Wednesday, April 30, 2025
Tuesday, April 29, 2025
கணைபட்ட வேழம்
கணைபட்ட வேழம்!
மனதில் உளைச்சல் உடலிலே சோர்வு
மனமும் உடலுமே மாறிமாறி நாளும்
இணைந்தே துயரத்தில் ஆழ்த்தும் நிலைதான்!
கணைபட்ட வேழமாக நான்.
மதுரை பாபாராஜ்
Monday, April 28, 2025
Sunday, April 27, 2025
வசந்தா கவிதை
https://vettaigalhinna.blogspot.com/2025/04/blog-post_579.html
Oh beautiful statue of Nature!
Happy rendered rich philanthropist!
Buds surrounded Bees in my bed like mind my unfaded hero!
My mind always withering in your memory!
Whenever I think happiness grows
Telling the meaning of love
Inculcate the intelligence
Any art becomes best
Learn with fame
Your fame in all directions
To spread this poor being
Mind like that your
Shadow always
On this slave !
Rain of love fall without removal
That is what I desire
Life happiness!
For that to know the king
Mindset
I also like that
Today I want to get wholesome
I became nectar drank Bee
Standing staggering
Under the shadow of my beloved!
வசந்தா பாபாராஜ்
காகமும் பனம்பழமும்
காகமும் பனம்பழமும்!
காகமோ உட்கார அங்கே பனம்பழம்
வீழ்ந்ததைப் போலத்தான் நம்முடைய வேண்டுதல்
காலம் கனிந்ததும் கைகூடும்! வாழ்க்கையில்
தாழ்வு மனப்போக்கை நீக்கு.
மதுரை பாபாராஜ்
பாவா முத்துவீரன் நினைவுநாள்
பாவா முத்துவீரன் அவர்களின் நினைவுநாள்!
நினைவேந்தல்: 28.04.
ஓவியத்தை பாவா வரைந்திடுவார்! நானளிக்கும்
பாவியத்தை நன்கு எழுதிடுவார் அங்கொரு
காவியம் தோன்றிடும்! வாழ்த்து மணங்கமழும்!
பாவா அளித்தநல்ல ஊக்கமும் உற்சாகத்
தூண்டலும் ஆர்வத்தின் வித்து
அவரில்லை என்ற துயரிருந்த போதும்
அவரின் குடும்பமோ அக்காவின் தூண்டல்
துலங்கலால் நான்கு மகன்களும் தங்கள்
குடும்பத்தார் சூழ அறநெறி வாழ்வில்
வளமுடன் வாழ்கின்றார்! வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்
கலங்கி நின்ற எங்களுக்கு கட்டுமரமாய், கலங்கரை விளக்காய் நாங்களிருக்கிறோம் என்றே வழி நடத்தி வாழ்வில் வளம் பெறச் செய்த எம் அம்மான்களின் பாதம் பணிகிறோம் என்றும் நன்றியுடன்.🙏🙏
மு.சரவணப்பெருமாள்
திண்டுக்கல்
Saturday, April 26, 2025
Friday, April 25, 2025
Thursday, April 24, 2025
Wednesday, April 23, 2025
காமராஜ் IAS வாழ்த்து
Thamizhiyalan:"நான் முதல்வன்" திட்டத்தினைத் தொடங்கி மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி வரும்
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும்
தமிழக அரசுக்கும்
உளமார்ந்த நன்றி....
-------------------------------------------------------------------
நல்வாழ்த்துகள் காமராஜ்....
தம்பி என்னிடத்தில்
தமிழ் விருப்பப் பாடம்படித்தார்
என்பது மட்டுமல்ல
அனைத்துத் தேர்வுகளையும்
தமிழ் வழியில் எழுதி வெற்றியடைந்திருக்கிறார்
என்பதும் சிறப்பான செய்தியாகும்...
மேலும்...
எங்களது பெருமைக்குரிய அடையாளமான...
"மாற்றுத்திறனாளிகள்" பிரிவைச் சேர்ந்தவர் என்பதில்
பெரு மகிழ்ச்சியும்
மன நிறைவும்
-தமிழ் இயலன்-
I AM AN IAS Academy
மாற்றுத் திறனாளி ஆனாலும் கல்வியில்
ஆற்றலைக் காட்டியே வென்றவரை வாழ்த்துவோம்!
வாய்ப்புகளைத் தந்தால் சிகரமும் தொட்டுவிடும்
தூரந்தான் என்பதைச் சொல்.
மதுரை பாபாராஜ்
Tuesday, April 22, 2025
திருப்தியாக வாழப்பழகு!
திருப்தியாக வாழப்பழகு!
இருக்கும் குடும்ப அமைப்பில் மகிழ்ச்சி
பெருக்கெடுக்க வாழ்வதே வாழ்க்கை உலகில்!
திருப்தியாக வாழ்வது நம்மனப் போக்கே!
திருப்தியாக வாழப் பழகு.
மதுரை பாபாராஜ்
பேச்சுக்கலை
பேச்சுக்கலை!
பெரியோ ரிடத்திலே பேசும் முறையும்
சரிசம நண்பரிடம் பேசும் முறையும்
சிறியவர்க ளோடிங்கே பேசும் முறையும்
அறியாதோர் பார்த்தேதான் பேசும் முறையும்
தெரிந்தேதான் பேசினால் கூடும் மதிப்பு!
தெரியவில்லை என்றால் விலகித்தான் செல்வார்!
தெரிந்துகொண்டு பேசுவது நன்று.
மதுரை பாபாராஜ்
Monday, April 21, 2025
படர்கின்ற நச்சுவேர்
படர்கின்ற நச்சுவேர்!
பணத்தைக் கொடுத்துப் பணியை முடிக்கும்
மனப்போக்கு மக்களிடம் உள்ளவரை ஊழல்
வகைகள் அலையலையாய்த் தோன்றும்! நிலைக்கும்!
படர்கின்ற நச்சுவேர்தான் பார்.
மதுரை பாபாராஜ்
Certainly! Here's the chatGPT English translation
Spreading Poisonous Roots!
As long as there are people
with the mindset to pay money
to get their work done,
corruption
will keep emerging in countless forms — endlessly!
It will persist!
Look — it’s a poisonous root that spreads deep and wide.
— Madurai Babaraj
Let me know if you'd like a more poetic or interpretive version too.
பெற்றோரே உரைகல்!
பெற்றோரே உரைகல்!
பெற்றோர் இருந்தால் உறவினர் சூழ்ந்திருப்பார்!
பெற்றோர் மறைந்தால் உறவும்
விலகிவிடும்!
பெற்றோர் வாழ்க்கைச் சக்கரத்தின் அச்சாணி!
பெற்றோரை வைத்தே மதிப்பு.
மதுரை பாபாராஜ்
Sunday, April 20, 2025
ஒருசிறகு
ஒருசிறகு!
இரண்டு சிறகுகளும் சேர்ந்தியங்கி னால்தான்
உயரத்தில் செல்ல முடியும்! மனமே!
இரண்டு சிறகு பெயருக்குத் தானே!
ஒருசிறகோ தத்தளிக்க மற்ற சிறகோ
விரிந்தாலும் என்செய்வேன் நான்?
மதுரை பாபாராஜ்
Saturday, April 19, 2025
தம்பி கெஜராஜ் படம் 100
தம்பி கெஜராஜ் நடிக்கும் நூறாவது படம்!
RETRO! வெற்றிபெற வாழ்த்து!
கதாநாயகன் நடிகர் சூர்யா!
இயக்குநர் G. கார்த்திக் சுப்புராஜ்!
இசையைமைப்பாளர்
சந்தோஷ் நாராயணன்
மற்றும் குழுவினர்!
மகனின் இயக்கத்தில் தந்தைக்கு நூறா
வதுபடம் ரெட்ரோ வருகிறது மேயில்!
எடுப்பான தோற்றமுள்ள தம்பி நடிப்பும்
விறுவிறு சூரியாவின் ஆற்றல் மிளிரும்
சுறுசுறுப் பான நடிப்பும் குழுவின்
முழுமையான ஒத்துழைப்பும் சேர்ந்தேதான் வெற்றிப்
படமாகும் என்றேதான் வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
Friday, April 18, 2025
இமயவரம்பன் கவியரங்கம்.
நண்பர் இமயவரம்பன் அவர்களும் அவருடைய தமக்கையும் திருச்சியில் கவியரங்கம் பாடுகின்றனர்!
வாழ்த்துகிறேன்!
நாள்: 20.04.25 ஞாயிறு
காவிரி பாயும் திருச்சி நகரிலே
பாவரங்கில் பாடும் இமயமும் அக்காவும்
ஆவலுடன் செந்தமிழ்ச் சொல்லால் கவிதொடுக்கும்
ஆர்வத்தை வாழ்த்துகிறேன் இங்கு.
மதுரை பாபாராஜ்
Thursday, April 17, 2025
Wednesday, April 16, 2025
நண்பர் திருமலை. அவர்களுக்கு வாழ்த்து!
நண்பர் திருமலை அவர்களுக்கு வாழ்த்து!
நேர்த்தியாக நாள்தோறும் நேர்மறை எண்ணத்தை
வாழ்வியல் செய்தியாகத் தந்துவரும் தொண்டினை
ஆர்வமுடன் செய்துவரும் நண்பர் திருமலை
வாழ்க தமிழ்போல் வளர்ந்து
மதுரை பாபாராஜ்
Monday, April 14, 2025
Sunday, April 13, 2025
Saturday, April 12, 2025
புலவர் வரதராசன் நூற்றாண்டு விழா!
புலவர் வரதராசன் நூற்றாண்டு விழா!
வாழ்த்துப்பா!
நூற்றாண்டைக் காணும் புலவர் வரதராசன்
ஆற்றிய நற்றமிழ்த் தொண்டுகள் ஏராளம்!
ஊற்றெடுத்த தொண்டுகளைச் சீராட்டிப் பாராட்டிப்
போற்றினர் பல்விருதை நம்மரசு தொட்டேதான்!
நாட்டினார் கல்லைத் தமிழ்ச்சங்கம் சார்பாக
ஆக்கபூர்வத் தோடு குறள்மணம் என்கின்ற
பாவிருதை ஆண்டுதோறும் தந்தே மகிழ்கின்றார்!
வாழ்த்தி வணங்குவோம் ஐயா வரதராசன்
வாழ்கவென்றே பாடுவோம் சூழ்ந்து.
குறள்மண விருதாளர்
மதுரை பாபாராஜ்
புதுக்கணக்கு
புதுக்கணக்கு!
வாழ்க வளர்ந்து!
இத்தனை நாள்செய்த முத்திரைச் சாதனைக்குச்
சித்திரை மாத முதல்நாள் புதுக்கணக்கை
வெற்றியுடன் இங்கே தொடங்குகின்றார் வாழ்த்துகிறோம்!
நற்றமிழ்போல் வாழ்க வளர்ந்து.
மதுரை பாபாராஜ்
Friday, April 11, 2025
Wednesday, April 09, 2025
சேற்றிலே சிக்கிய யானை!
சேற்றிலே சிக்கிய யானை !
யாரையும் நானோ வதைத்ததில்லை! என்னைத்தான்
யார்யாரோ இங்கே வதைக்கின்றார்! அச்சாணி
தூர்ந்துவிட்ட தேரானேன்! சேற்றிலே சிக்கிய
யானையாய் தத்தளிக்கும் என்னையோ சுற்றித்தான்
தாக்குகின்றார் யார்யாரோ தான்.
மதுரை பாபாராஜ்
ஆயிரம் தேள்கள்
உள்ளத்தில் ஆயிரம்தேள்கள்!
THOUSANDS OF SCORPIONS GNAWING AT MY HEART!
SHAKESPEARE
நானாடா விட்டாலும் என்தசை ஆடுதே!
ஏனோ தெரியவில்லை உள்ளம் உளைச்சலில்
ஆயிரம் தேள்களோ ஊறித் திளைப்பதுபோல்
பாடாய்ப் படுத்துதே பார்.
மதுரை பாபாராஜ்

















































