வீடு தேடிச் சென்றால்
இன்று வீடுதேடிச் சென்றால்!
முன்பெல்லாம் வீடுதேடிச் சென்றால் குழந்தைகள்
வந்தே வரவேற்பார் உட்கார்ந்து பேசுவார்!
இன்றுசென்றால் தூக்கம் இணைய விளையாட்டு
என்றேதான் பேசாமல் தானுண்டு தன்வேலை
உண்டென்றே வாழ்கின்றா ரே?
மதுரை பாபாராஜ்
இன்று வீடுதேடிச் சென்றால்!
முன்பெல்லாம் வீடுதேடிச் சென்றால் குழந்தைகள்
வந்தே வரவேற்பார் உட்கார்ந்து பேசுவார்!
இன்றுசென்றால் தூக்கம் இணைய விளையாட்டு
என்றேதான் பேசாமல் தானுண்டு தன்வேலை
உண்டென்றே வாழ்கின்றா ரே?
மதுரை பாபாராஜ்
கடந்தகாலத்தை மறவாதே!
வாழ்க்கையில் காட்சிகள் மாறிமாறி முன்னேற்றப்
பாதையில் செல்கின்ற நேரம் கடந்துவந்த
பாதையை என்றும் மறக்காமல் வாழவேண்டும்!
வாழ்க்கையில் நன்றி மறவாமல்
வாழ்வதே
வாழ்வாகும்! நிம்மதிக்குத் தூது.
மதுரை பாபாராஜ்
எனக்குமட்டும் ஏன் இப்படி?
அடுத்தது என்னவோ என்றே நடுங்கிப்
பதறுகிறேன் நாளும்! மனதில் உளைச்சல்
உதறலைத் தந்தே கலங்கவைக்கும் வாழ்வில்
பதரானேன் தூசியானேன் நான்.
மதுரை பாபாராஜ்
மனிதத்தேனீ ரா.சொக்கலிங்கம்
அவர்களுக்கு வாழ்த்து!
நேர்மை கடமை உழைப்புடன் நாணயம்
வேர்களாக ஊன்ற விஜயா பிரிண்டர்சார்
ஊர்மெச்ச அச்சுத் தொழிலை நடத்துகின்றார்!
பார்போற்ற வாழ்க வளர்ந்து
பண்பாளர் சொக்கலிங்கம் காட்டும் அணுகுமுறை
எந்நாளும் வாடிக்கை யாளர் திருப்தியுடன்
வந்துபோகும் நல்லுறவே அச்சகத்தின் முன்னேற்றம்!
புன்னகை பூக்கும் தொழிலாளர்
அன்புடன்
வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
எழுபத்து எட்டாவ தாண்டில் விஜயா
பிரிண்டர்ஸ் அடியெடுத்து வைக்கின்ற பொன்னாள்!
வளர்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
என்றும் நன்றியுடன்
மதுரை பாபாராஜ்
பெற்றோர் கடமை!
காதல் புரிந்து மனத்தாலே ஒன்றியோர்
வாழ்வில் கடிமணம் செய்தேதான் இல்லறத்தை
ஏற்று மகிழ்வாராம் பிள்ளைகள் பெற்றெடுப்பார்!
மோதல் கருத்துகள் வேற்றுமை என்றேதான்
வேதனை வாழ்வாக விட்டுப் பிரிவாராம்!
வாழ்க்கையா? இல்லை விளையாட்டா? சொல்வாரா?
வாழவந்த பிள்ளைகள் என்ன பலியாடா?
வாழ்க்கையில் பிள்ளைகளைப் பேணிப் பராமரித்தல்
பாரிலே பெற்றோர் கடன்.
மதுரை பாபாராஜ்
[29/12, 22:19] Madurai Babaraj: நதிகளை இணைத்தால்!
நதிகளை நாட்டில் இணைத்தால் பருவ
நிலைமாற்றம் ஏற்படும், காட்டு விலங்கோ
அலைபாய்ந்தே நாட்டுக்குள் வந்துவிடும் என்ற
கருத்தொன்று இங்கேதான் உண்டு.
மதுரை பாபாராஜ்
[29/12, 22:19] Madurai Babaraj: இது சரியா அஷ்ரப்
[29/12, 23:47] DrAshraffwhatsapp: நதிகளை இணைப்பதால் விளைவுகள் பல உண்டு. ஆனால் அது இப்படி அல்ல
[30/12, 07:11] Madurai Babaraj: நன்றி அஷ்ரப்
[30/12, 07:28] Madurai Babaraj: நண்பர் அஷ்ரப் அவர்களுக்கு வாழ்த்து!
ஆட்களுக் கேற்றவாறு தன்கருத்தைச் சொல்லாமல்
ஊற்றெடுக்கும் உள்ளக் கருத்தினை சொல்கின்ற
ஏற்றமிகு நண்பராம் அஷ்ரப்பை வாழ்த்துகிறேன்!
போற்றி வணங்குகிறேன் நான்.
மதுரை பாபாராஜ்
ஏன்?
எனக்கென்று யாருமில்லை! என்னவென்று சொல்ல?
மனதில் உளைச்சலின் கூத்தாட்டம் வேறு!
எனது நிலைமையோ யாருக்கும் வேண்டாம்!
எனக்கென்று யாருமில்லை யே!
மதுரை பாபாராஜ்
VOVCR:
அன்பு நிறை வணக்கம்
யாருமில்லை!
எனக்கென்று யாருமில்லை! உண்மையாய் உள்ள
நிலைதன்னைக் கண்டறிந்து சொல்ல எவரும்
துணைவர வில்லை! தனிமை நெருப்பில்
இணைந்தே கருகுகின்றேன் நான்.
மதுரை பாபாராஜ்
மாறுமா?
தனியாய் அலைகின்றேன்! எந்தன் நிழலோ
நினைத்தாலும் என்னையோ நாளும் தொடரும்
நிலையின்றி அந்தோ! படுக்கையில் சாய்ந்தாள்!
நிலைமாற வேண்டுமே! என்று?
மதுரை பாபாராஜ்
[25/12, 21:13] VOVSridharMangalore:
I remember Rumi's words...
Before you speak, let your words pass through three gates: Is it true ? Is it necessary ? Is it kind ?
[25/12, 22:01] Madurai Babaraj:
நண்பர் சிரிதர் அனுப்பியதற்புக் கவிதை:
ரூமியின் அறவுரை!
யோசித்துப் பேசுங்கள்! நல்லது!கேளுங்கள்!
பேசுகின்ற செய்திகள் உண்மையா தேவையா?
மாசற்ற அன்புடைய சொற்களா என்றேதான்
கேள்வியைச் சிந்தித்துப் பேசுங்கள் நல்லது!
ரூமி அறவுரை கேள்.
மதுரை பாபாராஜ்
குற்றமென்ன செய்தார்?
பெற்றோர் சினந்தே ஒருவர்க் கொருவரிங்கே
எப்போதும் சச்சரவில் வாழ்ந்தால்
குழந்தைகள்
பெற்றோர் முகம்பார்த்து வாழ இயலுமா?
குற்றமென்ன செய்தாரோ கூறு.?
மதுரை பாபாராஜ்
மன அமைதி!
PEACE OF MIND!
அழகும் ஒளியும்
Beauty and light
தன்னகம் கொண்டாலும்
Though it is within
விண்மீனின் பெருமை
Pride of Stars is there
வானில் இருந்தாலே
If they are in the sky!
செம்மையும் மனமும்
Refinement and.mind
கொண்டது என் சிகப்பு ரோஜா
Have my Red rose
அதன்பெருமை
Its pride is
மங்கையின் கூந்தலிலே
In the Damsel plait
வண்டுகள் புவியில்
Bees in the world
சுற்றி வலம்வந்தாலும்
Though they fly around
தேன்சிந்தும் மலரிலேதான்
It is in the nectar oriented flower!
மகிழ்ச்சி
Happiness!
நிலவு மங்கை நீங்கா
Moon like Damsel
ஒளிசிந்தினாலும்
Spills the light
தன் சுற்றத்துடன்
If they are with their kith and kin
வானுலகில்தான் மகிழ்வு
In the sky only they are happy!
அடைந்து புன்னகையை
They spread the smile
இதழ்க்கடையில் விரிக்கிறது
In their lips
எத்தனை செல்வங்கள்
How many Riches
உலகின் எந்த
In this world happens
மூலையில் சிதறிக்
To scatter in the corners
கிடந்தாலும் மங்கை
The Damsel
என் மனஅமைதி
My peace of mind
தலைவனின் மலரடியில்தான்
Is under the flower like feet of my HUSBAND!
வசந்தா பாபாராஜ்
முத்துசுப்பு தேவகி இணையருக்கு
பிள்ளைகளாய்
அக்காலம் ஐந்தில் சிறுமியாய்க் கல்யாணி
இத்தரணி விட்டே மறைந்தாளாம்!
நான்காக
பிள்ளைகள் வாழ்ந்தோம் வளர்ந்து.
மதுரைமில் பென்னர் நிறுவனத்தில் வேலை!
நடுத்தரமான வாழ்க்கை! எளிமையாய் வாழ்ந்தோம்!
படித்தோம் வளர்ந்தோம் படிப்படி யாக!
விரிந்தது ஆல்போல் படர்ந்து.
இலக்குமி பாபாராஜ் ராஜபாக்யம்
மற்றும்
கடைக்குட்டி யாக கஜராஜாய் நால்வர்
நடைபோட்டுப் பக்குவ மாக வளர்ந்தோம்!
கடமைகள் செய்துவிட்டார் பெற்றோர் உவந்து.
பருவத்தில் இல்லறமே சான்று.
அந்தந்தக் காலம் விளையாட்டு என்றேதான்
சென்றன! கூடித்தான் பேசிக் கலந்தாலும்
ஒன்றாக வாழ்ந்தோம்! தனியறைகள் இல்லையன்று!
அங்கங்கே உட்கார்ந்து பேசிப் படித்திருந்தோம்!
ஒன்றாய் மகிழ்ந்திருந்த வாழ்வு.
தந்தையும் தாயும் உலகைவிட்டுச் சென்றனர்!
எங்கள் சிறகுகள் எங்களது வாழ்க்கையென்று
இன்று பயணங்கள் வெவ்வேறு திக்குகளில்!
பண்பட்டும் புண்பட்டும் வாழ்கிறோம் இன்றிங்கே!
அன்றாடம் எண்ணுவதே வாழ்வு.
மதுரை பாபாராஜ்
நானறிந்தது சகாயமாதா தெரு. இரு வீடு ஒரு வீடாய் அமைந்து, தேடி வருவோருக்கெல்லாம் அன்னமிட்டு மகிழ்ந்த வீடு. ஞாயிறு வந்தாலே கொண்டாட்டம் தான். நட்பு வட்டாரம் பெரிதாகக் கொண்ட அம்மான்களைப் பார்த்து தான் இன்று வரை எம்மைச் சுற்றிலும் நண்பர் கூட்டம். தேடி வரும் பிரச்சனைகளை அமைதியாக எதிர்கொண்டு வெற்றி பெறும் மனப்பாங்கு - பெரிய மாமா. தேனீ போல் சுறுசுறுப்பாய் இன்று வரை உலகம் சுற்றும் வாலிபனாய் வலம் வரும் - இளைய மாமா. வழிகாட்டிகளாய் .... உயர்கின்றோம் நாங்களும் அடியொற்றி ...
மகிழ்வு தரும் நினைவுகளே என்றென்றும். வருமோ அக்காலம் மீண்டும். சென்றிருந்தேன் அங்கேதான் (சகாய மாதா தெரு) சென்ற வாரம். நின்றிருந்தேன் சிறு நேரம் அங்கே தான். மாறவில்லை வாழ்ந்திருந்த வீட்டின் அடையாளம். அசை போட்டேன் அந்த இல்லத்தின் நினைவுகளை ...
அன்பான சுற்றம்தான் அவிழ்த்து விட்ட நெல்லி மூட்டையாய் சிதறி நிற்கிறது ஏற்றுக்கொண்ட பணிகளின் (பணத் தேவைகளின்) நிமித்தமாய். சந்திப்பதே அரிதாகிறது இக்காலத்தில். இணைப்பது இந்த செல்லிடப்பேசி தான். என்னே காலத்தின் கோலம்.
சரவணன் திண்டுக்கல்
முள்மேல் விழுந்த சேலை!
முள்மேல் விழுந்துவிட்ட பட்டிழைச் சேலையை
மெள்ள எடுக்கவேண்டும்! முள்குத்தக் கூடாது!
எள்ளளவும் சேலை கிழியவும் கூடாது!
இல்லறச் சிக்கலைத் தீர்ப்பதும் இப்படித்தான்!
எப்படியும் தீர்ந்துவிடும் நம்பு.
மதுரை பாபாராஜ்
நீதான்தீர்க்கவேண்டும்!
எத்தகைய சிக்கல்கள் வாழ்விலே வந்தாலும்
அத்தனைச் சிக்கலையும் சந்தித்தே வாழவேண்டும்!
எப்படிப் பட்ட முடிச்சு விழுந்தாலும்
எப்படியோ நீதான் அவிழ்க்கவேண்டும்! யாரிங்கே
உன்கூட நிற்பார்? உரை.
மதுரை பாபாராஜ்
வேதனை!
பட்டதும் போதும்! படுவதும் போதுமே!
எப்படிப் பார்த்தாலும் ஏனிந்த வாழ்க்கையோ!
என்றேதான் நெஞ்சம் பதறித் துடிக்கிறது!
புண்பட்டேன் வேதனையில் நொந்து.
மதுரை பாபாராஜ்