத்தகைய

சாதனை சாத்திய மாகாது நண்பரே!

நூறு படைப்பதற்கு வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

Sunday, May 11, 2025

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


முதலீடு செய்தாலும் வீணாக்கி னாலும்
கடந்துவிடும் காலம்! அதுஉந்தன் கையில்!
அறிவார்ந்த நற்செயலைத் தேர்ந்தெடுக்க வேண்டும்!
உதவாத ஒன்றை நிராகரித்தல் நன்று!
கடந்துவிடும் காலம்! உணர்

மதுரை பாபாராஜ்

அன்னையர் நாள் வாழ்த்துகள்

பெற்றோரை வணங்குகிறேன்!

அன்னையர் நாள் வாழ்த்துகள்!

நாள் 11.05.25

இடுப்பில் சுமந்திருந்தாய்! நோயால் துவண்டேன்!

இருதோளில் மாற்றிச் சுமந்தாய்! படிக்க

உடன்வந்தாய்! நாளும் படிப்படி யாக

வளர்வதைக் கண்டாய்! கடமைகள் தம்மை

அயர்வின்றி வாழ்வில் நிறைவேற்றிச் சென்றாய்!

மலைத்தேன்நான் அம்மா உனது தியாகம்

நினைத்தேனே நன்றியுடன் இன்று.


மதுரை பாபாராஜ்


நேர்மறைப் பண்பே வாழ்வு!

 நேர்மறைப் பண்பே வாழ்வு!

நேர்மறைப் பண்புகள் இல்லாமல் நாள்தோறும்

ஆயிரம் கோயில் குளமென்று சுற்றினாலும்

வாழ்விலே நிம்மதி காண்ப தரிதாகும்!

நேர்மறைப் பண்புதான் வாழ்வு.

மதுரை பாபாராஜ்

சாவே வா!

 சாவே வா!


சாவே சாவே வாராயோ!

விரைந்து விரைந்து வாராயோ!

மனதில் உளைச்சல் நீங்கிவிடும்

நாளும் வேதனை இருக்காது!


எங்கே எப்போதும் வருவாயோ!

எனக்கு கொஞ்சம் சொல்லிவிடு!மதுரை

கண்ணீர்த் துளிகள் சிந்தாது!

விரக்தி எண்ணம் தோன்றாது!


அங்கே வந்து காத்திருப்பேன்!

கைகள் நீட்டி அணைத்திருப்பேன்!

நன்றிப் பாதான் தந்திடுவேன்!

நிம்மதி யாகத் துயில்கொள்வேன்!


மதுரை பாபாராஜ்


உள்ளே வெளியே


 

Saturday, May 10, 2025

நண்பர் BSNL இராமசாமி



 நண்பர் BSNL இராமசாமி அனுப்பியதற்குக் கவிதை!


ஓடிப் பிடிக்க முயல்கின்ற பூனையும்

தேடித்தான் ஓடவைத்துப் பார்க்கும் எலியாரும்

ஈடற்ற ஒற்றுமையில் உட்கார்ந்தே பார்த்திருக்கும்

ஞாயிறு புன்னகையைப் பார்.


மதுரை பாபாராஜ்

நண்பர் BSNL இராமசாமி



 நண்பர் BSNL இராமசாமி அனுப்பியதற்குக் கவிதை!


யானையைப் போல பெரியசிக்கல் வந்தாலும்

தேன்மழலை போல சிரித்தேதான் சந்தித்தால்

வாழ்க்கை எளிதாகும் நம்பு.


மதுரை பாபாராஜ்

Friday, May 09, 2025

கவிதைப் பயணம்


 கவிதைப் பயணம் அல்ல

தங்களுக்குள்தான் கவிதையே பயணிக்கிறது.

தென்.கி.

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


உங்கள் உடலுக்கும் மற்றும் மனதிற்கும்
இங்கே அமைதிவேண்டும்! சாக்குபோக்கு சொல்லாமல்
எப்போதும் நீங்கள் தருதல் கடமையாம்!
நற்றமிழே! ஆக்கத்தைத் தந்தே மகிழ்ச்சியை
நன்கு பரப்பும் உணர்.

மதுரை பாபாராஜ்