Tuesday, December 31, 2024

வீடு தேடிச் சென்றால்

 இன்று வீடுதேடிச் சென்றால்!


முன்பெல்லாம் வீடுதேடிச் சென்றால் குழந்தைகள்

வந்தே வரவேற்பார் உட்கார்ந்து பேசுவார்!

இன்றுசென்றால் தூக்கம் இணைய விளையாட்டு

என்றேதான் பேசாமல் தானுண்டு தன்வேலை

உண்டென்றே வாழ்கின்றா ரே?

மதுரை பாபாராஜ்

நன்றி மறவாதே

 கடந்தகாலத்தை மறவாதே!

வாழ்க்கையில் காட்சிகள் மாறிமாறி முன்னேற்றப்

பாதையில் செல்கின்ற நேரம் கடந்துவந்த

பாதையை என்றும் மறக்காமல் வாழவேண்டும்!

வாழ்க்கையில் நன்றி மறவாமல்

வாழ்வதே

வாழ்வாகும்! நிம்மதிக்குத் தூது.

மதுரை பாபாராஜ்

எனக்கு மட்டும் ஏனிப்படி?

 எனக்குமட்டும் ஏன் இப்படி?

அடுத்தது என்னவோ  என்றே நடுங்கிப்

பதறுகிறேன் நாளும்! மனதில் உளைச்சல்

உதறலைத் தந்தே கலங்கவைக்கும் வாழ்வில்

பதரானேன் தூசியானேன் நான்.

மதுரை பாபாராஜ்

மனைவி வசந்தா பாணி


 வசந்தா பாணி!

நாற்காலி மீதமர்ந்து கைபேசி கையிலே

லாவகமாய்த் தான்பிடித்தே பேசுகின்ற பாணியில்

ஆவல் முகத்திலே நட்போ அகத்திலே

வேரோடும் என்வசந்தா பார்.

மதுரை பாபாராஜ்

விஜயா பிரிண்டர்ஸ் 78


 விஜயா பிரிண்டர்ஸ் 78!

மனிதத்தேனீ ரா.சொக்கலிங்கம்

அவர்களுக்கு வாழ்த்து!


நேர்மை கடமை உழைப்புடன் நாணயம்

வேர்களாக ஊன்ற விஜயா பிரிண்டர்சார்

ஊர்மெச்ச அச்சுத் தொழிலை நடத்துகின்றார்!

பார்போற்ற வாழ்க வளர்ந்து

பண்பாளர் சொக்கலிங்கம் காட்டும் அணுகுமுறை

எந்நாளும் வாடிக்கை யாளர் திருப்தியுடன்

வந்துபோகும் நல்லுறவே அச்சகத்தின் முன்னேற்றம்!

புன்னகை பூக்கும் தொழிலாளர் 

அன்புடன்

வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

எழுபத்து எட்டாவ தாண்டில் விஜயா

பிரிண்டர்ஸ் அடியெடுத்து வைக்கின்ற பொன்னாள்!

வளர்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

என்றும் நன்றியுடன்

மதுரை பாபாராஜ்


புத்தாண்டுக் கோலம்


 

Sunday, December 29, 2024

பெற்றோர் கடமை

 பெற்றோர் கடமை!


காதல் புரிந்து மனத்தாலே ஒன்றியோர்

வாழ்வில் கடிமணம் செய்தேதான் இல்லறத்தை

ஏற்று மகிழ்வாராம் பிள்ளைகள் பெற்றெடுப்பார்!

மோதல் கருத்துகள் வேற்றுமை என்றேதான்

வேதனை வாழ்வாக விட்டுப் பிரிவாராம்!

வாழ்க்கையா? இல்லை விளையாட்டா? சொல்வாரா?

வாழவந்த பிள்ளைகள் என்ன பலியாடா?

வாழ்க்கையில் பிள்ளைகளைப் பேணிப் பராமரித்தல்

பாரிலே பெற்றோர் கடன்.


மதுரை பாபாராஜ்

நதிகள்

 [29/12, 22:19] Madurai Babaraj: நதிகளை இணைத்தால்!

நதிகளை நாட்டில் இணைத்தால் பருவ

நிலைமாற்றம் ஏற்படும், காட்டு விலங்கோ

அலைபாய்ந்தே நாட்டுக்குள் வந்துவிடும் என்ற

கருத்தொன்று இங்கேதான் உண்டு.


மதுரை பாபாராஜ்

[29/12, 22:19] Madurai Babaraj: இது சரியா அஷ்ரப்

[29/12, 23:47] DrAshraffwhatsapp: நதிகளை இணைப்பதால் விளைவுகள் பல உண்டு. ஆனால் அது இப்படி அல்ல

[30/12, 07:11] Madurai Babaraj: நன்றி அஷ்ரப்

[30/12, 07:28] Madurai Babaraj: நண்பர் அஷ்ரப் அவர்களுக்கு வாழ்த்து!


ஆட்களுக் கேற்றவாறு தன்கருத்தைச் சொல்லாமல்

ஊற்றெடுக்கும் உள்ளக் கருத்தினை  சொல்கின்ற

ஏற்றமிகு நண்பராம் அஷ்ரப்பை வாழ்த்துகிறேன்!

போற்றி வணங்குகிறேன் நான்.

மதுரை பாபாராஜ்

Saturday, December 28, 2024

ஏன்?

 ஏன்?

எனக்கென்று யாருமில்லை! என்னவென்று சொல்ல?

மனதில் உளைச்சலின் கூத்தாட்டம் வேறு!

எனது நிலைமையோ யாருக்கும் வேண்டாம்!

எனக்கென்று யாருமில்லை யே!

மதுரை பாபாராஜ்

Friday, December 27, 2024

மனமாற்றம் வேண்டும்


 

நண்பர் IG சந்திரசேகர் ,CR

 VOVCR:

அன்பு நிறை வணக்கம்

இன்று விருதுநகர் வருகிறேன்
இன்றும் நாளையும் அங்கே..

காலை 0800 மணிக்கு விருதுநகர்

சி இராஜேந்திரன்

Vovchandrasekar:
வள்ளுவம் தழைக்க, விருதுநகருக்கு வருக..

💐💐💐

மதுரை பாபாராஜ்:
ஆட்சியர் ஜெயசீலன் அவர்களுக்கு வாழ்த்து!

விருது நகருக்கு வாங்க! வருக!
திருக்குறள் இன்பம் பருக வருக!
அருமை ஜெயசீலன் ஆட்சியர் உள்ளார்!
திருக்குறள் பூமணக்கும் செப்பு.

மதுரை பாபாராஜ்

முள்வேலி


 

Thursday, December 26, 2024

வலைத்தமிழ் பார்த்தசாரதி


குறள்நெறி போற்றும் வலைத்தமிழ் அன்பர்
உலக மொழிகள் மொழிபெயர்ப்பைச் சாற்றும்
குறள்களின் நூல்கள் பின்னணியில் நின்றே
சிறப்பினைப் பெற்றுவிட்டார் வாழ்த்து.

மதுரை பாபாராஜ்


 

Wednesday, December 25, 2024

யாருமில்லை!

 யாருமில்லை!

எனக்கென்று யாருமில்லை! உண்மையாய் உள்ள

நிலைதன்னைக் கண்டறிந்து சொல்ல எவரும்

துணைவர வில்லை! தனிமை நெருப்பில்

இணைந்தே கருகுகின்றேன் நான்.

மதுரை பாபாராஜ்

சூழல் சுனாமி


 

மாறுமா?

 மாறுமா?

தனியாய் அலைகின்றேன்! எந்தன் நிழலோ

நினைத்தாலும் என்னையோ நாளும் தொடரும்

நிலையின்றி அந்தோ! படுக்கையில் சாய்ந்தாள்!

நிலைமாற வேண்டுமே! என்று?

மதுரை பாபாராஜ்

நண்பர் சிரிதர்

 [25/12, 21:13] VOVSridharMangalore:

 I remember Rumi's words...

Before you speak, let your words pass through three gates: Is it true ? Is it necessary ? Is it kind ?

[25/12, 22:01] Madurai Babaraj: 

 நண்பர் சிரிதர் அனுப்பியதற்புக் கவிதை:

ரூமியின் அறவுரை!

யோசித்துப் பேசுங்கள்! நல்லது!கேளுங்கள்!

பேசுகின்ற செய்திகள் உண்மையா தேவையா?

மாசற்ற அன்புடைய சொற்களா என்றேதான்

கேள்வியைச் சிந்தித்துப் பேசுங்கள் நல்லது!

ரூமி அறவுரை கேள்.

மதுரை பாபாராஜ்

குற்றமென்ன செய்தார்?

 குற்றமென்ன செய்தார்?


பெற்றோர் சினந்தே ஒருவர்க் கொருவரிங்கே

எப்போதும் சச்சரவில் வாழ்ந்தால்

குழந்தைகள்

பெற்றோர் முகம்பார்த்து வாழ இயலுமா?

குற்றமென்ன செய்தாரோ கூறு.?


மதுரை பாபாராஜ்

Tuesday, December 24, 2024

சிறகொடிந்த பறவை


 

ஆத்திகம்- நாத்திகம்


 

இறந்தாரின் நிறைவுகளை வாழ்த்து


 

Monday, December 23, 2024

பக்குவப்படு


 

நிற்க அதற்குத் தக!


 

கண்டபடி வாழாதே


 

யாரும் பகையில்லை


 

Sunday, December 22, 2024

மன அமைதி

மன அமைதி!
PEACE OF MIND!

அழகும் ஒளியும்
Beauty and light
தன்னகம் கொண்டாலும்
Though it is within
விண்மீனின் பெருமை 
Pride of Stars is there
வானில் இருந்தாலே
If they are in the sky!
செம்மையும் மனமும் 
Refinement and.mind
கொண்டது என் சிகப்பு ரோஜா
Have my Red rose
அதன்பெருமை 
Its pride is
மங்கையின் கூந்தலிலே
In the Damsel plait
வண்டுகள் புவியில் 
Bees in the world
சுற்றி வலம்வந்தாலும்
Though they fly around
தேன்சிந்தும் மலரிலேதான்
It is in the nectar oriented flower!
மகிழ்ச்சி
Happiness!
நிலவு மங்கை நீங்கா
Moon like Damsel
ஒளிசிந்தினாலும்
Spills the light
தன் சுற்றத்துடன் 
If they are with their kith and kin
வானுலகில்தான் மகிழ்வு
In the sky only they are happy!
அடைந்து புன்னகையை 
They spread the smile
இதழ்க்கடையில் விரிக்கிறது
In their lips
எத்தனை செல்வங்கள்
How many Riches
 உலகின் எந்த
In this world happens
மூலையில் சிதறிக் 
To scatter in the corners
கிடந்தாலும் மங்கை
The Damsel
என் மனஅமைதி 
My peace of mind
தலைவனின் மலரடியில்தான்
Is under the flower like feet of my HUSBAND!

வசந்தா பாபாராஜ்


இன்றைய தலைமுறை


 

Saturday, December 21, 2024

Shed the Anger


 

Friday, December 20, 2024

அகநக நட்பது என்று


 

Wednesday, December 18, 2024

வருணுடைய பூனை


 நாற்காலியில் வருணுடைய பூனை!


வருணுடைய பூனை அழகாய் அமர்ந்தே

வளைவாக நாற்காலி தன்னிலே பார்க்க

கலையார்வம் கொண்டே படம்பிடித்தேன் நானும்!

மலைப்புடன் பார்ப்பதைப் பார்.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


அர்த்தமுடன் மற்றும் அனுபவிக்க இல்லாத
இவ்வுலக வாழ்க்கையில் என்ன பயனிருக்கு?
இங்கே மகிழ்ச்சியாக மற்றும்நல் அர்த்தமுடன்
இவ்வுலகில் வாழ்வதற்கு ஆயிரம் ஆயிரம்
நல்வழிகள் உண்டென் றுணர்.

மதுரை பாபாராஜ்

Tuesday, December 17, 2024

பயிலரங்கம் வாழ்த்து



 பயிலரங்கம் வாழ்த்து!


திருக்குறளும் கல்விநெறிச் சிந்தனையும் என்ற
இரண்டுநாள் கற்கும் பயிலரங்கம்! நல்ல
உரையாளர் பேசுகின்றார் செந்தமிழில்! வாழ்க!
வளர்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

கவலைகள் தொடர்ந்தால்


 

Monday, December 16, 2024

மதுரையில்


மதுரையில் எங்கள் குடும்பம்!


முத்துசுப்பு தேவகி இணையருக்கு

பிள்ளைகளாய்

அக்காலம்  ஐந்தில் சிறுமியாய்க் கல்யாணி 

இத்தரணி விட்டே மறைந்தாளாம்!

நான்காக

பிள்ளைகள் வாழ்ந்தோம் வளர்ந்து.


மதுரைமில் பென்னர் நிறுவனத்தில் வேலை!

நடுத்தரமான வாழ்க்கை! எளிமையாய் வாழ்ந்தோம்!

படித்தோம் வளர்ந்தோம் படிப்படி யாக!

விரிந்தது ஆல்போல் படர்ந்து.


இலக்குமி பாபாராஜ் ராஜபாக்யம்

மற்றும்

கடைக்குட்டி யாக கஜராஜாய் நால்வர்

நடைபோட்டுப்  பக்குவ மாக வளர்ந்தோம்!

கடமைகள் செய்துவிட்டார் பெற்றோர் உவந்து.

பருவத்தில் இல்லறமே சான்று.



அந்தந்தக் காலம் விளையாட்டு என்றேதான்

சென்றன! கூடித்தான் பேசிக் கலந்தாலும்

ஒன்றாக வாழ்ந்தோம்! தனியறைகள் இல்லையன்று!

அங்கங்கே உட்கார்ந்து பேசிப் படித்திருந்தோம்!

ஒன்றாய் மகிழ்ந்திருந்த வாழ்வு.


தந்தையும் தாயும் உலகைவிட்டுச் சென்றனர்!

எங்கள் சிறகுகள் எங்களது வாழ்க்கையென்று

இன்று பயணங்கள் வெவ்வேறு திக்குகளில்!

பண்பட்டும் புண்பட்டும் வாழ்கிறோம் இன்றிங்கே!

அன்றாடம் எண்ணுவதே வாழ்வு.


மதுரை பாபாராஜ்


நானறிந்தது சகாயமாதா தெரு. இரு வீடு ஒரு வீடாய் அமைந்து, தேடி வருவோருக்கெல்லாம் அன்னமிட்டு மகிழ்ந்த வீடு. ஞாயிறு வந்தாலே கொண்டாட்டம் தான். நட்பு வட்டாரம் பெரிதாகக் கொண்ட அம்மான்களைப் பார்த்து தான் இன்று வரை எம்மைச் சுற்றிலும் நண்பர் கூட்டம். தேடி வரும் பிரச்சனைகளை அமைதியாக எதிர்கொண்டு வெற்றி பெறும் மனப்பாங்கு - பெரிய மாமா. தேனீ போல் சுறுசுறுப்பாய் இன்று வரை உலகம் சுற்றும் வாலிபனாய் வலம் வரும் - இளைய மாமா. வழிகாட்டிகளாய் .... உயர்கின்றோம் நாங்களும் அடியொற்றி ...

மகிழ்வு தரும் நினைவுகளே என்றென்றும். வருமோ அக்காலம் மீண்டும். சென்றிருந்தேன் அங்கேதான் (சகாய மாதா தெரு) சென்ற வாரம். நின்றிருந்தேன் சிறு நேரம் அங்கே தான். மாறவில்லை வாழ்ந்திருந்த வீட்டின் அடையாளம். அசை போட்டேன் அந்த இல்லத்தின் நினைவுகளை ...

அன்பான சுற்றம்தான் அவிழ்த்து விட்ட நெல்லி மூட்டையாய் சிதறி நிற்கிறது ஏற்றுக்கொண்ட பணிகளின் (பணத் தேவைகளின்) நிமித்தமாய். சந்திப்பதே அரிதாகிறது இக்காலத்தில். இணைப்பது இந்த செல்லிடப்பேசி தான். என்னே காலத்தின் கோலம்.


சரவணன் திண்டுக்கல்

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


மனதின் சமநிலை முக்கியம்! அந்த
மனநிலையே நாள்தோறும் ஒவ்வொன்றுக் கும்தான்
திறவுகோல்! மேலும் வளர்ச்சிக் குதவும்!
நமது மனதிலே தோன்றும் நினைவு
வழிநடத்தல் மற்றும் உணர்வதே இந்த
மனநிலையில் தோன்றும் உணர்.

மதுரை பாபாராஜ்

Sunday, December 15, 2024

கல்வி


 

நண்பர் பழனிவேல்



நண்பர் பழனிவேல் (C2)அனுப்பிய படத்திற்குக் கவிதை!


வாரத் தொடக்கம் சிறப்பாக இந்தவாரம்

வாழ்வதற்கு வாழ்த்துகின்ற உங்களது நட்பினை

வாழ்த்தி வணங்குகிறேன் இன்று.


மதுரை பாபாராஜ்

உட்பகையின் தூது


 இப்படி எப்படி எழுத முடிகிறது கவிதை.அப்படி என்ன செப்படி வித்தை தங்களிடமுள்ளது.எப்படிப் பார்த்தாலும் தங்கள் கவிதை எப்போதும் மிகவும் உருப்படி...தென்.கி.

வசந்தா பாபாராஜ்


 

Saturday, December 14, 2024

முள்மேல் சேலை!

 முள்மேல் விழுந்த சேலை!

முள்மேல் விழுந்துவிட்ட  பட்டிழைச் சேலையை

மெள்ள எடுக்கவேண்டும்! முள்குத்தக் கூடாது!

எள்ளளவும் சேலை கிழியவும் கூடாது!

இல்லறச் சிக்கலைத் தீர்ப்பதும் இப்படித்தான்!

எப்படியும் தீர்ந்துவிடும் நம்பு.

மதுரை பாபாராஜ்

நீதான் தீர்க்கவேண்டும்!

 நீதான்தீர்க்கவேண்டும்!

எத்தகைய சிக்கல்கள் வாழ்விலே வந்தாலும்

அத்தனைச் சிக்கலையும் சந்தித்தே வாழவேண்டும்!

எப்படிப் பட்ட முடிச்சு விழுந்தாலும்

எப்படியோ நீதான் அவிழ்க்கவேண்டும்! யாரிங்கே

உன்கூட நிற்பார்? உரை.


மதுரை பாபாராஜ்

R S சுசாந்த் ஸ்ரீராம் பிறந்தநாள்


 

நண்பர் முரளி


 நண்பர் முரளிஅனுப்பிய படத்திற்கு வாழ்த்து!


குடுவைக் குளம்பியைக் கோப்பைகள் தன்னில்

நறுமணம் ஊற்றெடுக்க கொஞ்சமாய் ஊற்றிப்

பருகும் வசதியைப் பாராய்! வணக்கம்

அருமைப் படமாகத் தூதுவிட்ட நட்பை

அருந்தமிழால் வாழ்த்துகிறேன் இன்று.


மதுரை பாபாராஜ்

திருக்குறள் தூயர் ஆசி


 

CR FAREWELL


 5 YEARS BACK

Friday, December 13, 2024

நண்பர் அன்வர் பாட்சா



 மடைதிறந்த வெள்ளம்போல் பேச்சு! படிப்பின்

நடைமுறை சொன்ன அறம்.

மதுரை பாபாராஜ்

சோதனையின் கொம்பொடித்துச் சாதித்த அன்வரை
சாதனை நாயகரை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

தங்களின் மேலான அன்பு நான் பெற்ற பெரும் பேறு... எல்லாப் புகழும் இறைவனுக்கே உரியது...!!🙏🙏❤️🤝 நன்றி வெண் "பா" பெருமானே...!!

அன்வர் பாட்சா

நண்பர் மொகலீஸ்வரன்



 நண்பர் மொகலீஸ்வரன் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


குடைக் குறள்!

மழைப்பருவம் வந்தால் குடைதான்   உதவும்!
மழைத்துளி வீழும் தெறித்து.

மதுரை பாபாராஜ்

சதுரங்க ஆட்ட சாம்பியன் குகேஷ் அவர்களுக்கு வாழ்த்து



 சதுரங்க ஆட்ட உலக சாம்பியன் குகேஷை வாழ்த்துகிறோம்!


சதுரங்க ஆட்டத்தில் சாதித்த வீரர்!

குகேஷின் உலக அளவிலே வெற்றி

மகத்தான வெற்றியை வாழ்த்துகிறோம் சூழ்ந்து!

தமிழ்நாட்டைச் சார்ந்தவர்! இந்திய நாடே

நமிர்ந்தேதான்  நிற்கவைத்தார் வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

சிலர் பலராவது என்று?


 

Thursday, December 12, 2024

வேதனை

 வேதனை!

பட்டதும் போதும்! படுவதும் போதுமே!

எப்படிப் பார்த்தாலும் ஏனிந்த வாழ்க்கையோ!

என்றேதான் நெஞ்சம் பதறித் துடிக்கிறது!

புண்பட்டேன் வேதனையில் நொந்து.


மதுரை பாபாராஜ்

முன்னுரிமை மாற்றம்


 

Wednesday, December 11, 2024

என்செய்வேன்? பேசாமல்!


 

திருக்குறள் தூயர்


 மிக நீண்ட காலமாக திருக்குறள் ஒன்றையே உயிர் மூச்சாகக்கொண்டு
ஆய்வு செய்துவரும் மோகனராசு அவர்கள் திருக்குறளுக்கும் இராசுதான்..தென்.கி.

குறள்நெறிக் குரிசில் சி.ஆர்.


 

தும்பைவிட்டு வால்பிடிக்க வேண்டாம்.


 

நண்பர் எழில்புத்தன்


 

Tuesday, December 10, 2024

பாரதீயை வணங்குவோம்


 

இந்தியாவில் இப்படி ஏன்