Friday, February 28, 2025

நண்பர் முரளி


 நண்பர் முரளி அனுப்பிய படத்திற்குக் கவிதை!


என்னதான் இப்படிப் பாக்குறே? செல்லமே!

கண்ணைக் கவர மலர்களோ பூத்திருக்கும்

வண்ணமுடன் இன்று விடிந்ததே என்றேதான்

எண்ணமுடன் பார்க்கிறாயோ? சொல்.


மதுரை பாபாராஜ்

Thursday, February 27, 2025

நண்பர் சோம வீரப்பன்


 நண்பர் சோம வீரப்பன் அவர்களின் தொண்டுள்ளம் வாழ்க!


விண்முட்டும் கோபுரம் தண்ணிழலில் மக்களோ
உட்கார அங்கே படர்ந்த மரமொன்று!
கண்கவரும் நீர்த்ததும்பும் நல்ல குளமொன்றும்
பண்பட்ட கோட்டூர் அழகுடன் வெண்தாடி
நண்பர் உலவும் அழகும் அருமைதான்!
பண்பாளர் சோமவீ ரப்பரையே வாழ்த்துவோம்!
தொண்டுள்ளம் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

ராஜ்குமார் -- பிருந்தா


 வெள்ளி விழா மணநாள் 26.02.25


வெள்ளிவிழா மணநாள் 26.02.25


இல்லற இணையர்:

மு.ராஜ்குமார்-- பிருந்தா

மகன்: கோசல் கல்யாண்


இருபத்தைந் தாவ தாண்டிலே வெள்ளி

விழாகாணும் இல்லறத்தில் நல்லறம் கண்டே

சிறப்புடன் வாழ்க! வளமுடன் வாழ்க!

நிறைவுடன் வாழ்கபல் லாண்டு.


வாழ்த்தும் இதயங்கள்

பாபாஜி மாமா

வசந்தா அத்தை

குடும்பத்தார்

Wednesday, February 26, 2025

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


நீங்களோ ஏதேனும் சிந்திக்க வேண்டுமென்றால்
ஏனிங்கே நேர்மறை எண்ணம் சிறக்கவைக்கக்
கூடாது? அந்தநிலை நீங்களோ யாரென்றும்
சாதனை மற்றும் செயல்பாட்டில் எப்படி
நீங்களென்றே காட்டும் உணர்.

மதுரை பாபாராஜ்

ஆர்.பாலகிருஷ்ணன்


 

Tuesday, February 25, 2025

கலைந்தோடும் சூழல்


 

Monday, February 24, 2025

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


உங்களுக்கு என்னென்ன தேவையோ எல்லாமே
உங்களுக் கெட்டுகின்ற தூரத்தில் உள்ளன!
உங்கள் இலக்கும் மகிழ்ச்சி இரண்டுமே!
நன்னெறியைத் தேர்ந்தெடுத்து முன்னேறப் பாருங்கள்!
எல்லாம் வசப்படும் இங்கு.

மதுரை பாபாராஜ்

நண்பர் மொகலீஸ்வரன்


 நண்பர் மொகலீஸ்வரன் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


அலெக்சாண்டர் கொண்டுசென்ற பறவை!


அழகாக தோகை விரித்தாடும் இந்த

மயிலினத்தைப் பார்த்தே அலெக்சாண்டர் அன்று

மயிலைத்தன் நாட்டிற்குக் கொண்டுசென்றார் என்றே

வரலாறு சொல்லும் உணர்.


மதுரை பாபாராஜ்

Sunday, February 23, 2025

சொன்னால் என்னாகும்?

 சொன்னால் என்னாகும்?

சொல்ல முடியவில்லை! மெல்ல முடியவில்லை!

சொல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை!

சொல்வதா? வேண்டாமா? என்றும் தெரியவில்லை!

சொல்லிவிட்டால் என்னாகும்? சொல்.

மதுரை பாபாராஜ்

செயற்கை நுண்ணறிவு


 

Saturday, February 22, 2025

ஊக்கமே பெருந்தன்மை


 

தொல்லை கொடுக்காதே!

 தொல்லையின்றி இரு!

அவரவர் வேலைப் பரபரப்பில் மூழ்கி

அவரவர் காலைப் பொழுதில் இருப்பார்!

எவரான போதும் அறிந்தேதான் சென்றால்

எவருக்கும் தொல்லையில்லை சொல்.


மதுரை பாபாராஜ்


நண்பர் மொகலீஸ்வரன்


 நண்பர் மொகலீஸ்வரன் அனுப்பிய படத்துக்குக் கவிதை!

23.02.25

கோப்பை குளம்பியைத் தந்தேதான் நண்பரோ

காலை வணக்கத்தைக் கூறுகின்றார் வாழ்த்துவோம்!

வாழ்க வளமுடன் தான்.


மதுரை பாபாராஜ்

மகள் திருமதி சுபாரவி


 மகள் சுபாரவி இலங்கைப் பயணத்தில்!

மனவலிமை மற்றும் துணிவிருந்தால் இந்தக்

கனவை நினைவாக்கிப் பார்க்கலாம் இங்கு!

மகளைநான் வாழ்த்துகிறேன் பார்த்து.

மதுரை பாபாராஜ்

இருமொழி போதும்!


 

நண்பர் சீனி வரதராஜன் அனுப்பியது


 நண்பர் சீனிவரதராஜன் அனுப்பிய படம்:

காஷ்மீர் சுற்றுலா!

பனிமலை ஊரில் குளிராடை தன்னை

அணிந்தேதான் பாபா வசந்தா சிரிக்கும்

இணையர் ஒளிப்படம் நன்று.

மதுரை பாபாராஜ்

Friday, February 21, 2025

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


மனதை அமைதிப் படுத்தி மகிழ்ச்சி
கலந்து செயல்களைச் செய்யும் வகைகள்
அகத்திலே முக்கிய மாகும்! இயற்கை
நமக்குள்ளே மற்றுமிங்கே நண்பர்கள் என்றே
சிறந்த விளைவுகளை ஆயிர மான
வழிகளில் வாழலாம் நாம்.

மதுரை பாபாராஜ்

Thursday, February 20, 2025

நண்பர் திரு.பழனிவேல்


 நண்பர் திரு.பழனிவேல் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


கோப்பைக் குளம்பி எனக்கின்று போதாது!

ஏக்க உணர்வை வெளிப்படுத்திப் பார்க்கிறதோ?

கேட்கின்ற மற்றொரு நிற்கின்ற  கோழியோ

கேட்பதைப் பார்க்க அழகு.


மதுரை பாபாராஜ்

உளைச்சல் பெருகும்!


 

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


மற்றவர் வாழ்வில் மகிழ்ச்சி தருவதிலும்
வெற்றி எதுவுமில்லை! மற்றவர் உள்ளத்தில்
உள்ள உணர்வைப் புரிந்துகொண்டு வாழ்வதற்குக்
கற்கவேண்டும்! வாழ்க்கைப் பயணத்தின் தேவையாகும்!
மற்றவரின் பூவும் அழகு.

மதுரை பாபாராஜ்

Wednesday, February 19, 2025

நொந்தேன்!

 நொந்தேன்!


கடன்வாங்கி வாழ்ந்தேன்! தலைநிமிர்ந்து வாழ்ந்தேன்!

கடனின்றி வாழ்ந்தும் தலைகுனிந்து வாழும்

நடைமுறை வாழ்வில் இறுதிப் பகுதி!

அகத்திலே வாட்டம் முகத்தில் தெரிய

அவமானந் தன்னில் குமுறிக் குமுறி

புவியிலே வாழ்கிறேன் நொந்து.


மதுரை பாபாராஜ்

சினம்

 சினம்!

சினத்தின் சிகரத்தில் ஆளும் பதற்றம்

கணைபோல சொற்களோ தாறுமாறாய்ப் பாய

அணையுடைத்த வெள்ளம்போல் ஆணவத்தின் கூத்து

அரங்கேற மட்டு மரியாதை எல்லாம்

பறந்திருக்கும் அங்கே! வயதும் பொருட்டோ?

சிறகிழந்தே கைபிசைவார் கேட்டு.


மதுரை பாபாராஜ்

ஏக்கமேதான் வாழ்வா


 

CR -- BALA



 CR -- BALA!


வள்ளுவத்தின் தூதர்கள்!

வள்ளுவர் பின்னணியில் வள்ளுவத்தை ஆய்ந்தளிக்கும்

வள்ளுவத் தூதர்கள் முன்னணியில் புன்னகை

கள்ளமின்றி பூத்திருக்கப் பார்த்தே ரசிக்கின்றோம்!

தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.

மதுரை பாபாராஜ்

Tuesday, February 18, 2025

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


இன்று தொடங்கிடும் உங்கள் மகிழ்ச்சிதான்!
இந்தத் தருணத்தை நன்கு அனுபவிப்போம்!
நிற்கட்டும் நாளும் நினைவில் மதிப்புடன்!
மற்றவரைப் புன்னகைக்க வைக்கப் பயன்படுத்தி
இந்தக் கணத்தை மகிழ்ச்சி நிறைந்திருக்கும்
பண்படுத்தும் வாழ்வாக மாற்று

மதுரை பாபாராஜ்

நண்பர் முரளி


 நண்பர் முரளி அனுப்பிய படத்திற்குக் கவிதை!


மலையழகுப் பின்னணி தன்னில் சிறிய

அழகான ஓட்டுவீடு முன்னணியில் கட்டி

அழகழகாய் அங்கே படியமைத்தே புல்லால்

வெளியமைத்து வாழ்வதை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

சி ஆர் பாலா வருகை



 

CR BALA VISIT





 குறள்நெறிக் குரிசில் சி ஆர்

இயல்விருதாளர் பாலா

எங்கள் வீட்டிற்கு வருகைதந்தார்!

நாள் 18.02.25

குறள்நெறி போற்றும் குரிசில்ரா ஜேந்ரன்

இயல்விரு தாளர் கவிஞர்பா லாவும்

அகம்மலர எங்களது உள்ளம் மகிழ

அகத்திற்கு வந்தனர் பேசி மகிழ்ந்தோம்!

எனது மனைவி உடல்நலம் கேட்டார்!

மனதிற் கிதமாக ஆறுதல் சொன்னார்!

வணங்கி மகிழ்ந்தோம் திளைத்து.

மதுரை பாபாராஜ்

Sunday, February 16, 2025

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


கனவுகளில் வாழ்ந்து நிகழ்காலந் தன்னை
மறந்தேதான் வாழாதே! வாழ்வதற்கே! வாழ்க்கை!
நிகழ்கால வாழ்வில் மகிழ்ச்சியாய் வாழ்க!
தடுமாற்றம் இன்றிவாழ்க இங்கு.

மதுரை பாபாராஜ்

தங்கம் விலையோ பொருட்டல்ல


 

ஐயா துரைசாமி திருவாசகம்


 ஐயா துரைசாமி திருவாசகம் அனுப்பிய படத்திற்குக் கவிதை!

வாழ்க்கையில் ஒவ்வொரு சூழ்நிலையும் என்றென்றும்

வாழ்வில் நிரந்தர மல்ல! எனவேநீ

சூழ்நிலை நன்றாய் இருந்தால் மகிழ்ச்சியாய்

ஏற்றே அனுபவி! நன்றாக இல்லையா?

சூழ்ந்திடும் துன்பம் நிரந்தரமே இல்லையென்றும் 

நல்லவை நாடிவரும் வாழ்விலே எப்படியும்

என்றேதான் நம்பவேண்டும் இங்கு.

மதுரை பாபாராஜ்

நண்பர் பழனிவேல்


 நண்பர் திரு.பழனிவேல் அனுப்பிய படத்திற்குக் கவிதை!

புன்னகை சிந்தும் படத்துடன் கோப்பையிலே

அன்பாய்க் குளம்பி கமகமக்க காலையில்

நண்பர் வணக்கத்தைத் தந்தாரே நட்புடனே!

வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.

மதுரை பாபாராஜ்

CR குறளே பேச்சு! குறளே மூச்சு,!


 VOV CR

Co-ordinatoR

குறளே மூச்சு! குறளே பேச்சு!

மூச்சுக்கு மூச்சாக பேச்சுக்குப் பேச்சாக

ஊற்றெடுத்தே ஓடிவரும் செந்தமிழ்த் தேன்குறள்கள்!

ஆற்றலுடன் பேசுகின்ற சொல்லே ருழவராவார்!

போற்றுகின்றேன் வாழ்த்துகிறேன் இங்கு.


மதுரை பாபாராஜ்

Saturday, February 15, 2025

அஞ்சாதே


 

ஆயுதமாற்றம்


 

பார்வையாளர்கள்


 

நிம்மதியாக வாழலாம்


 

தமிழே சொல்வாயா?


 ஐயா,
 இரண்டு பாக்களுமே வெகு அழகாக இருக்கின்றன. இன்றும் பொருத்தம் ஆகின்ற விந்தையை, வெளிச்சத்தில் எடுத்து வைத்து உணரச் செய்யும் தங்களுக்கு இனிய வணக்கம்!

குறிப்பாக , தமிழே! சொல்வாயா? என்ற பாடலில் இருந்து இன்னும் நான் மீளவில்லை. கருத்தும் சந்தமும், எதுகையும் மோனையும் இழுத்து என்னைக் காதலிக்கின்றன.

நிறை வரியில், வளர்தமிழே! என்ற சொல் கற்கண்டாய் இனித்திடக் காண்கிறேன். மயங்கி விட்டேன்.

தங்களின் கவிதைகள், மாணிக்க மலர்கள் அன்றோ?
மகிழ்ச்சி

செ.வ.இராமாநுசன்

Friday, February 14, 2025

செ.வ.இராமாநுசன்



 வணக்கம்! நேற்று 14-02-2025 வெள்ளிக்கிழமை மாலையில் ஆற்றலுக்கும் போற்றுதலுக்கும் உரிய, 'வள்ளுவர் குரல் குடும்ப'ப் பண்பாளரும் 'குறள்மணம்' விருதாளருமான, மாண்புடைப் பாவலர் - மதுரை பாபாராஜ் அவர்களை, அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தேன். அகமிக மகிழ்ந்தோம்.

      இயற்கைக் கனிகளை அன்புடன் வழங்கி மகிழ்ந்தேன். அளவளாவி விட்டு புறப்படும் போது, 'குறள்களுக்கு குறள் வடிவில் விளக்கம்' என்ற புதிய நூல் தனை அடியேனுக்கு வழங்கினார். இந்நூல் அண்மையில் ஐயா அவர்களால் எழுதி வெளியிடப்பெற்ற சிறந்த நூலாகும்.

      தமிழ் அன்னையின் மக்களாகப் பிறந்த நாம் அனைவரும், வலிமையும் வளமும் படைத்தவர்களே! இயன்றவரை பிறமொழிக் கலப்புதனைத் தவிர்ப்போம்! இனிமைமிகு தமிழ்மொழியைச் சுவைப்போம்! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்! வெற்றி நமதே! -

 செ.வ.இராமாநுசன்.


மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா!

தங்களின் அன்பான வரவேற்பும் அண்ணியாருடன் அமர்ந்து பேசியதும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

      தங்கள் வீட்டு பெண்ணாக  உடனிருந்து பார்த்துக் கொள்ளும் பிரியா அவர்களின் உதவிக்கு வாழ்த்துகள்!

      வணக்கம் ஐயா!

செ வ இராமாநுசம்

14.02.25


நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


நீங்கள் முடியுமென்று நம்பினால் செய்யலாம்!
ஊசலாடிச் சோர்ந்துவிடும் உள்ளத்தைக் கொண்டுவிட்டால்
ஈடற்ற தன்முயற்சி கொண்டால் முடிக்கலாம்!
நாளும் கவனமுடன் நீங்கள் செயல்பட்டால்
சாதித்து வாழலாம் சாற்று.

மதுரை பாபாராஜ்

Thursday, February 13, 2025

நண்பர் BSNL இராமசாமி


 நண்பர் BSNL இராமசாமி அவர்களுக்கு வாழ்த்து!

சின்னவீடு! வீட்டுக்கு முன்னால் மரக்கிளையில்

சின்னப் பறவை இரண்டோ அழகாக

உட்கார்ந்து பார்த்திருக்க வண்ணத்துப் பூச்சியோ

பற்றுடன் அங்கே பறக்க வணக்கத்தை

நண்பர் இராமசாமி இங்கே அனுப்பினார்!

தந்தவரை வாழ்த்துகிறேன் நான்.

மதுரை பாபாராஜ்

[14/02, 11:04] vovRamasamy: 

பாரதி கூடு விட்டுப் பாய்ந்தாரோ பாபாராஜ் ஐயாவுக்குள்! அருமை ஐயா.

🙂👍🙏

[14/02, 11:12] Madurai Babaraj: 

பாரதி மலை!

பாபாராஜ் மடு!

அம்மா நினைவுநாள்


 அம்மா தெய்வத்திருமதி தேவகி முத்து சுப்பு நினைவு நாள்!


நாள்:14.02.25

 

இயற்கை எய்திய ஆண்டு:1984


அம்மா! எனநான் கனிவுடன் யாரைநான்

இங்கழைப்பேன்? இந்த உலகைவிட்டே சென்றேதான் 

இன்றுடன் நாற்பதாண்டு சென்றதே! உங்களை

என்றுகாண்பேன்? வாழ்விலே உங்களுடன்  வாழ்ந்திருந்த 

எண்ணற்ற காட்சிகள் உள்ளத்தில் ஓடுதம்மா!

அந்த நினைவுடனே நான்.


எல்லாம் இருக்கிறது! எல்லோரும் இருக்கின்றோம்!

ஆனால் நீ? இல்லையே எங்களுடன்!

காலக் கொடுமை!


என்றும் உங்கள் நினைவுடன்

பாபாராஜ்-- வசந்தா

மற்றும் குடும்பத்தார்


நண்பர் தீத்தாரப்பன்



 தென்காசி திருவள்ளுவர் மன்றத்தின் செயலாளர் நண்பர் தீத்தாரப்பன் அவர்களுக்கு வாழ்த்து!


தென்காசி வள்ளுவர் மன்றச் செயலாளர்

நண்பராம் தீத்தாரப் பன்னென்ற நல்லவர்

பண்பார்ந்த மன்றச் செயல்பாட்டை வாழ்த்துகிறேன்!

தன்கருத்தை ஆணித் தரமாகச் சொல்பவராம்!

அன்பர் திருக்குறளை மேற்கோள் தருவதில்

வல்லவராம்! வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

நண்பர் கணியனார்



 நண்பர் தென்காசி கணியன் கிருஷ்ணனுக்கு வாழ்த்து!

ஒலிவாங்கி முன்னால் அமர்ந்தே கிருஷ்ணன்

தெளிவாகப் பேசும் இலக்கியப் பேச்சை

ரசித்திருப்போம் மெய்மறந்து தான்.

மதுரை பாபாராஜ்

மனிதத்தேனீ பாடல்


 மனிதத்தேனீ பாடல் அ முதல் ஔ நிறைவாக!

பண்பாளர் இரா.சொக்கலிங்கம் அவர்களுக்கு:

அன்பால் அணைப்பவர் மனிதத் தேனீ

ஆற்றல் படைத்தவர் மனிதத் தேனீ

இரக்கம் உள்ளவர் மனிதத் தேனீ

ஈகை நிறைந்தவர் மனிதத் தேனீ

உழைப்பால் உயர்பவர் மனிதத் தேனீ

ஊக்கம் கொடுப்பவர் மனிதத் தேனீ

எளிமையின் சின்னம் மனிதத் தேனீ

ஏணியைப் போன்றவர் மனிதத் தேனீ

ஐயந் திரிபரக் கற்றவர் மனிதத் தேனீ

ஒற்றுமை போற்றுவார் மனிதத் தேனீ

ஓங்குபுகழ் கொண்டவர் மனிதத் தேனீ

ஔவைத் தமிழை வளர்ப்பவர் மனிதத் தேனீ

பல்லாண்டு பல்லாண்டு வாழ்க!


என்றும் நன்றியுடன் 

மதுரை பாபாராஜ்


மனிதத்தேனீ பாடல் அ முதல் ஔ நிறைவாக!


பிறந்தநாள் வாழ்த்து!

அகவைத்திருநாள்

13.02.25


அன்பால் அணைப்பவர் மனிதத் தேனீ!

ஆற்றல் படைத்தவர் மனிதத் தேனீ

இரக்கம் உள்ளவர் மனிதத் தேனீ

ஈகை நிறைந்தவர் மனிதத் தேனீ

உழைப்பால் உயர்பவர் மனிதத் தேனீ

ஊக்கம் கொடுப்பவர் மனிதத் தேனீ

எளிமையின் சின்னம் மனிதத் தேனீ

ஏணியைப் போன்றவர் மனிதத் தேனீ

ஐயந் திரிபரக் கற்றவராம்

ஐந்தும்தெரிந்த வல்லவராம்

ஒற்றுமை போற்றும் நல்லவராம்

ஓங்கு புகழைக் கொண்டவராம் 

ஔவைத் தமிழை வளர்ப்பவராம் 

பல்லாண்டு பல்லாண்டு வாழ்க!வாழ்க!

பைந்தமிழ் போல வாழ்க! வாழ்க!

என்றும் நன்றியுடன் 

மதுரை பாபாராஜ்


Wednesday, February 12, 2025

தீவுகள்


 

பாவமும்! கோவமும்!

 பாவமும்! கோவமும்!

ஒருநேரம் பார்த்தாலோ பாவமாக பார்ப்போம்!

ஒரநேரம் பார்த்தாலோ கோவமாக பார்ப்போம்!

இரண்டு வகையாக பார்க்கவைத்துப் பார்க்கும்

இருநிலைச் சூழலைப் பார்.

மதுரை பாபாராஜ்

ஒழுக்கமற்ற முடிவு


 

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


உங்களது சிந்தனைப் போக்கில் நடக்கவில்லை
என்றே கவலைப் படவேண்டாம்! உங்களது
சிந்தனைப் போக்கு சரியாய் இருந்தாலும்
இங்கே செயல்கள் சறுக்கலாம்! உள்ளதை
உள்ளவாறு ஏற்றுமுன் னேறு.

மதுரை பாபாராஜ்